பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 14 ஏப்ரல், 2014

அர்ச்சனைத் தட்டு

கோவில்ல அர்ச்சனை பண்ணும் போது  தேங்காய் ,வாழைப்பழம் ,வெற்றிலைப்பாக்கு கொடுத்து அர்ச்சனை பண்றதோட நோக்கம் என்ன தெரியுமா?


தேங்காயோட  மேல இருக்குற மட்டை ,நார் உறிச்சி தேங்காயோட ஓட்டை உடைக்கிறோம் .உள்ள இனிப்பான தேங்காய் இருக்குது இல்லையா , அது மாதிரி மனிதன் தனக்குள்ள இருக்குற ஆணவம் ,கன்மம் அதாவது முற்பிறவி பாவம்  மற்றும் மாயை அதாவது இந்த பிறவியில செய்யுற தவறுகள் இந்த மூன்றையும் நீக்கினால் இனிய இறைவனை பாக்கலாம்னு சொல்றதோட அர்த்தம் தான் அது.

வாழைப்பழத்தை ஏன் அர்ச்சனைக்கு கொடுக்குறோம்னா அல்லது நாம வீட்ல சாமிகும்பிடும்போது வாழைப்பழத்தை வச்சு படைக்கிறோம்னா  ...வாழைமரத்தை சுத்தி பல வாழைக்கன்றுகள் வந்துகிட்டே இருக்கும் .இததான் வாழையடி வாழைனு (வாழையடி வாழையாய் வாழனும்) சொல்றாங்க.அதுபோல நம் வம்சம் விருத்தியடையவும் முதிர்ந்த வயசுல நிம்மதியா இறைவனின் திருவடி சென்று சேரவும் வாழைப்பழத்தை வச்சு படைக்கிறோம்.

வெற்றிலைப்பாக்கு- லட்சுமி கடாட்சியதுக்காக வெற்றிலைப்பாக்கு எனும் தாம்பூல நைவேத்தியம் செய்யப்படுது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக