பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 19 மார்ச், 2014

புத்தகம் வாசிக்கும் கருவி

'ஃபிங்கர் ரீடர் ' என்ற புதிய கருவி ஒன்றை 'மாசாசூசெட்ஸ் இன்ஸ்ட்டியூட்  ஆஃப் டெக்னாலஜீஸ் மீடியா லேப் '  கண்டுபிடிச்சிருக்காங்க.

எழுத்து வரிகளின் மேல விரலை வச்சுகிட்டே போனா இந்த கருவி சத்தமா அதை படிச்சுக் காட்டுமாம்.

இது எப்படிசாத்தியம்னு கேக்குறீங்களா?எழுத்து வரிகளின் மேல விரலை வச்சுகிட்டே போனா இந்த கருவியில இருக்குற ஸ்கேனர் ,மூலமா எழுத்து வரிகள் ஸ்கேன் செய்யப்பட்டு வாசிக்கப்படுது.இது தொடு உணர்வு அழுத்தம்,அதிர்வு,நகர்தல் ஆகியவற்றினால் செயல்பட்டு அவற்றை ஒலியாக கொடுக்கும் புதிய தொழில்நுட்பம் 'ஹேப்டிக் பீட்பேக்' .இந்த தொழில்நுட்பம் மூலமா வார்த்தையின் உச்சரிப்பு ,வரி முடிந்து விட்டதற்கான ஒலி ,வரி ஆரம்பிப்பதற்கான ஒலி மேலும் அடுத்த வரி இருப்பதையும் ஒலி மூலம் தெரியபடுத்துது இந்த ஃபிங்கர் ரீடர் '.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக