பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

டீட்டிகாகா ஏரி

தென் அமெரிக்காவின் பெரு மற்றும் பொலிவியா நாட்டோட எல்லைல டீட்டிகாகா-ங்கற அழகான பிரமாண்டமான ஏரி இருக்காம்.தென் அமெரிக்கால இருக்குற முக்கியமான ஏரிகள்ல இதுவும் ஒன்னாம்.இதுல 27 ஆறுகள் வந்து கலக்குதாம்.


கடல் மட்டத்துல இருந்து 3812 மீட்டர் உயரத்துல இந்த ஏரி இருக்குறதால பாக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்குமாம்.இந்த மலையை சுத்தி ஏராளமான பழங்குடியினர் வசிக்குறாங்கலாம் .இவங்க தங்கள எதிரிகிட்ட இருந்து எப்படி காப்பாதிக்குறாங்கலாம் தெரியுமா ?

இந்த ஏரிகளை சுத்தி இருக்குற இடத்துல அடர்ந்து வளரும் நாணல் செடிகள் தான் இவங்களுக்கு தற்காப்பு கவசமா இருக்காம்.

இந்த நாணல்கள வெட்டி உலர வச்சு பக்குவபடுத்தி அழகான குடில்கள செய்ராங்கலாம் .ஒவ்வொரு பத்து குடிலுக்கு கீழையும் நாணல்களாலே கட்டு மரம் மாதிரி ஒரு அமைப்பை செஞ்சு ஏரிகளில் மிதக்க விட்ராங்கலாம் .தூரத்துல இருந்து பாக்குறப்போ ஏரிக்குள்ள அழகான குட்டி தீவு இருக்குற மாதிரி ஒரு அமைப்பு இருக்குமாம்.எதிரிங்க வந்துட்டா படகை எப்படி துடுப்பு மூலமா இயக்குறோம் அதே போல இந்த குடிலையும் இயக்கி அங்க இருந்து தப்பிச்சிடுவாங்கலாம் .

ஆரம்ப காலத்துல வெறும் நாணலை மட்டும் பயன் படுத்தின இவங்க இப்போ தெர்மாகோல் மாதிரி மத்த பொருளை எல்லாம் பயன்படுதுறாங்கலாம்.

நாணல் புதருல இருந்து அயோடின் தயாரிச்சு அத விக்குறாங்கலாம்.இதுல இருக்குற பூக்கள பக்குவபடுத்தி பானங்கள் தயாரிக்குறாங்கலாம் ,மருந்து பொருளாவும் இத பயன் படுத்துறாங்கலாம்.

சமீபகாலமா இங்க சூரிய சத்தியில் மின்சாரம் தயாரிக்குற தகடுகளை பாக்க முடியுதாம் .இதன் மூலமா இவங்க டி.வி ,ரேடியோ,விளக்கு போன்ற நவீன வசதிகளையும் பயன்படுதுறாங்கனு சொல்றாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக