பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 25 டிசம்பர், 2013

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


இந்த கிறிஸ்தமஸ் நாளுல கிறிஸ்தமஸ் பத்தியான சில சுவாரசியமான விஷயங்களை தெரிஞ்சுப்போம்.

கால்லால செய்யப்பட்ட பைபிள் :

ஸ்காட்லாந்துல ,ருத்வெல்-ங்குற இடத்துல கால்லால செய்யப்பட்ட பைபிள் இருக்காம்.இதனோட மாதிரி வடிவ வார்ப்பு ,லண்டன்ல இருக்குற விட்டோரியா ஆல்பர்ட் அருங்காசியகத்துல இருக்காம்.இதனோட உயரம் 8 அடி.இதுல ஏசுபிரானோட வாழ்க்கை நிகழ்சிகள் செதுக்கப்பட்டு இருக்காம்.

முதல் கிறிஸ்துமஸ் கார்டு :

  1843-ம் வருஷம் முதல் முதல்ல இங்கிலாந்துல 'கிறிஸ்துமஸ் கார்டு' உருவாக்கினாங்கலாம் .ஜே.ஸி ஹார்ஸ்லி என்பவர் அவரோட நண்பர் சர்ஹென் கோல் என்பவருக்கு இதை தயார் செஞ்சு தந்தாராம்.

கிறிஸ்துமஸ் மரம்:

கி.பி எட்டாம் நூற்றாண்டு போல போனியாஸ் என்ற கிறிஸ்து பாதிரியார் ஜெர்மனிக்கு இறை சேவை செய்றதுக்காக வந்தாராம். ஒரு கிறிஸ்தமஸ் நாளில் இவர் ஒரு பர் மரத்தை ஆசீர்வதிச்சு குழந்தை இயேசுவுக்கு அத ஒப்பு கொடுத்தாராம் அப்போ இருந்து பர் மரம் கிறிஸ்தமஸ் மரம் ஆகிடுச்சாம். அதுல இருந்து ஒவ்வொரு கிறிஸ்தமஸ் கொண்டாட்டத்தின் போதும் இந்த மரம் வீடுகளில் நடபட்டுச்சாம்.

இதுக்கு அப்பறம் ஜெர்மானிய இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் இங்கிலாந்து இளவரசி விக்டோரியாவுக்கும் திருமணம் நடந்துச்சாம். 1841 ஆம் வருஷத்தில் ஆல்பர்ட் இங்கிலாந்து அரண்மனையில ஒரு கிறிஸ்தமஸ் மரத்த நட்டு அதுல பல பரிசு பொருளை கட்டி தொங்க விட்டாராம். மரத்த சுத்திலும் நெறைய மெழுகு வர்த்திய ஏத்தி வேசாராம். அப்பறமா இந்த பரிசு பொருள்கள எல்லாருக்கும் கொடுத்தாராம். இதுக்கு அப்பறம் தன கிறிஸ்தமஸ் மரம் இங்கிலாந்து முழுதும் வெக்குற வழக்கம் வந்துச்ச்சாம்.
இத்தாலில கிறிஸ்தமஸ் மரத்தோட பேரு ப்ரெஸ் பியோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக