பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 19 டிசம்பர், 2012

நவதிருப்பதி - தலம் 3

திருப்புளியங்குடி (புதன்) :

திருவனகுனமங்கையில் இருந்து அதே பக்கம் கிழக்கு திசையில் அரை கிலோ மீட்டரில் இருக்கு இந்த கோவில்.பஸ் வசதி இருக்கு.

தல வரலாறு :

ஒரு சமயம் திருமால் லக்ஷ்மி தேவியோட இந்த நதி கரையில தனியா இருந்த பொழுது பூமாதேவிக்கு தன்னை ஒதுக்குறாங்களோனு கோவம் வந்து பாதாளலோகம் போக உடனே பூமி இருட்டிபோச்சாம் ,வரண்டுபோச்சாம் .இதபாத்து தேவர்கள் எல்லாரும் திருமாலை வேண்ட அவரும் லக்ஷ்மி தேவியோட பாதளலோகம் போய் ரெண்டுபேரும் சமம் தான்னு ச்வொல்லி சமாதானம் பண்ணி பூமிய காப்பாதினாராம் .பூமி தேவியை சமாதானம் பண்ணி போமிய காபாதினதால 'பூமிபாலகர்' அப்படிங்குற பேரும் வந்துச்சாம் . 
 
இமயமலையில மானுருவத்துல ரிஷியும்,ரிஷிபத்தினியும் தனியா இருக்கும் போது அங்க வந்த இந்திரன் மானுருவத்துல இருந்த ரிஷியை தனது வஜ்ராயுதத்தால அடிச்சு வீழ்த்தி பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானாராம்.வியல பகவானோட யோசனைப்படி இந்திரன் வந்து பூமி பாலனை வேண்டி இந்த தீர்த்தத்துல குளிக்க தோஷம் போயிடுச்சாம்.
இங்க பெருமாள் ஆதிசேஷன் மேல 12 அடில பள்ளி கொண்டுள்ளார்.சயனப் பெருமாளின் திருப்பாதத்தை மூலஸ்தனத்தை சுற்றி வரும்போது இருக்குற ஜன்னல் வழியா பாக்கலாம்.பெருமாள் நாபியில் இருந்து ஒரு தாமரைக்கொடி சுவருல பிரம்மன் உக்காந்திருக்குற தாமரையோட சேருது.இவருக்கு எண்ணை காப்பு செய்ய 250 லிட்டர் எண்ணை தேவைப்படுமாம்.லக்ஷ்மி தேவி பூமா தேவி ரெண்டுபேரும் பெரிய உருவங்களா பெருமாளோட திருப்பாதத்து பக்கத்துல உக்காந்து இருக்காங்க.இங்க குழந்தை இல்லாதவங்க வந்து வேண்டினா குழந்த போர்க்கும்னு சொல்றாங்க.

மூலவர்- காய்சினவேந்தன் ,புஜங்கசயனம் .கிழக்கு பார்த்த திருமுக மண்டல்.உற்சவர் - எம் இடர்களைவான் ,தாயார்- மலர்மகள்,திருமகள் .புளியங்குடிவல்லி என்ற உச்த்தவ தாயாரும் உண்டு.தீர்த்தம்-வருணநீருதி தீர்த்தம்,விமானம்-வதசார விமானம்,பிரத்யட்சம் - வர்ணம் நீருதி,தர்மராஜன்.ஆகமம் - வைகநாசம்,சம்பிரதாயம்-தென்கலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக