பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 20 மார்ச், 2014

புத்தகம் தான் என் செல்வம் -மதுரை முருகேசன்

தமிழில் கிடைப்பதற்கரிய எந்தப் புத்தகமாக இருந்தாலும் முருகேசன் செல்போனிற்கு ஒரு ஹலோ சொன்னால் போதும். அடுத்த இரண்டு நாட்களில் அந்தப் புத்தகம் நம் கையில் இருக்கும். தனி ஓர் ஆளாக கிட்டத்தட்ட இருபதாயிரம் புத்தகங்களுக்குமேல் சேமித்து வைத்திருக்கிறார். இன்னும் சேமித்துக் கொண்டிருக்கிறார். நாம் கேட்கும் புத்தகங்கள் அவரிடம் இல்லாவிட்டாலும் நூலகங்களில் தேடிக் கண்டுபிடித்து எடுத்துத் தருகிறார் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள முருகேசன் அவர்கள் .

இவர் தற்போது இரண்டு அறைகள் உள்ள ஒரு சிறிய வீட்டில் புத்தகங்களுக்கு நடுவில் வாழ்ந்து வருகிறார். தான் வசிக்க இடம் இல்லையே என்பதைவிட புத்தகங்களை வைக்க இடம் இல்லையே என்பதுதான் இவரின் மிகப் பெரிய கவலை.

தொடர்புக்கு: 95787 97459

2 கருத்துகள்: