பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 2 ஜூலை, 2014

சுனாமி பேரலையால் பாதிக்கப்படாத கட்டிடங்களுக்கான வடிவமைப்பு

Tsunami Resistant Structures எனும் சுனாமி பேரலையால் பாதிக்கப்படாத கட்டிடங்களுக்கான வடிவமைப்பை கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு அமைப்பியல் மாணவர்களான ராம்குமார், ராம்பிரசாத், ரெங்கநாதன் கார்த்திக், ரெங்கராஜ் கண்டுபிடிச்சுருக்காங்க .


இவங்க கண்டுபிடிசுருக்குற வடிவமைப்பில் வீடு கட்டினா சுனாமி பேரலையால் பாதிக்கப்படாது.

அலைகளின் வேகத்தைக் குறைக்கும் வகையில் கட்டிடங்களின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதே இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம். கட்டிடங்களின் வெளிப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மூன்று அடுக்குகளிலான தடுப்புச் சுவர்கள் சீறி வரும் அலைகளோட வேகத்தைப் பெருமளவு குறைச்சிடும் .அதையும் மீறி கட்டிடத்தை நோக்கி வரும் அலைகளின் வேகம் கட்டிடத்தின் சிறப்பு வடிவமைப்பினால் மேலும் குறைக்கப்படும். இதனால் ராட்சத அலைகளினால் ஏற்படும் சேதம் தடுக்கப்படுகிறது.

இந்த வகைக் கட்டிடங்களை சாதாரணமாக நாம் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் மூலம் கட்டலாம். வடிவமைப்பு மட்டுமே மாற்றமடையும். எனவே சாதாரணமாக ஒரு கட்டிடம் கட்ட ஆகும் செலவே இந்தக் கண்டுபிடிப்பிற்கும் ஆகும்னு சொல்றாங்க.

தங்கள் கல்லூரியில் அமைக்கப் பட்ட தொட்டியில் செயற்கை அலைகளை ஏற்படுத்தி, இந்தச் சோதனையைப் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளனர். இவர்களின் கண்டுபிடிப்பைப் பார்வையிட்ட தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழகம் 10,000 ரூபாய் ரொக்கப் பரிசு அளித்து பாராட்டியுள்ளது. காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ள இவர்கள், தற்போது இந்தக் கண்டுபிடிப்பை மேம்படுத்தும் முயற்சியில் உள்ளனர்.

தொடர்புக்கு: 95667-50033

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக