பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

மாற்று திறனாளிகளுக்கு இலவச கல்வி,தொழிற்பயிற்சி ,வேலைவாய்ப்பு !!!!!


வேலூர் பக்கத்துல காட்பாடியில இருக்குற 'ஒர்த்'-ங்குற தன்னார்வ தொண்டு நிறுவனம்,மாற்று திறனாளிகளுக்கு இலவச கல்வி,தொழிற்பயிற்சி ,வேலைவாய்ப்பை இலவசமா கடந்த 49 வருஷங்களா செஞ்சுகிட்டு வராங்களாம்.இங்க ,காது கேக்காத,வாய் பேச முடியாத குழந்தைங்களுக்கான சிறப்பு பள்ளி ,மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்காக பகல் நேர பயிற்சி மையம் அப்படீன்னு ரெண்டு மையம் ஒரே வளாகத்துள நடத்துறாங்களாம்.ஹாஸ்டல் வசதியும் இருக்காம்.

கை,கால் பாதிக்கப்பட்ட மற்றும் காத்து கேக்க முடியாத வாய் பேச முடியாத மாற்று திறனாளிக்கு 'ஒர்த்' தொழிற்பயிற்சி மையம் மூலமா கடைசல்,மின்னனுவியல் போன்ற 2 வருட பயிற்சி இலவசமா தராங்களாம்.12-ம் வகுப்பு முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வருட கணிப்பொறிப் பயிற்சியும் சி.என்.சி இயந்திரம் மூலமா தராங்களாம்.
இந்த நிறுவனத்தோட கிளை சென்னை,திருச்சி,புதுச்சேரியில இருக்காம்.
சென்னை கிளையில பார்வை இல்லாதவங்களுக்கான கணிணிப் பயிற்சியும் குடுக்குறாங்களாம்.பயிற்சியின் முடிவுல 'ஒர்த்' அறக்கட்டளையின் தொழில் நிறுவனங்களிலும் மற்ற நிறுவனங்களிலும் வேலையில சேர வழி செய்றாங்களாம் .
இவங்க செய்ற தொண்டுக்காக தேசிய விருதும் வாங்கி இருக்குக்காங்க.

2 கருத்துகள்: