பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 23 செப்டம்பர், 2013

ரொம்ப சோதிக்குறாங்க பாஸ்....

எங்க ஏரியால ஒரு பெண்மணி இருக்காங்க...அவங்க பிச்ச எடுக்குறவங்களும் இல்ல ,வீடு குடும்பம்னு வாழுறவங்களும் இல்ல...ரொம்ப வயசானவங்களும் இல்ல, ரொம்ப இளமையானவங்களும் இல்ல...அவங்கள முழுசா பைத்தியமோனு நினச்சுடவும் முடியாது...கணிக்கவும் முடியாது..

சாப்பாடு கேட்டு வீட்டு கேட்டை தட்டினாங்க ..என் அம்மா கோவமா ஏதும் இல்லமா போ-னு சொல்லி அனுப்பினாங்க..எனக்கு செம கோவம்..பொறுமையா சொல்லாம் இல்ல , பாவம் தானே, ஏன் இப்படி கோவமா சொல்றீங்கனு கோவிச்சுகிட்டேன் ..வேற யாரும் இவங்களுக்கு சாப்பாடு குடுக்கமாட்டாங்க ..சில பல சமயம் தண்ணி கூட தரமாட்டாங்கனு சொன்னாங்க என் அம்மா ..ச்ச ..இப்படி இருக்காங்களே ஜனங்க , கொஞ்சம் கூட மனசே இல்லாமனு முனுமுனுத்துக்கிட்டு இருந்தேன் ..உனக்கு தெரியாது ,பேசாம வாய மூடிக்கிட்டு உன்வேலைய பாருன்னு சொன்னாங்க என் அம்மா ...

இன்னோர் நாள் அதே மாதிரி சாப்பாடு கேட்டு வீட்டு கேட்டை தட்டினாங்க .. அய்யோ பாவம் பசியால இருக்காங்கலேன்னு சாப்பாடு குடுத்து , எப்படி கவுண்ட்டர் வாங்கினேன் தெரியுமா?

- இதுதான் இருக்கா?ஏன் இன்னைக்கு வேற எதுவும் சமைக்கலையா?
  (முகத்தை சுழிச்சுகிட்டு)

என் அம்மாவை திரும்பி பாத்தேன்..பெருசா எங்கிட்ட சத்தம் போட்ட,நல்லா வாங்குன்னு சொல்லிட்டு உள்ள போய்ட்டாங்க..

பாவம்ன்னு நினச்சு பராவாஇல்ல பேசட்டும் , போகட்டும்னு சாப்பாடையும் கொடுத்துட்டு , இப்படி ஒரு ஒரு நாளும் என்ன என்ன கவுண்ட்டர் வாங்கி இருக்கேன் தெரியுமா?

- சாதம் சூடா இல்லையா?

-இட்லிக்கு தொட்டுக்க ஏதும் இல்லையா?

-அப்பா...இவ்வளவு காரத்தையா போடுவீங்க...எப்படித்தான் சாப்புடுறீங்களோ ?

-கத்தரிக்கா கொழம்பா ?எனக்கு பிடிக்காதே....சொல்லிட்டு ஊத்தி இருக்கலாம் இல்ல சாப்பாட்டுல...

சில சமயம் ஏதும் இல்லைனா/இல்ல சாப்பிட்டு முடிச்சுருந்தோம்னா ,இல்லைன்னு அவங்க கிட்ட சொன்னா..

- ஏன் இன்னைக்கு ஏதும் சமைக்கலையா?சமைக்காம என்னதான் பண்ணுவீங்களோ அப்படி?!?

-ஏன் தண்ணி பாட்டில்ல தான் குடுப்பீங்களா ?சொம்புல குடுத்தா என்ன?ஏன் உங்க வீட்ல சொம்பே இல்லையா?

வடிவேல் சார் டயலாக் மாதிரி ,இந்த அவமானம் உனக்கு தேவையான்னு என்ன நானே கேட்டுக்குறேன் ..


என்ன கொடுமைங்க இது... இதுமாதிரி பேசினா எப்படிங்க செய்ய மனசுவரும்...

ஒரு நாள் கோவம் வந்து நாங்களும் இந்த பாட்டில்ல தான் தண்ணிகுடிக்குறோம் , உங்களுக்கு குடுக்குறதுக்கு எனக்கு இதுலாம் தேவைதான்னு சத்தமே போட்டேன்..

ரொம்ப சோதிக்குறாங்க பாஸ்....

3 கருத்துகள்:

  1. பெயரில்லா24 செப்டம்பர், 2013

    vidhya ippa theriyutha anubava arivae siranthathuinnu??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க யாருன்னு எனக்கு தெரியல..தயவு செஞ்சு login பண்ணி comments அனுப்புங்க..இத நான் publish பண்ணினத்துக்கு காரணம் இருக்கு...உங்க comment எனக்கு புரியல..இதுல என்ன அனுபவ அறிவு இருக்கு?அனுபவ அறிவுக்கும் இந்த போஸ்ட்டுக்கும் என்ன சம்மந்தம்?.Oh ..என் அம்மா கோவமா அவங்கள போக சொன்னாங்கனு சொன்னதுக்கா? கோவமா அவங்க சொன்னாலும் இன்னைக்கு வரைக்கும் அந்த லேடி வந்து எதாவது கேட்டா குடுத்துகிட்டே தான் இருக்காங்க அவங்களும்....திட்டு வாங்கிகிட்டே தான் இருக்காங்க...அனுபவம் கத்துக்குடுத்தா ,அப்போ அதோட STOP பண்ணி இருக்கணும் ..சும்மா நச்சு நச்சுன்னு ரெண்டுபக்கமும் இருக்க கூடாது...நான் கடைசியா அந்த லேடி கிட்ட சத்தம் போட்டதோட அந்த லேடி வந்தாலே என் அம்மாகிட்ட உங்க 'நெருங்கின சொந்தம்' கூப்பிட்ராங்கனு சொல்லிட்டு போய்டுவேன்.

      நீக்கு
  2. பிரச்னை அவரின் மனநிலை என்று நினைக்கிறேன்.யாரும் இல்லாததால் உணவளிப்பவர் மிகுந்த சொந்தம் என தனக்கு தானே ஏமாற்றிக் கொண்டு நிகழ் உலகிற்கு வர மறுப்பவர்கள்.அது அவர்கள் பிழையும் இல்லை.யாரும் கண்டுகொள்வதில்லை கண்டுகொள்பவரின் அன்பை அவர்கள் தெரிந்த முறையில் நிலைபடுதிகொள்ள என்ன என்னமோ உத்திகள் செய்கிறார்கள்.. பாவம் விட்டுவிடுங்கள் அவர்களை.. யாரும் இல்லை என்றால் மனநிலை பிறழ்ந்தே காணப்பெருவார்கள் என்று நினைக்கிறன். ரொம்ப யோசித்துவிட்டேன்...

    பதிலளிநீக்கு