பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 26 மார்ச், 2014

100 வருட சினிமாவில் இன்றும் மாறாதவைகள்

100 வருட சினிமாவில் இன்றும் மாறாதவைகள் .
எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன் ஏதாவது விட்டுபோய் இருந்தா நீங்க சொல்லுங்க ..

->டாக்டர் -" இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கள்" ,அவர் உயிர் பிழைச்சதே அதிசயம்.என் இத்தனை வருஷ மெடிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்ல இப்படி ஒரு கேஸ் நான் பாத்ததே இல்ல. இன்னும் 5 நிமிஷம் லேட் ஆகிருந்தாலும் அவர் உயிருக்கே ஆபத்தாப்போயிருக்கும் சரியான நேரத்துல கொண்டுவந்து சேத்துடீங்க.

->போலீஸ் : கிளைமாக்ஸ்ல ஹீரோ எல்லாரையும் அடிச்சு முடிச்சதும் அதுபாட்டுக்கும் இருக்குற வானத்த பாத்து சுட்டு ஒரு குண்டை வேஸ்ட் பண்ணிகிட்டே வருவாங்க. போலிஸால கூட கண்டுபிடிக்க முடியாத கேஸ்களை நம்ம ஹீரோ அசால்ட்டா கண்டுபிடிப்பார்.போலீஸ் மூளையை விட ஹீரோ மூளை பக்காவா வேல செய்யும்.ஆனா பாருங்க நம்ம ஹீரோவுக்கு வேலை இருக்காது.வேல இல்லாத பட்டதாரியா ஊரு சுத்திக்கிட்டு இருப்பார்.

->ஹீரோயின் கண்டிப்பா அழகாதான் இருப்பாங்க.

->ஹீரோ ஹீரோயின் கண்டதும் காதல்.(காதல் இல்லாத கதையே இல்ல)

->கண்ணமூடுவாங்க வேற ஊர்ல இல்ல வேற நாட்டுல டூயட் பாடுவாங்க.(எப்படியாப்பட்ட பேசஞ்சர் ஃப்லைட்டும் இந்த ஸ்பீட்க்கு போகாது.

->நாம பாடினா பக்கத்துக்கு ரூமுக்கு கூட கேக்காது.ஆனா ஹீரோ /ஹீரோயின் பாடினா அடுத்த தெருவுல இருக்குற ஹீரோ/ஹீரோயின்க்கு கேக்கும்.அதுவும் சம்மந்தப்பட்ட இவங்களுக்கு மட்டும் தான் கேக்கும்.அவங்க வீட்ல வேற யார் இருந்தாலும் அவங்களுக்குளாம் கேக்காது.

->கண்டிப்பா ஒரு மெயின் வில்லன் இருப்பார்.அடுத்து ஒரு சப்-வில்லன் இருப்பார்.அவங்களுக்கு ஏகப்பட்ட அல்லக்கைகள் இருப்பாங்க.ஹீரோவுக்கு ஓரளவுக்கு இணையா இருப்பார் வில்லன் எல்லா விஷயத்துலையும் திறமைல,ஸ்மார்ட்ல,அடுத்த சப்-வில்லன் இதுலலாம் கொஞ்சம் கம்மியா இருப்பார்..அல்லக்கைகள் பாக்கவே பயமா இருப்பாங்க..கண்டிப்பா கழுத்துல செயின் இருக்கணும் ,அழுக்காதான் தெரியனும் தொந்தியும் தொப்பையும் இருக்கணும்.

->ஹீரோ/ஹீரோயின் யாராவது ஒருத்தர் பணக்காரரா இருந்து ஒருத்தர் ஏழையா இருந்தா, அந்த பணக்காரா ஹீரோ /ஹீரோயினின் அப்பா ஏழை ஹீரோ/ஹீரோயினின் காதலுக்கு தடையா இருப்பார்.ரெண்டுபேரும் மிடில் கிளாஸ்னா ஹீரோ எதிர்பாராத விதமா வில்லனுக்கு வில்லன் ஆகிடுவார்,ரெண்டுபேரும் லோயர் கிளாஸ்னா கண்டிப்பா ஒரு மொறமாமன் இருப்பான் அவனால பிரச்சனையாகும்.

->ஆனா எப்படியாப்பட்ட வில்லன்/வில்லியும் கடைசி 5 நிமிஷத்துல திரிந்திடுவாங்க.இல்ல ஹீரோ அந்த வில்லன்/வில்லியை கொன்னுடுவார்.அவங்களுக்குளாம் மட்டும் கேஸ் உடனே முடிஞ்சிடும் ... :D :D :D

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக