பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 4 ஏப்ரல், 2013

கூகிள் -ல் சில products பாத்தேன்.இத  உங்ககிட்ட introduce அப்படியே பண்ணாம ஒரு சின்ன சசீன் மாதிரி சொன்னா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை

போரில் வல்லவரோ இல்லையோ பெண்களை அள்ளிக்கொண்டு வருவதில் வல்லவரான 26-ம் எலி கேசி ,இந்த முறை தான் அ(த)ள்ளி வந்த அண்டை நாட்டு அரசி,இளவரசிகளை எப்படி தன்  வசம் மயங்க வைக்கலாம் என தன் அமைச்சர் இடம் கேட்டதும் அதற்க்கு


அமைச்சர் : மன்னா பெண்களுக்கு எப்பவும் பிடித்த தங்கத்தால் செய்த பதக்கங்களை பரிசாக தந்தால் பதக்கம் எவ்வாறு அவர்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளதோ அதே போல் தாங்களும் அவர்களுக்கு நெருக்கமாக இருப்பீர்கள் ..
மன்னர் : அப்படியா சொல்கிறீர் ...ஆனால் ..ம்......(ஆழ்ந்த சிந்தனையில் மன்னர்)
அமைச்சர் : கவலை வேண்டாம் மன்னா பட்ஜெட் விலையில் கஜானாவை காலி செய்யாத அளவிற்கே வாங்கலாம் மன்னா 
மன்னர் : க.க.க.போ ..
பாராட்டை பெற்ற உற்சாகத்தில் அமைச்சர் மன்னனிடம் எந்த எந்த பதக்கத்தை எந்த அரசி/இளவரசிக்கு வழங்கலாம் என கூறுகிறார்..
ஓவர் டூ அமைச்சர் ......

அமைச்சர் : பூ போன்ற மென்மையான மனதுள்ளவராம் நாம் அள்ளி வந்த ...
மன்னர்       : ம்.....என்ன ......?!!!?
அமைச்சர் : ஸாரி மன்னா ...தாங்கள் அள்ளிவந்த தென்னாட்டு அரசியாம்..அவர்களுக்கு இந்த இலையுடன் கூடிய பூ பதக்கத்தை பரிசாக தரலாம்..





மன்னா தாங்கள்  தூக்கிவந்த அண்டைநாட்டு இளவரசி 'அல்லி மயிலும்  அழகான மயிலும்'
வளர்த்து வந்தார்களாம்.அப்பா அம்மாவை பிரிந்ததை விட அவைகளை பிரிந்த துயரத்தில் தான் அதிகமாம் .அவர்களுக்கு இந்த மயில் பதக்கத்தை தந்து துயரம் தீர்க்கலாம்.

அமைச்சர்  : மன்னா மேலை நாட்டு அரசியை அழைத்து வந்தீரே ..
மன்னர்        : நான் எங்கேயடா அழைத்துவந்தேன் ..அவள் தானடா  என்னை இழுத்துவந்தாள் ..
அமைச்சர்   : சரி ..ஏதோ ஒன்று ..அவர்களுக்கு பாலே நடனம் என்றால் மிகவும் பிடிக்குமாம் .அவர்களுக்கு இந்த பாலே நடன வடிவ மங்கையை பரிசாக தரலாம் ..பொருத்தமாக இருக்கும்..

அமைச்சர்  : மற்றொரு மேலை நாட்டு அரசியை அழைத்து வந்தீரே..அவர் எப்போதும் லேப்டாப் -ம் கையுமாக சாட்டில் தான் இருக்கிறாராம்.அவருக்கு இந்த விண்டோஸ் வடிவ பதக்கத்தை பரிசாக தந்து ஃப்ரண்ட் ரிக்வஸ்ட் குடுக்கலாம்..

வடநாட்டில் இருந்து அழைத்து வந்தீரே அந்த அரசியிடம் 'உன் மனதை பெரிய பூட்டால் பூட்டி வைத்திருக்கிறாய் ..அதை உடைக்க மனமில்லை ..அதற்காகத்தான் இந்த சாவி என்று இந்த சாவி வடிவ பதக்கத்தை பரிசளியுங்கள் ..





மன்னர்        : அருமை ..அருமை அமைச்சரே...அசத்துகிறீர்..ஆமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..
                            என்னை விட அதிகமாக அவர்களை பற்றி தெரிந்து                          வைத்துள்ளீரே ..யாரங்கே ....
அமைச்சர்  : மன்னா..நான் பிள்ளைகுட்டி காரன்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக