பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 9 ஜனவரி, 2013

பாடலின் வரிகள் - விழிகளில் ஒரு வானவில் - தெய்வ திருமகள்

படம் : தெய்வ திருமகள்
பாடல்:விழிகளில் ஒரு வானவில் 
பாடியவர்:சைந்தவி
இசை:G .V பிரகாஷ்
எழுதியவர் : நா.முத்துக்குமார்


விழிகளில்  ஒரு  வானவில் 
இமைகளைத் தொட்டுப் பேசுதே 
இது என்ன புது வானிலை 
மழை வெயில் தரும் 
உன்னிடம் பார்க்கிறேன் 
நான் பார்க்கிறேன் 
என் தாய் முகம் அன்பே 
உன்னிடம்  தோற்கிறேன் 

நான் தோற்கிறேன் 
என்னாகுமோ இங்கே 
முதன் முதலாய் மயங்குகிறேன் 
கண்ணாடிப் போலத் தோன்றினாய்
என் முன்பு என்னைக் காட்டினாய் 
கனா எங்கும் வினா 

விழிகளில்  ஒரு  வானவில் 
இமைகளைத் தொட்டுப் பேசுதே 
இது என்ன புது வானிலை 
மழை வெயில் தரும் 

நீ வந்தாய் என் வாழ்விலே 
பூ பூத்தாய் என் வேரிலே 
மாலையே நீ போகலாம் 
என் ஞாபகம் நீ ஆகலாம் 
தேர் சென்றப் பின்னாலே 
வீதி என்னாகுமோ 
யார் இவன் ..யார் இவன் 
ஓர் மாயவன் 
மெய்யானவன் அன்பில் 
யார் இவன் ..யார் இவன் 
நான் நேசிக்கும் கண்ணீர் 
இவன் நெஞ்சில் 
இனம் புரியா உறவிதுவோ ..
என் தேதிப் பூத்த  பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது 
மனம் எங்கும் மனம் 

விழிகளில்  ஒரு  வானவில் 
இமைகளைத் தொட்டுப் பேசுதே 
இது என்ன புது வானிலை 
மழை வெயில் தரும் 

நான் உனக்காக பேசினேன் 
யார் எனக்காக பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன் 
கைகளில் மை பூசினேன் 
நீ வந்தக் கனவெங்கே 
காற்றில் கை வீசினேன் 
அன்பென்னும் தூண்டிலை நீ வீசினால் 
மீன் ஆகிறேன் அன்பே 
உன் முன் தானடா இப்போது நான் 
பெண் ஆகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன் 
நில்லென்று சொன்ன போதிலும் 
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி 
 
விழிகளில்  ஒரு  வானவில் 
இமைகளைத் தொட்டுப் பேசுதே 
இது என்ன புது வானிலை 
மழை வெயில் தரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக