பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 18 செப்டம்பர், 2013

பாடலின் வரிகள் - பேருந்தில் நீ எனக்கு - பொறி

படம் :பொறி 
பாடல் : பேருந்தில்  நீ  எனக்கு 
பாடியவர் : மது பாலகிரிஷ்ணன் ,மதுஸ்ரீ 
இசை : தீனா 

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்
ஆள் இல்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே



பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்
பரிட்ச்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழிந்திடும் முதல் மாலை
புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னைகை
அன்பே அன்பே நீதானே
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய் பிறை போல் வரும் நக கனுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
செல் போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப்பொருளும்
அன்பே அன்பே நீதானே
எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்
ஆள் இல்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக