பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 23 டிசம்பர், 2014

PK - படத்த பத்தி !!

PK - ஒரு போஸ்டர் மூலமா சர்ச்சையை கிளப்பின படம்தான் இது.

நம்மள மாதிரியே தோற்றமுடைய வேற்று கிரகவாசியான  PK(அமீர் கான்) நம்மள பத்தி ஆராய்ச்சி செய்ய அவங்களுடைய 'ஸ்பேஸ் ஷிப்' அவரை இறக்கிவிடுற இடம் இராஜஸ்தான்.அங்க ஒரு திருடன் 'ஸ்பேஸ் ஷிப்பை தொடர்புக்கொள்ற ரிமோட்டை திருடிக்கிட்டு போயிடுறான்.அந்த ரிமோட்டைஅவர் நம்ம நாட்டுல எப்படி கண்டுபிடிக்க என்ன என்ன  முயற்சி எடுக்குறார், அந்த ரிமோட் கண்டுபிடிச்சாரா? இல்லையா?அவர் மறுபடியும் அவரோட கிரகத்துக்கு போனாரா ? இல்லையா?-னு சொல்ற படம் தான் இந்த PK .

இந்த படத்துல எனக்கு பிடிச்சது :

- நம்ம நாட்டுல இருக்குற சின்ன சின்ன விஷயம்,கடவுள் ,மதம் பத்தி நம்ம மனுஷங்க கிட்ட இருக்குற குழப்பம் பத்தி உண்மையை நல்லா புட்டு புட்டு வைக்குறார்.

- என் கிரகத்துல இப்படி இல்லையேனு அவர் கேக்குற ஒரு ஒரு கேள்வியும் கண்ணாடி முன்னாடி நின்னு நம்மளையே நாம கேக்குற/கேக்கவேண்டிய விஷயங்கள் தான்.

- Dancing  Car -னு அவர் கிண்டல் பண்றது, மகாத்மா காந்தி ரூபாய் நோட்டுல இருந்தா மட்டும்தான் மதிக்குறாங்க மத்தபடி அவர் போட்டோவுக்கு மதிப்பில்லன்னு அழகா கிண்டல் பண்றது ,அப்போ சாமிக்கு லஞ்சம் குடுத்தாத்தான் நாம கேக்குறத செய்வாறோனு நம்ம மூடத்தனத்த எடுத்து சொல்றது,இந்து கோவிலுக்கு போகும்போது செருப்ப வெளில விடணும்னு சொல்றாங்க, சர்ச்க்கு போகும்போது அப்படி சொல்ல மாட்றாங்க.இந்து கோவிலுக்கு தேங்காய் உடைக்கணும்னு சொல்றாங்க கிறிஸ்டியன் கோவிலுக்கு போனா wine குடுக்கணும்னு சொல்றாங்க wine  முஸ்லீம் கோவிலுக்கு கொண்டுபோனா துரத்துறாங்கனு ஒரு ஒரு மத கடவுளுக்கும் நாம காட்டுற பாகுபாட்டை தெளிவா சொல்றார்.

- இதுக்கு நடுவுல கடவுள் பேற சொல்லி ஏமாத்துற சாமியாருங்களையும் விட்டுவைக்கல.

-பாகிஸ்தான்னு சொன்னா உடனே எல்லாரும் கெட்டவங்க தீவிரவாதிங்க கிடையாது சந்தோஷத்தையும் அன்பையும் பரிமாறிக்க எவ்வளவோ நல்லவங்க இருக்காங்க .அவங்களும் நம்மள மாதிரி மனுஷங்கதான்னு அழகா சொல்றாங்க.

- அனுஷ்கா ஷர்மா படம் முழுக்க அமீர்கான் கூட பயணம் பண்றாங்க.(நல்லா இருந்த அந்த வாயை ஏன்மா இப்படி கொடும பண்ணிருக்கீங்க.என்னமா இப்படி பண்றீங்களேமா !!!)

- கடைசி கட்சியில வரும் ரன்பீர் ..அப்படியே ஏலியன் மாதிரி இருக்காரே.

மொத்துல நம்மள படச்ச கடவுள் ஒருத்தர்தான் அவருக்கு  வேற வேற உருவம் குடுத்து நாமதான் அடிச்சுக்கிட்டு சாகுறோம்னு தெளிவா சொல்றாங்க .திருந்துவோமா???நாமளாவது திருந்துறதாவது!!!

சனி, 20 டிசம்பர், 2014

அஷ்டமி, நவமி கெட்ட நாளா??!

FB-பாத்துட்டு இருந்தப்போ  அஷ்டமி, நவமி பத்தி நான் படிச்ச இந்த போஸ்ட் ,அஷ்டமி, நவமி பத்தி இவங்க கொடுத்திருந்த இந்த விளக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது .அஷ்டமி, நவமி நல்ல நாள் இல்லைன்னு நாம நினைக்குறது தப்பான கருத்துன்னு தெளிவா விளக்கம் கொடுத்துருக்காங்க.அந்த போஸ்ட் உங்க கூட ஷேர் பண்றேன்.

சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட் டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான் இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட் டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

புதன், 17 டிசம்பர், 2014

வாட்ஸ் அப்-ன் நீல நிற டிக் மார்க்கை நீக்க !!



வாட்ஸ் அப்-ல நாம அனுப்பின மெசேஜை யாருக்கு அனுப்பினோமோ அவங்க படிச்சுட்டாங்களானு தெரிஞ்சுக்க நீல நிறத்துல இரண்டு டிக் மார்க்குகள் தெரியுற மாதிரி சமீபத்தில வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு வசதியை கொடுத்துருந்தாங்க.

ஆனா அதை பலபேர் விரும்பல.பலபேருக்கு அது தொந்தரவாதான் இருந்தது.இதை புரிஞ்சுகிட்ட வாட்ஸ் அப் நிறுவனம் அதை சரி பண்ற விதமா செட்டிங்கில் சில மாற்றத்தை கொண்டுவந்துருக்காங்க.அது என்னனு பாப்போம் இப்போ.


Settings -> Account - > Privacy போங்க .இதுல  Message தலைப்புக்கு கீழ Read receipts பக்கத்துல ஒரு சின்ன பாக்ஸ் இருக்கும்.அதுல டிக் மார்க் இருக்கும்.அந்த டிக் மார்க்கை எடுத்துவிட்டுடுங்க .அவ்ளோதான்.இனி நீங்க மெசேஜ் படிச்சுட்டீங்களா இல்லையானு உங்களுக்கு மெசேஜ் அனுப்பினவங்களுக்கு தெரியாது .

திங்கள், 8 டிசம்பர், 2014

வேர்கடலை

வேர்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது.


ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.

முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

வேர்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது. இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது. வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்கடலை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.

வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம். பொதுவாக உடல எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம், ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது. ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடவது தான் இவர்களுக்கு நல்லது. இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸடியொபோராசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது.


                                                  -நன்றி சமூகவலைத்தளம் 

சனி, 6 டிசம்பர், 2014

ஒரே கிளிக் -கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் / ஷட்டவுன் ஆகும்

ஒரு ஐக்கான் உருவாக்கி அதன் மூலமா நாம நம்ம சிஸ்டத்தை ஷட்டவுன் அல்லது ரீஸ்டார்ட் செய்யலாம்..


1. முதல்ல ரைட் கிளிக் செஞ்சு New - > ShortCut போங்க ..

2. Create ShortCut -னு ஒரு விண்டோ வரும் அதுல

3. Shutdown -s -t 03 -c "Im Gonna Shutdown"-னு டைப் செஞ்சு Next கிளிக் பண்ணுங்க .
இதுல 03-ங்குறது 3 செகண்ட்க்கு அப்பறம் ஷட்டவுன் ஆகும் அப்போ தெரியவேண்டிய மெசேஜ் "Im Gonna Shutdown".

4. Select a title for the program - என்ற விண்டோல அந்த ஐக்கானுக்கு ஒரு பெயரை கொடுங்க OK குடுங்க.

5.இனி இந்த ஐக்கான் கிளிக் செஞ்சீங்கனா சிஸ்டம் ஷட்டவுன் ஆகும்..

இதே மாதிரி ஒரு ஐக்கான் கிளிக் செஞ்சு விண்டோஸ் ரீஸ்டார்ட் செய்யணும்னு நினச்சீங்கனா ,

1. முதல்ல ரைட் கிளிக் செஞ்சு New - > ShortCut போங்க ..

2. Create ShortCut -னு ஒரு விண்டோ வரும் அதுல

3. Shutdown -r -t 03 -c "Im Back" -னு டைப் செஞ்சு Next கிளிக் பண்ணுங்க .
இதுல 03-ங்குறது 3 செகண்ட்க்கு அப்பறம் ரீஸ்டார்ட்   ஆகும் அப்போ தெரியவேண்டிய மெசேஜ் "Im Back ".

4. Select a title for the program - என்ற விண்டோல அந்த ஐக்கானுக்கு ஒரு பெயரை கொடுங்க OK குடுங்க.

5. இனி இந்த ஐக்கான் கிளிக் செஞ்சீங்கனா விண்டோஸ் ரீஸ்டார்ட்  ஆகும்..

புதன், 3 டிசம்பர், 2014

எந்த நம்பர்??!! எந்த ஊர் ??!!



TN01 - சென்னை (மத்திய)

TN02 - சென்னை (வடமேற்கு)

TN03 - சென்னை (வட கிழக்கு)

TN04 - சென்னை (கிழக்கு)

TN05 - சென்னை (வடக்கு)

TN06 - சென்னை (தென்கிழக்கு)

TN09 - சென்னை (மேற்கு)

TN10 - சென்னை (தென்மேற்கு)

TN11 - தாம்பரம்

TN11Z - சோழிங்கநல்லூர்

வியாழன், 27 நவம்பர், 2014

தயிர் ,,,




1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.

ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

அறிந்து கொள்வோமே-வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்!


 கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு.வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

கணக்கதிகாரப் பாடல் :

“விட்ட மதனை விரைவா யிரட்டித்து

மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்

ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்

தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “

புதன், 12 நவம்பர், 2014

'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி



அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள்  படித்துவிட்டார்களா? எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை  அறிமுகம் செய்துள்ளது    'வாட்ஸ் அப் '.

இந்த வசதியானது இந்தியா உட்பட அனைத்து நாடுகளில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐ போன் பயன்படுத்துபவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்- ஐ பொறுத்தவரை, இந்த வசதி ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு வின்டோஸ், பிளாக்பெரி, பிளாக்பெரி 10 மற்றும் சிம்பெய்ன் போன்களுக்கு பொருந்தும்.

இதன்படி ஸ்மார்ட் போன் அல்லது டேப்லட்டிலுள்ள வாட்ஸ் அப் அப்பிளிக்கேஷனில் நீல நிறத்திலான இரு சரி அடையாளங்கள் (Double tick) காணப்படுமாயின் உங்களால் அனுப்பப்பட்ட செய்தியினை உங்கள் நண்பர் படித்து விட்டார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் பார்வையிட்ட நேரத்தையும் காட்டுகிறது.

எனினும் குழு சாட்டிங்கின்போது (Group Chat) சரி அடையாளங்கள் மட்டும் நீல நிறமாக மாறும். குழு சாட்டிங்கில் நாம் அனுப்பிய செய்தியினை அழுத்தி பிடித்தால் அதாவது லாங் பிரஸ் செய்தால் குழுவில் இருக்கும் நண்பர்களுள் யாருக்கு செய்தி சென்றடைந்து விட்டது, யார் அந்த செய்தியினை படித்து விட்டார்கள் என்று தெளிவாக காட்டுகிறது.

முன்பு ஒரு செய்தி டெலிவரி ஆகிவிட்டால் செய்திக்கு அருகில் சாம்பல் நிற இரு சரி குறி (Double tick) வரும். ஆனால் செய்தி படிக்கப்பட்டதா இல்லையா? என்று தெரியாமலேயே இருக்கும். இப்போது வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சனி, 8 நவம்பர், 2014

டிசம்பரில் பயங்கர சூரிய புயல்:

டிசம்பரில் பயங்கர சூரிய புயல்: பூமி இருளில் மூழ்கும் 16-12-2014 - சனி பெயர்ச்சி அன்று நிகழவிருக்கும் நிகழ்வு !!!


சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு. சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்....

பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்தகைய பயங்கர சூரிய மண்டல புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச உள்ளது.

டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அந்த புயல் வீசத் தொடங்கும். 22 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

வெள்ளி, 7 நவம்பர், 2014

கேளாமை பிரச்சனையை விரைவுல குணப்படுத்த முடியும்


ஹார்வர்ட் மெடிக்கல் பள்ளியில டாக்டர் ஆல்பர்ட் எட்ஜ் தலைமையில காது கேளாமை பத்தி ஆராய்ச்சி ஒன்னு நடந்துகிட்டு இருக்காம்.இந்த ஆராய்ச்சியின் படி ,காது கேக்காத எலிகளுக்கு இவங்க கண்டுபிடிசிருக்குற  மருந்துகள் கொடுப்பதன் மூலமா ஒலி கேக்குற திறன் கொண்ட புதிய மயிர் அணுக்களை வளர வைக்க முடியும்னு கண்டுபிடிச்சிருக்காங்க.

காதுக்குள்ல இருக்குற ஒலி கேக்குற திறன் கொண்ட மயிர் அணுக்கள் பழுதுபட்டுட்டா அத திரும்ப புதுப்பிக்கமுடியாதுன்னு இது நாள் வரை மருத்துவர்கள் நினைச்சாங்க.ஆனா இந்த மருந்து மூலமா புதுப்பிக்க முடியும்னு நம்பிக்கை வந்துருக்கு.

இவங்களோட முந்தைய கண்டுபிடிப்புல காதுக்குள்ல ஒலி கேக்குற பாதையில மாற்றம் செஞ்சா காது கேக்குற வாய்ப்பு அதிகரிக்கும்னு தெரியவந்தது.ஒலி கேக்குற பாதையில தடையை ஏற்படுத்துறதால ஏற்கனவே ஒலி கேக்குற திறன் கொண்ட அணுக்களில் இருந்து புது அணுக்கள் உருவாகுறது இல்ல .மாறாக அதுக்கு பக்கத்துல இருக்குற எல்ஜிஆர்-5 என்ற ஆதரவு அணுக்களில் ஒலி கேக்குற புதிய அணுக்கள் உருவாக்கப்படுது.இதன் மூலமா காது கேக்குற திறன் குறைவு மற்றும் காத்து கேளாமை பிரச்சனையை குணப்படுத்த முடியும்னு நம்பிக்க வந்துருக்கு.

நல்ல விஷயம்தானே ..

சனி, 1 நவம்பர், 2014

வால் பேப்பரை டிஃபால்டாக கொண்டுவர

நமக்கு தேவையான புகைப்படத்தை வால் பேப்பராக  டிஃபால்டாக கொண்டுவர

1. முதல்ல எந்த போட்டோ வால் பேப்பராக வைக்கனுமோ அதை செலக்ட் செஞ்சு ரைட் கிளிக் செஞ்சு 'Open With' option மூலமா Paint -ல ஓப்பன் பண்ணுங்க.

2. அந்த Fileஐ 'Save As' option  மூலமா '24 bit bitmap' format -ஆக C: டிரைவ்ல  விண்டோஸ் போல்டர்ல  save பண்ணுங்க.

3.இப்போ  டெஸ்க்டாப் ரைட் கிளிக் பண்ணி ,Properties - > Desktop Tab செலக்ட் செஞ்சீங்கனா அதுல இருக்குற Background பைல்களில் நீங்க save பண்ணின பைலும் இருக்கும்.

3.  

செவ்வாய், 28 அக்டோபர், 2014

சிறுத்தை


* சிறுத்தையை பத்தி தெரிஞ்ச மற்றும் தெரியாத சில விஷயங்களை தெரிஞ்சுப்போம்...

* சிறுத்தை, பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிறுத்தையின் உடல் வேட்டைக்கு வசதியாக உருவானது. சிறுத்தைகள் தனியாக உலாவக்கூடியவை. இரவில் வேட்டையாடும். வேட்டையாடிய விலங்கை மரங்களுக்கு மேலே கொண்டுசென்று உண்ணும்.

* சிறுத்தைகள் வழுவழுப்பான, தங்க நிற மயிர்ப் போர்வையையும், அதன் மீது கறுப்புத் திட்டுகளையும் கொண்டவை.

* ஒல்லியான உடல் வாகும், திறனும் கொண்டது சிறுத்தையின் உடல். ஒரு மணி நேரத்துக்கு 57 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். நீச்சலடிக்கும் திறன் உண்டு. மலைகள், மரங்களில் அநாயாசமாக ஏறக்கூடிய திறன் படைத்தது. நீண்ட தூரத்துக்குத் தாவும் இயல்பு கொண்டது.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

First Aid American Red Cross APP

அமெரிக்காவின் செஞ்சிலுவைச் சங்கம் முதலுதவி எப்படித் தருவது என்பதை படங்கள் வீடியோவுடன் விளக்கி APP ஒன்றை வெளியிட்டுள்ளது.


மாரடைப்பில் தொடங்கி ரத்தக்காயங்கள், தீக்காயங்கள், ஆஸ்துமா என உடனடியாக தேவைப்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்குமான முதலுதவி முறைகள் இந்த APP இல் எளிய மொழியில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. வெறும் முதலுதவி மட்டுமல்ல, கூடவே பிரச்சினைக்கேற்ற உடனடி மருந்துகள் என்ன என்பசை் சொன்னாலும், முதலில் ஆம்புலன்ஸை அழையுங்கள் என்கிற அடிப்படையான விஷயத்தையும் பரிந்துரைக்கிறது.

ஒவ்வொருவருடைய மொபைலிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இந்த APPLICATION கூகுள் ப்ளேஸ்டோரிலும் ஆப்பிள் ஐட்யூன்ஸ் ஸ்டோரிலும் இலவசமாகக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்கள் இந்தச் செயலியை தரவிறக்க – http//goo.gl/IBrp4B என்ற இணைப்பை பயன்படுத்தலாம் அல்லது கூகுளில் First Aid American Red Cross APP என்று தேடினாலும்கிடைக்கும் .

வெள்ளி, 10 அக்டோபர், 2014

அக்பரும் பீர்பாலும் - அசலும் போலியும்

ஒரு நாள் மாறுவேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும் நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும், பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது. அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார்.

ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம் இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு பரிகாரம் செய்வது நல்லதுதான் என்றார் பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார் மன்னர்.

இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும் இலவசமாக உணவு அளிக்கபட்டது.

இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல் ஊனமுற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கி உண்பது அதிகமானது.

இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம் நாளுக்கு நாள் இலவச உணவை வாங்கிச் செல்ல வந்தமையினால் அரசாங்கத்திலுள்ள உணவு களஞ்சியமே காலியாகி நிலைமை மோசமாகிவிட்டது.இதனை தடுத்திட நல்ல யோசனை ஒன்றை கூறிட அக்பர் பீர்பாலிடம் கோரினார்.

மன்னர் பெருமானே! இதற்காகக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். இதற்கான முடிவை நான் செய்கிறேன் என்றார் பீர்பால்.

வியாழன், 9 அக்டோபர், 2014

இந்தியாவின் முதல் பெண்கள்

 

முதல் பெண் அமைச்சர் - விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் ஆளுநர் -சரோஜினி நாயுடு

முதல் பெண் முதல்வர் -சுதேசா கிருபளானி

முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

முதல் பெண் குடியரசு தலைவர் -பிரதீபா பாட்டீல்

முதல் பெண் மக்களவை தலைவர் -மீரா குமார்

உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி - ஃபாத்திமா பீவி

உயர் நீதிமன்ற பெண் தலைமை நீதிபதி -லைலா சேத்

முதல் பெண் ஐ.பி.ஸ் அதிகாரி - கிரண் பேடி

எவரஸ்டில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால்

செவ்வாய், 7 அக்டோபர், 2014

இட்லி தோசை சாப்பிட்டா உடம்புக்கு நல்லது..


அரிசியையும் உளுந்தம் பருப்பையும் ஊறவச்சு அரைச்சு மறுநாள் காலைல இட்லி தோசையா சாப்பிடுறோம் இல்லையா இது சிறந்த சத்துணவுனு சமீபத்திய ஆய்வுல தெரிஞ்சிருக்கு.

அரிசியில உளுத்தம்ப் பருப்புல இருக்குற வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக செயல்படுது.

அமினோஅமிலம் மற்றும் திசுக்களை புதுப்பிக்குற லைசின் என்ற அமினோஅமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு  உதவுற காமா அமினோபட்ரிக் ன்ற அமினோஅமிலம்பத்து மடங்கும் அதிகரிக்குதாம்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

திருக்குறள் - அறிந்ததும் அறியாததும்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812.

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறள் ‘அக’ரத்தில் தொடங்கி ‘னக’ரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை

திருக்குறளில் இடம்பெற்ற இருமலர்கள் - அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெற்ற பழம் - நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை - குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள

திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

வியாழன், 25 செப்டம்பர், 2014

மழை துளிகள் பற்றிய தகவல்கள்


மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில்கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்றுமேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதிநீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.

மழையையோ அல்லது பனியையோ சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100mm (4in பிளாஸ்டிக்) அல்லது 200mm(8in உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி ஆடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0mm முதல் 25mm (0.98 in) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செல்லுமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.

திங்கள், 22 செப்டம்பர், 2014

ரைட் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவில் பல பயனுள்ள வசதிகள்..

கம்ப்யூட்டர் பயனர்கள் பலரும் டெஸ்டாப்பில் ரைட் கிளிக் செய்து Refresh மட்டுமே செய்வார்கள்.

ரைட் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவில் மேலும் பல பயனுள்ள வசதிகளும் உள்ளன.

அந்த வசதிகளைப் பற்றியும், அதனுடைய பயன்களையும்பார்ப்போம் .

Right Click செய்யும்பொழுது நமக்கு முதலில் தெரியும் பயன்பாடு view.

இது டெஸ்டாப்பில் இருக்கும் அப்ளிகேஷன்களின் ஷார்ட்கட்கள் மற்றும் கோப்புகளின் ஐகான்களை பார்வைக்கு தோற்றம் அளிக்கும் விதத்தை மாற்றுவதற்குப் பயன்படுகிறது. இதில் உள்ள ஆப்ஷன்கள்

1. Large icons
ரைட் கிளிக் செய்து view - Large icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் பெரியதாக தோற்றமளிக்கும்.

2. Medium icons
ரைட் கிளிக் செய்து view - Medium icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

ஆன்மீக கேள்வி பதில்

வாமனன் என்பதன் பொருள்    -    அழகானவன் 

திருவிக்ரமர் தன திருவடிகளால் அளந்த இரு அடிகள்    -  பூலோகம் , மேல் லோகம் 

திருமாலின் மூன்றாம் அடியாள் நிகழ்ந்தது என்ன  -  மகாபலி பாதாளம் அனுப்பப்பட்டான் .

உத்தமன் என்று வாமன மூர்த்தியை போற்றுபவள்    -  ஆண்டாள் 

வாமனர் அவதரித்த தினம்   -  திருவோண நட்சத்திரம்,துவாதசி திதி

வாமனமூர்தியின் தனிச்சிறப்பு   -  மகாபலியை கொள்ளாமல் நற்கதி அளித்தார் 

வாமனரை தமிழில் எப்படி அழைப்பர்   -  குறளன் 

மகாபலி அஸ்வமேத யாகம் நடத்திய இடம்   -  நர்மதா நதிக்கரை

மகாபலி ஆண்டநாடு   -  மலைநாடு 

கேரளாவின் புகழ்பெற்ற நடனம்   -  கதகளி 

வியாழன், 18 செப்டம்பர், 2014

பாடலின் வரிகள் - மணப்பெண்ணின் சத்தியம் - கோச்சடையான்

படம் :கோச்சடையான் 
பாடல் : மணப்பெண்ணின் சத்தியம் 
பாடியவர்கள் :  லதா ரஜினிகாந்த் 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை:  A .R ரஹ்மான்  



காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

வெயிலின் நன்மை

நம்ம உடம்புக்கு கணிசமான அளவு வெயில் தேவை..ஏன்னா வெயில்ல இருக்கும் வைட்டமின் -டி உடம்புக்கு நல்லது.

இப்போ சமீபத்திய ஒரு ஆய்வுல ஒரு குறுகிய நேரம் வெயில்ல நின்னு குளிக்குறதால இதய ரத்தக்குழாய்களில் ஏற்படும் சிக்கல் கட்டுப்படுத்தப்படுதுனு கண்டுபிடிச்சுருக்காங்க.

வெயில்லையே வராம வெயிலே மேலப்படாம வாழ்றவங்களுக்கு இதய பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம்னு சொல்றாங்க.

'ஜர்னல் ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் டெர்மாடோலஜி' என்ற பத்திரிக்கைல இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுருக்காம் .



செவ்வாய், 9 செப்டம்பர், 2014

உங்க Chrome Browser பிளேயராக மாறணுமா ?

எந்த ஒரு தனி மென்பொருளும் இல்லாம ஆடியோ கோப்புகளை (ஃபைல்) Chrome browser மூலமா இயக்கலாம்..


இன்டர்நெட் இணைப்பு இருந்தாலும் இல்லைனாலும் இது சாத்தியம்..
எப்படி தெரியுமா?

1.Chrome Browser திறந்துக்கோங்க..
2.நீங்க கேக்க விரும்பும் ஆடியோ ஃபைலை (அது பாடலாக இருந்தாலும் அல்லது வேற எதுவாக இருந்தாலும் சரி ) அதை Drag செய்து Chrome Browser-ல் Drop பண்ணிடுங்க(அதாவது ,அந்த ஃபைல் மேல மவுஸ் வச்சு செலக்ட் செஞ்சு மவுஸ் கர்சரை விடாம அப்படியே  இழுத்துவந்து Chrome Browser-ல விட்டுடுங்க)

அவ்ளோதான்..இப்போ உங்க  Chrome Browser பிளேயராக மாறியிருக்கும்..


வெள்ளி, 5 செப்டம்பர், 2014

Shortcuts using Command Prompt

Command Prompt- மூலமாக கணினியை இயக்க சில சுருக்கு வழிகள் ..

முதல்ல Command Prompt திறக்க

Start - Run செலக்ட் பண்ணுங்க..


இப்போ தோன்றும் Run Box -ல கீழ குடுத்துருக்குற Shortcuts டைப் செஞ்சு OK கொடுத்தா அதற்க்கான application-கள் திறக்கும்.

Add Hardware Wizard                                         hdwwiz.cpl

Add/Remove Programs                                        appwiz.cpl

Adobe Photoshop                                                photoshop

Basic Media Player                                              mplay32

Bluetooth Transfer Wizard                                   fsquirt

Calculator                                                            calc

Ccleaner                                                              ccleaner

C: Drive                                                              c:

Check Disk Utility                                               chkdsk

Chrome                                                              chrome

Clipboard Viewer                                               clipbrd

Command Prompt                                              cmd

புதன், 3 செப்டம்பர், 2014

ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சேர்ந்தது எப்படி ?

ஒரு ஆண்டில் 12 மாதங்கள் இருப்பது தெரியும். ஆனால் ஒரு காலத்தில் ஒரு ஆண்டில் பத்து மாதங்கள் மட்டுமே இருந்தன. ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் பின்னால் சேர்க்கப்பட்டவை.


கி.மு. முதல் நூற்றாண்டில் ரோமப் பேரரசு (Roman Empire) மாபெரும் அரசாக உருவெடுத்தது. ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரவியிருந்த சாம்ராஜ்யம் இது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரோமக் குடியரசை (கிமு 510 – கிமு 1ம் நூற்றாண்டு) அடுத்து ரோமப் பேரரசு ஆட்சிக்கு வந்தது. குடியரசில் இருந்து பேரரசாக மாறிய காலகட்டத்தைப் பற்றி ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை. ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரந்து விரிந்த நிலப்பரப்பு இந்த அரசின் கீழ் இருந்தது. பல நூற்றாண்டுகள் இந்தப் பேரரசின் ஆட்சி நீடித்து நின்றது. மொழி, சமயம், கட்டடக் கலை, மெய்யியல், சட்டம், அரசு நிர்வாகம் ஆகிய துறைகளில் இந்தப் பேரரசு சிறந்து விளங்கியது. இவற்றின் சிறப்புகள் இன்றுவரை பேசப்பட்டுவருகின்றன.

இந்தப் பேரரசின் மன்னனாக கி.மு 44இல் ஜூலியஸ் சீசர் முடிசூடினார். இவர் உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவர். ரோமர்களின் நாட்டை ரோமானியப் பேரரசாக மாற்றியமைத்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது.

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஆன்மீக கேள்வி பதில்

முருகனை வணங்க நாலாயிரம் கண்வேண்டும் எனப்பாடியவர்  - அருணகிரிநாதர் 

பூலோக திருப்பதிகள் எத்தனை - 106

சிவனுக்குரிய சாத்திர நூல்களைப் பாடியவர்கள்  - சந்தானக் குரவர்கள்

கமலாலயம் என்னும் தெப்பக்குளம் உள்ள தலம் - திருவாரூர் 

வால்மீகிக்கு ராமனின் வரலாற்றை கூறியவர் - நாரதர் 

மாய மானாக வந்த மாரீசனின் தாய் - தாடகை 

கும்பகோணத்தை தமிழில் எப்படி குறிப்பிடுவர் - குடந்தை , குடமூக்கு

ஆடும்,யானையும் சிவனை வழிபட்ட தலம் - திருவாடானை

விஷ்ணுவுக்குரிய துவாதச (12 எழுத்து) மந்திரம் - ஓம் நமோ பகவதே வாசுதேவாய 

குமாரசம்பவம் என்னும் காவியத்தை எழுதியவர்  - காளிதாசர் 

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கா..கா…காக்கா



காகங்கள், கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனம். காகங்களில் 40 வகைகள் உள்ளன.

காகங்கள் எந்தப் பருவ நிலையிலும் எல்லா நிலப்பகுதிகளிலும் வாழக்கூடிய தகவமைப்பு பெற்றவை. அண்டார்டிகாவில் மட்டும் காகம் காணப்படுவதில்லை.

ஒரு காகத்திற்கு தினமும் சராசரியாக 280 கிராம் உணவு தேவை.

காகங்கள் புத்திக்கூர்மை உடையவை. காகத்தின் அளவில் உள்ள உயிரினங்களோடு காகத்தை ஒப்பிடும்போது இதனுடைய மூளையே பெரிது.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஃபேஸ்புக்கின் புகைப்படங்கள் மற்றும் ஸ்டேட்ஸ்களை நகலெடுக்க

உங்களுடைய facebook கணக்குல இருக்குற எல்லா புகைப்படங்களையும் மற்றும் டேட்டாக்களையும் அதாவது நீங்க போஸ்ட் செய்த ஸ்டேட்ஸ்களையும் Copy செய்யணுமா?

1. உங்க  ஃபேஸ்புக் கணக்கை திறந்துக்கோங்க ..

2. அது Settings போங்க..

3.அதுல "DownloadCopy " -னு இருக்கும் .அதை செலக்ட் பண்ணுங்க..இப்போ டவுன்லோட் செய்யுறதுக்கான ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.

4. அதுல "Start My Archive " பட்டன் செலக்ட் பண்ணுங்க.இப்போ உங்களுடைய ஃபைல் நீங்க ஃபேஸ்புக் கணக்கில் கொடுத்துருக்கும் மெயில் முகவரிக்கு வந்துடும்.


வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

3 கிலோ எடை கொண்ட சைக்கிள் ..

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இதற்குத் தீர்வு ஏற்படும் வகையில் ஒரு புதிய வகை சைக்கிளை கண்டுபிடித்துள்ளார். இந்த சைக்கிளை நாம் பயன்படுத்திய பிறகு அப்படியே மடக்கி, நம்முடைய கைப்பையின் உள்ளே வைத்துக்கொள்ளலாம்.


ஜார்ஜ் மாபே (George Mabey) என்ற 22 வயது மாணவர் ஒருவர், அலுமினியத்தால் ஒரு மோட்டார் சைக்கிளை தயாரித்திருக்கிறார். அதன் மொத்த எடையே 3 கிலோதான். இந்த சைக்கிளை உபயோகித்துவிட்டு, அதன்பின்னர் அதைச் சுருட்டி கைப்பையில் வைத்துக்கொள்ளலாம். மிக விரைவில் இந்தப் புதிய சைக்கிள் விற்பனைக்கு வரவுள்ளது.

லண்டனில் உள்ள London South Bank University என்ற பல்கலைக்கழகத்தில் காட்சிக்காகவும், டெமோ செய்து காட்டுவதற்காகவும் இந்த சைக்கிள் தற்போது வைக்கப்பட்டுள்ளது. 35 அங்குல உயரமும், 11.7 அங்குல அகலமும் உள்ள இந்த சைக்கிள் சராசரி எடையுள்ள ஒருவரை சுமந்து செல்லும் திறன் உடையது. இந்தப் புதிய வகை மோட்டார் சைக்கிளுக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 20 ஆகஸ்ட், 2014

நாடுகளின் பழைய பெயர்களும் புதுப் பெயர்களும்

பழைய பெயர் - > புதுப்பெயர்



டச்சு கயானா — சுரினாம்

அபிசீனியா —எத்தியோப்பியா

கோல்டு கோஸ்ட் — கானா

தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா

வட ரொடீஸியா — ஜாம்பியா

தென் ரொடீஸியா — ஜிம்பாப்வே

டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா

கோட்டே டிஐவோயர் — ஐவரி கோஸ்ட்

சாயிர் — காங்கோ

சோவியத்யூனியன் — ரஷ்யா

பர்மா — மியான்மர்

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மண்பானை தண்ணீரின் குளிர்ச்சுக்கு காரணம் என்ன?


தண்ணியோட கொதிநிலை 100 டிகிரி செல்சியஸை அடையறப்ப ஆவியாகுது. ஆனால், சாதாரண வெப்பநிலையிலும் நீர் ஆவியாகிட்டுதானே இருக்கு. கடல், ஆறு, ஏரி, குளங்களோட மேல்மட்டத்துல உள்ள தண்ணி சாதாரண வெப்பநிலையில், அதன் அளவுக்கு ஏற்ப தொடர்ந்து ஆவியாகிட்டே இருக்கும். அதனாலதான் நமக்கு மழை கிடைக்குது. அதே தண்ணியை பாத்திரத்துல ஊத்தி கொதிக்க வைச்சா தண்ணியோட வெப்ப நிலை உயரும்போது, ரொம்ப வேகமா ஆவியாகும். சாதாரண வெப்பநிலைல அதே ஆவியாதல் மெதுவா நடந்துகிட்டே இருக்கும்.

இப்படி சாதாரண வெப்ப நிலைல எப்போதும் ஆவியாதல் நடக்கிறதாலதான் துவைச்சுப் போடுற ஈரத் துணிகளும் காய்கின்றன. கை, கால்களை கழுவிய பின்னாடி துடைக்காவிட்டாலும்கூட கொஞ்ச நேரத்துல கை, கால்கள் உலர்ந்து போவதற்கும் இதுதான் காரணம்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

கூகுள் கார்



 கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரைச் செலுத்த ஓட்டுநர் தேவையில்லை. அது தானாகவே ஓடும். ஓட்டுநருக்கென்ற இருக்கையே அதில் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனெனில் அதில் ஸ்டியரிங், க்ளட்ச், ப்ரேக் போன்ற சாதாரணமாகக் காரில் காணப்படும் எந்த உபகரணங்களும் இல்லை. ஆனாலும் அது ஓடும்.நாம் செல்ல வேண்டிய இடத்தில்நம்மை கொண்டுசேர்க்கும்.

இது மின் சக்தியில் இயங்குகிறது. கூகுள் மேப் வழிகாட்டுகிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதாமல் இருக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் உதவுகின்றன.இதில் இரண்டு பேர் அமரலாம்.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பாதங்களைப் பாதுகாக்கும் ஆக்ஸிஜன்

சர்க்கரை நோயாளிகளின் பாதங்களில் ஏற்படும் புண் (foot ulcer) அல்லது கால்களில் ஏற்படும் காயம் அவ்வளவு சீக்கிரத்தில் ஆறுவதில்லை. பல நேரங்களில் இது வேறு பல சிக்கல்களுக்கும் வழி வகுக்கிறது. சுத்தமான ஆக்சிஜனை செலுத்தும் இந்த  ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரபி (hyperbaric oxygen therapy HBOT) என்கிற புதிய முறை  மூலம் பாதங்களின் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்க முடியும்" என்கிறார், சென்னை ராயபுரம் எம்.வி. டயாபடிக் மையத்தின் இயக்குநர் டாக்டர். விஜய் விஸ்வநாதன்.

மேலும் புண், காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்த ஓட்டம் குறைந்து ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காதபோது, காயங்கள் ஆறுவது தாமதமாகிறது. சுத்தமான ஆக்சிஜன் நிரம்பியுள்ள பிரத்யேக அறையில் நோயாளியை வைத்து 100 சதவிகிதம் ஆக்சிஜனை சுவாசிக்கச் செய்கிறோம் (பொதுவாக நாம் சுவாசிக்கும் போது 21 சதவிகித ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கிறோம்). அப்போது புண் ஏற்பட்ட பகுதியில் புதிய ரத்த நாளங்கள் உருவாக, இந்த அதிகப்படியான ஆக்சிஜன் தூண்டுகிறது. உடலில் உள்ள எல்லா உறுப்புகள், திசுக்களுக்கு அதிக ஆக்சிஜன் கிடைப்பது போல புண் ஏற்பட்ட இடத்திலும் அதிகப்படியான ஆக்சிஜன் கிடைத்து, புண்கள் வேகமாக ஆறுவதற்கு உதவுகிறது. வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகள் விரைவாக அழிக்கப்பட்டு, உடலில் உள்ள நச்சுத்தன்மை குறைகிறது.

சனி, 9 ஆகஸ்ட், 2014

அத்திப்பழம்

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள் என்ன என்னனு பாப்போமா ...

* அத்திப்பழம் சாப்பிடறதால ரெத்த சோகை குணமாகுது

* வாயின் உட்புறம் ஏற்படும் புண்ணை குணமாக்கும்

* பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சரியாகும்

* வயிட்றுப்போக்கு குணமாகும்

* அத்திப்பழப் பொடியை தினமும் ஒரு ஸ்பூன் காலைல சாயந்தரம் பாலுல கலந்து குடிச்சா இதயம் வலுவாகும்

* நரம்பு தளர்ச்சி குணமாகும்

* ஜீரண  சத்தி அதிகமாகும்

* அத்திப்பழம் கல்லீரல் , மண்ணீரல் உறுப்புகளை   நல்லா வேலை செய்ய வைக்குது

* ஆண்மை பெருகும் , உடல் வெயிட் போடும் .

*ரெத்த விருத்தி அதிகமாகும்

* வெண்புள்ளி,தோல் நிறமாற்றம் ,வாதநோய்,உடல் சூடு குணமாகும்

* சீக்கிரம் செரிக்கும் இந்த பழம்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?



ஆஃப்ரிக்கா

ஆ ஃப்ரிக்காவிற்கு எதனால் அந்தப் பெயர்? ஆஃப்ரி என்ற பழங்குடியினர் அங்கே தொடக்கத்தில் வசித்தனர். “ஆஃப்ரிக்கரின் நிலம்’’ என்ற அர்த்தத்தில் ஆஃப்ரிக்கா என்று இதற்குப் பெயரிடப்பட்டது. ஆஃப்ரிக்காவுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு வேறொரு காரணமும் சொல்கிறார்கள். அஃபர் என்றால் ஃபோனிஷியன் மொழியில் (மத்திய தரைக் கடல் தீவுகளில் பேசப்பட்ட மொழி இது). ‘ தூசி’ என்ற அர்த்தம். ‘ தூசிகளின் நிலம்’ என்று இதற்கு அர்த்தம். ஆஃப்ரிக்காவின் வடக்குப் பகுதியில் வெப்பமான, பாலைவனம் போன்ற சூழல் நிலவுவது ஞாபகம் இருக்கிறதா?

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

என்ன பட்டம் வேணும் !!!

சமீபத்துல நடிகர்களுக்கு அவங்களுடைய பெயருக்கு முன்னாடி போட்டுக்குற "பட்டம்" ங்களை பத்தி ஒரு செய்தி படிச்சேன்..


சூப்பர் ஸ்டார் ,,லிட்டில்  சூப்பர் ஸ்டார்சுப்ரீம் ஸ்டார் ,அல்டிமேட் ஸ்டார் , ஸ்டைலிஷ் ஸ்டார் ,பவர் ஸ்டார் ,சோலார் ஸ்டார் -னு அட!! அட!! அட !! வானத்துல கூட எண்ணமுடியாத ஸ்டார்களை நாம திரையுலகத்துல பாக்கலாம்.ஸ்டார்  மட்டும் இல்லாம வேறு பெயர்கள் நடிகர் திலகம்,நடிகையர் திலகம்,இளைய திலகம்,நாட்டியப்பேரொளி,இளைய தளபதி,தல, சின்ன தளபதி,புரட்சி தளபதி, மக்கள் நாயகன்,உலக நாயகன்,சின்ன கலைவாணர் ,வைகை புயல் ,இளம் புயல்,இசைப் புயல்,இசைஞானி,இசை மேதை-னு  எத்தன .......

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

ஆத்திச்சூடி !!


1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.

சனி, 2 ஆகஸ்ட், 2014

Wi-fi Direct


பெரும்பாலும் கையடக்க தொலைபேசி பாவணையாளர்களுக்கு இன்னொரு கையடக்க தொலைபேசியில் இருந்து கோப்புகளை பகிர்ந்து கொள்ள அதிகம் பயன்படும் ஒரு வழி Bluetooth ஆகும். இதன் தரவு பரிமாற்ற வேகம் 24Mbps ஆகும். ஆனால் மிகவும் பெரிய அளவு கோப்புகளை பகிர்ந்து கொள்ள சற்று தாமதமாகலாம். ஆனால் சாம்சங் நிறுவனமானது தனது ஸ்மார்ட் போன்களில் Wi-Fi மூலம் கோப்புகளை பகிர்ந்து கொள்ள வழி அமைத்து தருகிறது.

இதன் சாதாரண தரவு பரிமாற்ற வேகம் 100 Mbps ஆகும். இதில் உள்ள நன்மை என்னவென்றால் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கையடக்க தொலைபேசிகளிற்கு கோப்புகளை இலகுவாகவும் வேகமாகவும் பரிமாறி கொள்ள முடியும்.

இதனை செயற்படுத்த பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்

- Menu -> Settings  ->  Wi-Fi.

-Wi-Fi Direct என்பதை தேர்ந்தெடுங்கள்

-இப்போது உங்கள் மொபைல் போன் ஆனது உங்கள் Wi-Fi எல்லைக்குட்பட்ட Wi-fi Direct on செய்யப்பட்ட தொலைபேசிகளின் பட்டியலை காட்டும்.

-நீங்கள் தொடர விரும்பும் தொலைபேசி மாடலை தெரிவு செய்யவும்.

-ஒன்றிற்கு மேற்பட்ட தொலைபேசிகளை இணைக்க Multy Connect என்பதை தெரிவு செய்யவும்.

இப்போது நீங்கள் Wi-Fi மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்

நன்றி - இரண்டு வருஷம் ஆகிடுச்சு

ப்ளாக் எழுத ஆரம்பிச்சு இரண்டு வருஷம் ஆகிடுச்சு(ஆகஸ்ட் 2).

இதுவரைக்கும் என் ப்ளாக் பார்த்தவங்க/படிச்சவங்க,கருத்துக்களை சொன்னவங்க,பாராட்டினவங்க,திட்டினவங்க எல்லாருக்கும் என்னுடைய நன்றிகள் ...

புதன், 30 ஜூலை, 2014

ஆண்டுகளும் விழாக்களும்



 01 வது ஆண்டு கடதாசி விழா

 02 வது ஆண்டு பருத்தி ஃ பஞ்சு விழா

 03 வது ஆண்டு தோல் விழா

 04 வது ஆண்டு பூ விழா

 05 வது ஆண்டு மர விழா

 06 வது ஆண்டு சர்க்கரைஃ கற்கண்டு விழா

 07 வது ஆண்டு கம்பளி ஃ செம்பு விழா

 08 வது ஆண்டு வெண்கல விழா

 09 வது ஆண்டு மண்கல விழா

 10 வது ஆண்டு தகரம் ஃ அலுமினிய விழா

 11 வது ஆண்டு எஃகு விழா

 12 வது ஆண்டு லினன் விழா

 13 வது ஆண்டுp பின்னல் விழா

 14 வது ஆண்டு தந்த விழா

 15 வது ஆண்டு படிக விழா

 20 வது ஆண்டு பீங்கான் விழா

 25 வது ஆண்டு வெள்ளி விழா

 30 வது ஆண்டு முத்து விழா

 40 வது ஆண்டு மாணிக்க விழா

 45 வது ஆண்டு நீலக்கல் ஃ இரத்தின விழா

 50 வது ஆண்டு பொன் விழா

 55 வது ஆண்டு மரகத விழா

 60 வது ஆண்டு மணிஃ வைர விழா

 75 வது ஆண்டு பவள விழா

 80 வது ஆண்டு அமுத விழா

 100 வது ஆண்டு நூற்றாண்டு ஃதசரத ஃசகாப்த விழா

திங்கள், 28 ஜூலை, 2014

வாட்ச் ஃபோன் ..


இனி வாட்ச் வழியே மொபைலில் பேசலாம், மெசேஜ் அனுப்பலாம், மின்னஞ்சல் அனுப்பலாம், வழி கேட்கலாம்.

ஸ்மார்ட் வாட்ச்களில் சிம்மைப் பொருத்துகிறார்கள். உடற்பயிற்சிக்கான ஆலோசனைகளை அறிந்து கொள்ள வசதி செய்ய முயற்சி செய்கிறார்கள்.

எழுத்துகளும் எண்களும்நம் எதிரில் கண்ணைச் சிமிட்டும்.

எவ்வளவு கலோரியை எரித்துள்ளோம் என்பதை அறிந்து நடையைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம். 

சனி, 26 ஜூலை, 2014

ஐகான்களுக்கு இடையே இடைவெளியை குறைக்க கூட்ட

சில பேர் டெஸ்க்டாப் -ல ஏகப்பட்ட ஐகான்கள் வச்சுருப்பாங்க .சில பேர் டெஸ்க்டாப் முழுசும் ஐகான்களா இருக்கும் .. இந்த ஐகான்களுக்கு இடையில இன்னும் கொஞ்சம் இடைவெளி இருந்தா நல்ல இருக்கும்னு தோணுதா ..தோணுச்சுனா உடனே செய்யல படுத்தி பாத்துடனும் ..எப்படின்னு பாப்போம் ..

1. டெஸ்க்டாப் மேல ரைட் கிளிக் பண்ணுங்க Properties போங்க

2. அதுல Appearance -னு ஒரு Tab இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க..


3 அடுத்து 'Advance' பட்டன் -ஐ கிளிக் பண்ணுங்க.

4. இங்க Item என்ற தலைப்புக்கு கீழ நிறையா ஆப்ஷன்களை பாக்கலாம்.அதுல Icon Spacing -னு இருக்கும் அதை செலக்ட் செஞ்சு அத பக்கத்துல size னு ஒரு பாக்ஸ் இருக்கும் அதுல நமக்கு தேவையான அளவை குடுத்தோம்னா Icon -களுக்கு இடைல இடைவெளி கிடைக்கும் ..

வெள்ளி, 25 ஜூலை, 2014

சுதந்திர தேவி சிலை!!

அமெரிக்கா சுதந்திரம் பெற்று நூறாண்டுகள் ஆனதையொட்டி பிரான்சு நாடு கொடுத்த பரிசுதான் சுதந்திர தேவி சிலை.

1. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் இருக்கிறது லிபர்ட்டி தீவு. இந்தத் தீவில்தான் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டுள்ளது.

2. இந்தச் சிலையை உருவாக்கியவர் பிரடெரிக் அகஸ்தே பர்தோல்டி. இவருடன் குஸ்டவ் ஈபிள் என்பவரும் வடிவமைப்பில் உதவியிருக்கிறார். இவர்தான் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தையும் உருவாக்கினார்.

3. 1875-ம் ஆண்டு சிலை கட்டுமானம் தொடங்கியது. 1884-ம் ஆண்டு சிலை முழுமை அடைந்தது. பிரான்சில் இருந்து அது கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1886-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி அமெரிக்க மக்களுக்குச் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது.

4. சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது. இடது கையில் ஜூலை 4, 1776 என்று எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறது. இது அமெரிக்கா விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன.

5. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர்.

6. சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.


                                                 (தி ஹிந்து தமிழ் :  தெரியுமா உங்களுக்கு நூலில் இருந்து )

வியாழன், 24 ஜூலை, 2014

குப்பைகளின் வகையும் அவை மக்குவதற்க்கு ஆகும் காலமும்

1.காய்கறி ,பழம் மற்றும் உணவுகள் உருவாக்கும் உயிரி கழிவுகள்  - ஒரு வாரம்


2.காகிதம்   -    பத்து முதல் முப்பது நாட்கள்.


3.பருத்தித் துணி     -      இரண்டு முதல் ஐந்து மாதங்கள்


4.மரம்        -      பத்து முதல் பதினைந்து வருடங்கள்


5.கம்பளி       -       ஒரு வருடம்


6.டின்,அலுமினியம்,உலோகக் கழிவுகள்  -   நூறு முதல் ஐநூறு வருடங்கள்


7.பிளாஸ்டிக் பைகள்      -       பத்து லட்சம் வருடங்கள்


8.பிளாஸ்டிக் பாட்டில்கள்       -      கணிக்கமுடியாத காலங்கள் ..


புதன், 23 ஜூலை, 2014

Low Disk Space என்ற செய்தியை நிறுத்த

நாம கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது மெமரியின் இடம் கம்மியானதும் நமக்கு Low  Disk Space என்ற செய்தியை வரும் பாத்துருக்கீங்களா?இந்த செய்தி வராம தடுக்க முடியும்..எப்படின்னு பாப்போம்

1. Start - Run -டயலாக் பாக்ஸில் Regedit -னு டைப் செய்யுங்க.

2. இப்போ ரெஜிஸ்டரில HKEY_CURRENT_USER \Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer போங்க

3. இப்போ வலதுபக்கம் ஒரு DWord புதுசா உருவாக்கி அதுக்கு "No Low  Disk Space Checks" -னு பெயர் கொடுங்க.

4. இப்போ அதோட மதிப்பு 00000001 -னு கொடுங்க.

5. கம்ப்யூட்டர் Restart பண்ணுங்க 

செவ்வாய், 22 ஜூலை, 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 13

விஜய் தொலைக்காட்சியின் "விஜய் விருதுகள்" எனும் விருது விழாவில் 2013-ஆம் வருடத்திற்கான சிறந்த பொழுதுபோக்காளர் என்னும் விருதை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கி கவுரவித்தது விஜய் தொலைக்காட்சி.அந்த காணொளி இதோ..



திங்கள், 21 ஜூலை, 2014

வேகத்தடைகளைக்கொண்டு செடிகளுக்கு நீர் ஊற்றும் தொழில்நுட்பம்


இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் நான்குவழிச்சாலைகளின் முக்கிய சிறப்பம்சங்கள் பளபளக்கும் சாலைகளும், சாலைகளின் நடுவில் வளர்க்கப்பட்ட வண்ணமயமான பூச்செடிகளும்தான். ஆனால், பெரும்பாலும் ஆள் அரவமற்ற பகுதிகளில் அமைந்துள்ள நான்குவழிச்சாலைகளில் தண்ணீர் வசதி இருந்தாலும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பதற்கு ஆளில்லை.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் நான்குவழிச்சாலைகளில் அமைந்துள்ள டோல்கேட்டுகளில் உள்ள வேகத்தடைகளைக்கொண்டு செடிகளுக்கு நீர் ஊற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர், நாகப்பட்டினம் ஈ.ஜி.எஸ். பொறியியல் கல்லூரியின் மூன்றாமாண்டு இயந்திரவியல் மாணவர்கள் முகமது தௌபிக், கார்த்திகேயன், குமரேசன் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர்.

நான்குவழிச்சாலைகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள டோல்கேட்டுகளில் 4 முதல் 6 வேகத்தடைகள் அமைந்திருக்கும். இந்த வேகத்தடைகளின் மீது, வாகனங்கள் ஏறிச்செல்லும் அழுத்தத்தைக்கொண்டு இந்தத் தொழில்நுட்பம் இயங்குகிறது. பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப, டோல்கேட்டுகள் எப்போதும் பிசியாக உள்ளதால், இந்தத் தொழில்நுட்பம் மூலம் 20 முதல் 25 அடி ஆழம் வரை உள்ள நீரை எடுக்க முடியும்" என்கின்றனர், இந்தக் கண்டுபிடிப்புக் குழுவினர். நான்குவழிச் சாலைகளின் நடுவில் செடிகள் அமைக்கப்பட முக்கியக் காரணம், எதிரே வரும் வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தை இவை பெருமளவில் குறைக்கும் என்பதால்தான். இதனால், பெரும்பாலான விபத்துகளையும் தவிர்க்க முடியும்.

எப்படி இது இயங்குகிறது?

நான்குவழிச்சாலைகளில் உள்ள டோல் கேட்டுகளின் வேகத்தடைகளை தார் மூலம் அமைக்காமல், ரப்பர் மூலம் அமைத்து அதன்கீழ் ஒரு அடி ஆழத்தில் ஸ்பிரிங் போன்ற அமைப்பையும் அதன் அருகில் சாதாரண நீர் இறைக்கும் கைப்பம்பு ஒன்றையும் இணைக்க வேண்டும். வேகத்தடையின் மேல்பகுதியை நீர் இறைக்கும் பம்ப்புடன் முதல் வகை நெம்புகோல் தத்துவத்தைப் பயன்படுத்தி இணைக்க வேண்டும். வேகத்தடைகளில் மீது வாகனங்கள் ஏறி இறங்கும்போது கிடைக்கும் அழுத்தத்தினால் ஸ்பிரிங் கீழ் நோக்கித் தள்ளப்படும். ராக் அண்டு பினியன் முறை மூலம் ஸ்பிரிங்கிற்கு கிடைக்கும் நேர் இயக்குவிசை, சுழற்று இயக்கவிசையாக மாற்றப்பட்டு அருகிலிருக்கும் நீர் இறைக்கும் பம்பு இயங்கத் தொடங்கும்" என்கிறார், கண்டுபிடிப்புக் குழுவினரில் ஒருவரான கார்த்திகேயன்.

இந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், உள்ளூர் சந்தைகளில் எளிதாகக் கிடைக்கும் என்பதால், ஒரு வேகத்தடையில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பொருத்த 1,500 ரூபாய் மட்டுமே செலவாகும். இந்தத் தொழில்நுட்பத்திற்கு மின்சாரம் தேவையில்லை என்பதால், மின்வசதி இல்லாத சாலைப்பகுதிகளிலும் நீர் இறைக்க முடியும்.

தொடர்புக்கு: 95666 68066

ஞாயிறு, 20 ஜூலை, 2014

கங்காரு

-கங்காருகள் ஆஸ்திரேலியா கண்டத்திலுள்ள நியூ கினியா பிரதேசத்தில் அதிகம் காணப்படுகின்றன

-கங்காருவில் நான்கு வகைகள் உள்ளன .. ரெட் கங்காரு , ஈஸ்டர் க்ரே கங்காரு,வெஸ்டர்ன் க்ரே கங்காரு ,ஆண்டிலோப் கங்காரு .

-கங்காரு இரண்டு கால்களை காற்றில் உயர்த்தி குதிக்கும்போது வேகமாக ஓடும் .நான்கு கால்களை தரையில் வைத்து நடக்கும் போது மெதுவாகவே நடக்கும்.

-கங்காருவின் கால்கள் மிக சத்தி வாய்ந்தவை.அந்த கால்களால் தாக்கவும் முடியும்.

-கங்காரு தனது உயரத்தை விட மூன்று மடங்கு உயரம் தாவிக்குதிக்கும் வல்லமை படைத்தது.கங்காருவுக்கு நீந்தும் திறன் உண்டு.

-கங்காரு புல்லை விரும்பி உண்ணும்

-குட்டிக் கங்காருகள் 'ஜோய்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.

-ரெட் கங்காரு வகைதான் வயிற்றில் பை உடைய உயிரினங்களில் பெரியது.

-காட்டில் வாழக்கூடிய கங்காரு அதிகபட்சம் 6 ஆண்டுகள் வாழும்.

-ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவையான கண்டாஸ் ,கங்காருவை தன சின்னமாக வைத்துள்ளது.

-கங்காரு தாவரங்களில் ஈரத்தன்மை அதிகம் உள்ள தாவரங்களை சாப்பிடும்.
அப்போதுதான் நீண்ட நேரம் நீர் இல்லாமல் அதனால் இருக்க முடியும்.

-ஆடு,மாடுகளை போல கங்காருவும் உணவை அசைபோடும் பண்பு கொண்டது.முதலில் வேகவேகமாக உணவை விழுங்கிவிடும்.பின்னர் மீண்டும் அந்த உணவை ஆசுவாசமாக வயிற்றில் இருந்து வரவழைத்து மெதுவாக மென்று தின்னும்.

-கங்காருவின் பற்கள் விசேஷமானவை.பழுதுபட்ட கடைவாய் பற்கள் முழுமையாக உதிர்ந்து மீண்டும் மீண்டும் வளரும் தன்மை பெற்றுள்ளன.

-கங்காருவின் வால் தசை வலு கொண்டது ,நீளமானது.கங்காரு ஓடிக்கொண்டே திரும்பும் போது விழாமல் சமன்படுத்தும் வேலையை இந்த வால்தான் செய்கிறது.

-கங்காருகள் கூட்டமாக வாழக்கூடியது.ஒரு கூட்டத்தில் 10 முதல் 100 கங்காருகள் வரை இருக்கும்.

-ஏதாவது அபாயச் சூழலை உணர்ந்தால் ஒரு கங்காரு தனது கால்களை பூமியில் வேகமாக அறைந்து மற்ற விலங்குகளை எச்சரிக்கும்.


வெள்ளி, 18 ஜூலை, 2014

சென்னைல ராஜஸ்தான்


 சென்னையில இருந்து 30 கி.மீ. தூரத்துலஇருக்குற தண்டலம் அருகே 15 ஏக்கர் பரப்பளவுல உருவாக்கப்பட்டுள்ள சோக்கி தானி (CHOKI DHANI) என்கிற அழகிய கிராமம் கட்டடக் கலை, கலாச்சாரம், உணவு, கிராமியக் கலைகள்னு எல்லாத்துலையும் ராஜஸ்தானை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துற மாதிரி இருக்காம் .

இந்தியாவுலையே  முதன்முறையா, ராஜஸ்தான் கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் விதமாக இந்தக் கிராமம் உருவாக்கப்பட்ருக்காம் . புதுமையான இந்த முயற்சிக்கு ராஜஸ்தான் சுற்றுலாத் துறையின் சிறப்பு விருதும் கிடைச்சுருக்காம் .

வியாழன், 17 ஜூலை, 2014

ஜிமெயில் account-ஐ logout செய்ய மறந்துட்டீங்களா?

பிரௌசிங் சென்டர்க்கு போயிட்டு  மெயில் செக் பண்ணுவோம் logout பண்றதுக்குள்ல  கரண்ட் போயிடும் அல்லது ஏதோ அவசரத்துல logout பண்ண மறந்துடுவோம்..

இந்த மாதிரி சமயத்துல நம்முடைய கணக்கை வேற யாராவது தவறா உபயோகிக்க வாய்ப்புகள் இருக்கு..

இதை எப்படி சரிபண்ணலாம்னு பாப்போம்...

1. ஜிமெயில் கணக்கை திறங்க..

2. உங்களுக்கு வந்திருக்கும் மெயில்களை காட்டும் பெட்டிக்கு கீழ Account activity நேரமானது காட்டப்படும்.அதுக்கு பக்கத்துல "Details " -னு இருக்கும் .அதை கிளிக் பண்ணுங்க.


புதன், 16 ஜூலை, 2014

மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு..!

காலக்கண்ணாடி என்ற வலைப்பக்கத்தில "மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு..!"-னு பாத்ததும் ஆர்வமா படிச்சேன்..ரொம்ப நல்லா இருந்த அந்த படைப்பை அப்படியே உங்ககிட்ட ஷேர் பண்றேன்...
எல்லோருக்கும் வணக்கம், உலகம் முழுவதிலும் உள்ள கிராமபுறங்களில் வாழும் மனிதர்களுக்கு இன்றளவும் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருப்பது மிதிவண்டி (Cycle) என்று சொன்னால் மிகையில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்த இந்த சைக்கிளை கண்டுபித்தவர்கள் பட்டறையில் உலோகங்களை உருக்கி காய்ச்சி அடிக்கும் சாதாரண கொல்லர்கள் (Blacksmith). என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

செவ்வாய், 15 ஜூலை, 2014

கணினியில் மின்சாரத்தை மிச்சப்படுத்த !!!

சில சமயம் , சிஸ்டம்ல வேல செஞ்சுகிட்டே இருப்போம் வேற ஏதாவது வேலை காரணாமா அப்படியே எழுந்து போய்டுவோம்..திரும்ப வர சில பல நேரம் ஆகும்னு வையுங்க .சிஸ்டமை Shut Down செய்யாமலே அப்டியே வைக்குறதால மின்சாரம் வீணா செலவு ஆகிட்டு இருக்கும் ( நமக்கு தான் மின்சாரமே இல்லையேனுலாம் சொல்லக்கூடாது..என்னைக்காவது சரியாகாது ?நோ ...நோ .. நம்பிக்கை தளரவிடக்கூடாது)..இது மாதிரி சமயத்துல சிஸ்டம் ஆன்லையே இருந்தாலும் மின்சாரம் செலவாகாம இருக்க சில settings செஞ்சா போதும் .அது என்னனு பாப்போம்..

விண்டோஸ் XP சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தா...

1. டெஸ்க்டொப்ல ரைட் கிளிக் செஞ்சு  Properties செலக்ட் பண்ணுங்க .




2. இப்போ ஒரு டயலாக் பாக்ஸ் வரும் அதுல  Screen Saver என்னும் டேபைசெலக்ட் பண்ணுங்க . அடுத்து Power பட்டனைத்செலக்ட் பண்ணுங்க . பின்னர் Hibernate டேப்ல கிளிக்செஞ்சு Enable Hibernation -ஐ டிக்பண்ணுங்க .

திங்கள், 14 ஜூலை, 2014

கியாஸ் கசிவு புகார் !!!


கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி – ஐ.ஓ.சி அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்த எண் 1800-425-247-247.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன.

சனி, 12 ஜூலை, 2014

தூக்கம்

என்னுடைய 500-ஆவது போஸ்ட் இது..இந்த 500-ஆவது போஸ்ட்ல எனக்கு பிடிச்ச விஷயத்தை பத்தி ( :) ) பகிர்ந்துக்குறதுல எனக்கு சந்தோஷம் .


தூக்கம் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் ...


-தூக்கத்தை ஒத்திப்போடும் ஒரே பாலூட்டி மனித இனம் மட்டுமே.

-தூக்கத்துக்கு இடையில் சராசரியாக 6 முறை விழிக்கிறோம்.

-ஒரு நாளைக்கு 7 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், ஆயுசு குறையும்.

-ஒரு வாரத்துக்கு சரியாகத் தூங்கவில்லை என்றால், 1 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும். தூக்கமின்மை பசியைத் தூண்டும்.

வெள்ளி, 11 ஜூலை, 2014

Chat Shortcuts

சமூக வலைதளங்களில் Chat செய்யும்போது முழு சொல்லையும் டைப் செய்யாம அதை சுருக்கமா டைப் செய்வது வழக்கம்..


அப்படி சுருக்கமாக டைப் செய்யும் வார்த்தைகளும் அதன் உண்மையான விரிவாக்கமும் என்னனு இப்போ பாப்போம்

121 - One to one
182 - I Hate You
2nite - Tonight
2moro - Tomorrow
4ever - Forever
A3 - Anytime,anyplace,anywhere
AEAP - As early as possible
AIMB - As I mentioned before
AKA - Also known as

வியாழன், 10 ஜூலை, 2014

படத்த பத்தி - கோச்சடையான் , மனம் ,ரேஸ் குர்ரம்


கோச்சடையான்: 
                தன் அப்பாவின் சாவுக்கு காரணமான அரசனை மகன் பழிவாங்குற கதைதான் இந்த கோச்சடையான் .

மனம் (தெலுங்கு) : 
                               முழுக்க முழுக்க குடும்பத்தோட பாக்கக்கூடிய ஒரு  அழகான காதல் படம்.

ரேஸ் குர்ரம் (தெலுங்கு):
                                              இது காமெடி,காதல்,ஆக்க்ஷன்,சென்டிமென்ட் எல்லாம் கலந்த செம மசாலாப் படம்..


இந்த படங்களை  பத்தி மேலும் படிக்க கீழ குறிப்பிட்டுருக்குற லிங்க் போய்பாருங்க ..

http://srivalaipakkam.blogspot.in/p/4.html

புதன், 9 ஜூலை, 2014

சைபர் குற்றங்களுக்குத் தொடர்புகொள்ள



சென்னையில இருக்குறவங்க சைபர் குற்றங்களுக்குத் தொடர்புகொள்ள:

Assistant Comissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore, Chennai - 600 008
Telephone number : 55498211
cyberac@rediffmail.com

CHENNAI FOR REST OF TAMIL NADU

Cyber Crime Cell
CB, CID, Chennai.
Off: 25393359, cbcyber@tn.nic.in