பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 14 மார்ச், 2014

தூங்கும்போது கனவு ஏன் வருது ?

தூக்கத்துக்கு காரணம் மூளை தூண்டிவிடுற சில வேதிப்பொருள்கள். மூளையைத் தண்டுவடத்தோடு இணைக்கும் மூளைத்தண்டு, நம் ரத்தத்தில் அடினோசின் என்ற வேதிப்பொருளை அதிகரிக்குமானால் நமக்கு தூக்கம் வரும்.

கனவுகள் வரும் அந்த தூக்க நிலைக்கு பேர் REM-Rapid Eye Movement . கண்கள் விரைவா நகரும். இந்தத் தூக்கத்தின்போது, மூளையின் அடித்தளத்திலிருந்து (அந்த இடத்திற்கு பான்ஸ் (PONS) என்று பெயர்) அப்போப்போ சில சிக்னல்கள் கிளம்பி, தலாமஸ் எனும் மூளையின் நடுப்பகுதியை அடையும் . தலாமஸ் அதை வாங்கி, மூளையின் வெளிப்புறப் பகுதியான செரிபரல் கார்டெக்ஸுக்கு அனுப்பும் .

நாம படிக்குறது,கத்துக்குறது,தகவல்களை ஒழுங்குப்படுதுறதுனு பலதுக்கு காரணம் செரிபரல் கார்ட்டெக்ஸ்தான். மூளையின் அடித்தளத்திலிருந்து வரும் இந்த சிக்னல்களை செரிபரல் கார்ட்டெக்ஸ் ‘புரிந்து’ கொள்ளும் முயற்சிதான் கனவு என சில விஞ்ஞானிகள்சொல்றாங்களாம் . இந்தக் கனவுகள் நம் மூளையில தங்கிவிட்ட சில பழைய நினைவுகளை சுத்தப்படுத்தும் முயற்சினும் , சிலர் நம்முடைய மூளை தன்னுடைய திறன்களைத் தீட்டிக் கொள்ளுதுனும் சொல்றாங்க.

இந்த REM– தூக்கம் சிறு குழந்தைகளுக்குரொம்ப நல்லது. ஏன்னா அப்போது வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் உற்பத்தியாகுதாம் .



                                                           -- நன்றி வார இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக