பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 4 மார்ச், 2014

கரண்ட் இல்லாம வேலைசெய்யும் மின்விசிறி

கரண்ட் இல்லாம வேலைசெய்யும் மின்விசிறியை ( SOLAR & ENERGY FAN) தரங்கம்பாடி ஆர்.கே.தொழிற்பள்ளி, ஒழுகை மங்களம் மற்றும் ஹைடெக் பிராக்ட்டிகல் சயின்ஸ் அகாதெமியில் படிக்குற மாணவர்கள் விவேக், புருசோத்தமன் மற்றும் மங்களராஜ் கண்டுபிடிசுருக்காங்க.பகலில் சோலார் மூலமும் இரவில் காற்றாலை மூலமும் இயங்குகிறது இந்த மின்விசிறி.

இந்த மின்விசிறியில பொருத்தப்பட்டுள்ள 12 வோல்ட் டி.சி. மோட்டார் ஒன்று நேரடியாக 50 வாட்ஸ் திறனுள்ள சோலார் மின் தகடுடன் இணைக்கப்பட்டுள்ளது.இதனால் சூரிய ஒளி சோலார் தகட்டில் படும்போது மின்விசிறி சுழல ஆரம்பிக்கும். சூரிய ஒளி குறைந்ததும் வீட்டின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய காற்றாலையின் உதவியால் மின்விசிறி இயங்கத் தொடங்குது . சாதரணமாக வீசும் காற்றே இந்தக் காற்றாலை இயங்கப் போதுமானது.பேட்டரி உதவியின்றி நேரடியாக சூரிய ஒளியிலும், காற்றாலையிலும் இந்த மின்விசிறி இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் காலை, மாலை என அனைத்து நேரங்களிலும் தங்கு தடையின்றி இந்த மின்விசிறியை இயக்க முடியும்.

பகல் முழுவதும் சூரிய ஒளியால் இயங்கும் இந்த மின்விசிறி சூரிய ஒளி மங்கியவுடன் light dependent resistor (LDR)என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் தானாக காற்றாலையில் இயங்கத்தொடங்கி விடும். பேட்டரி வேண்டுமென்றாலும் இணைத்துக் கொள்ளலாம்.

தொடர்புக்கு: 95666 68066

                                                         ---நன்றி புதியதலைமுறை

2 கருத்துகள்:

  1. இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

    4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

    6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

    இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

    நன்றி...

    பதிலளிநீக்கு