பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 11 மார்ச், 2014

கண்மாய் சீரமைத்த மதுரை இளைஞர்கள்

மதுரையைச் சேர்ந்த பல்வேறு இளைஞர் அமைப்பினர் ஒன்றிணைந்து கண்மாய் ஒன்றை சீரமைத்துள்ளனர் இளைஞர்களின் எண்ணமும் செயலும் ஒன்றிணைந்தால் இன்னமும் செய்யலாம், இதற்கு மேலும் செய்யலாம் என்பதை நிரூபித்திருக்கின்றனர் மதுரையைச் சேர்ந்த பல்வேறு இளைஞர் அமைப்பினர்.

மதுரை நகர்ப்பகுதியில் உள்ள முக்கியமான கண்மாய்களில் ஒன்று செல்லூர்க் கண்மாய். ஜன நெருக்கடி மிகுந்த செல்லூர்ப் பகுதி மக்களின் முக்கிய நீராதாரம்இந்தக் கண்மாய்தான். ஆனால் பல காலமாக கண்மாயில் தண்ணீர் நிரம்புவதற்குப் பதிலாக முள்காடுகளும் குப்பை மேடுகளும்தான் நிரம்பியிருந்தன.கண்மாய்க்கான தண்ணீர் வரத்துக் கால்வாய்களும் சேதமடைந்து விட்டன. விளைவு, கண்மாயில் தண்ணீர் தேங்காததால் செல்லூர்ப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் 900 அடிக்கும் கீழ் இறங்கியது.

இதை அறிந்த ஐ லீட் மதுரை, யூத் லீட் இந்தியா, நாணல் நண்பர்கள் குழு, விதை அறக்கட்டளை, நம்ம மதுரை முகநூல் பக்கம், கியூர் அறக்கட்டளை போன்ற மதுரையைச் சேர்ந்த பல்வேறு இளைஞர் அமைப்பினர் ஒன்றிணைந்து அந்தக் கண்மாயை சீரமச்சிருக்காங்கலாம்.

பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற்றவுடன், கண்மாயை சீரமைக்க சேவை மனப்பான்மை உடைய இளைஞர்களைத் திரட்டும் வேலையைத் தொடங்கியுள்ளனர். மதுரையிலுள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் சென்று, அங்கு ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களிடம் பேசி, ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் மதுரை மேயர், காவல்துறைக் கண்காணிப்பாளர், மதுரை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் என மதுரையின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் செல்லூர்ப் பகுதிக்கு வந்திருந்து சீரமைப்புப் பணிகளைத் தொடக்கி வைத்துள்ளனர்.

மதுரை முழுவதும் கல்லூரி மாணவர்களை இ   ணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கொண்டு அடுத்த ஓர் ஆண்டில் மதுரையிலுள்ள அனைத்துக் கண்மாய்களையும் சீரமைக்க வேண்டும் என்பதே எங்களது தற்போதைய இலக்கு"னு சொல்றாங்க இவங்க..

தொடர்புக்கு: 78717 11178, 86430 50002


                                                         -- நன்றி புதியதலைமுறை 

1 கருத்து:

  1. சபாஷ்........இப்படி அரசபாஷ்........இப்படி அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் செயல்பட்டால் நாடு நிச்சயம் வல்லரசாகிவிடும், பாராட்டுக்கள் அந்த இளைஞர்களுக்கு

    பதிலளிநீக்கு