பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 3 பிப்ரவரி, 2014

பாடலின் வரிகள் - வெண்மேகம் - யாரடி நீ மோகினி

படம் : யாரடி நீ மோகினி 
பாடல் : வெண்மேகம் 
பாடியவர்கள் :  கார்த்திக் 
பாடலாசிரியர் : நா முத்துக்குமார் 
இசை:  யுவன் ஷங்கர் ராஜா 



வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஓர் நெஞ்சம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஓர் நெஞ்சம் திண்டாடுதே

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ



மஞ்சள்  வெயில் நீ
மின்னல் ஒளி நீ
உன்னைக் கண்டவரைக்
கண்கலங்கி நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி
உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில்
பெண்ணினமே கோபப்பட்டதென்னடி
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டாஉன்னழகை பாட
கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஓர் நெஞ்சம் திண்டாடுதே

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ

எங்கள் மனதைக் கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழியசைவில் வலை விரித்தாய்
உன்னைப் பல்லக்கினில் தூக்கிச் செல்ல
கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ...

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக