பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 5 செப்டம்பர், 2013

பாடலின் வரிகள் - யார் இந்த சாலையோரம் - தலைவா

படம் :  தலைவா 
பாடல் :  யார் இந்த சாலையோரம்
பாடியவர்கள் :  G .V பிரகாஷ்,சைந்தவி 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் 
இசை:    G .V பிரகாஷ்
யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் நான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் தூரானது வானிலே



யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில்
தள்ளி நிற்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று
கண்டு கொள்ளலாம்
என்னாகிறேன் என்று எதாகிறேன்
எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையில் விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில்
புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
என் பாதையில் இன்று உன்காலடி
நேற்று நான் பார்ப்பதும்
இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் நான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் தூரானது வானிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக