பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஆன்மீக கேள்வி பதில்

முருகனை வணங்க நாலாயிரம் கண்வேண்டும் எனப்பாடியவர்  - அருணகிரிநாதர் 

பூலோக திருப்பதிகள் எத்தனை - 106

சிவனுக்குரிய சாத்திர நூல்களைப் பாடியவர்கள்  - சந்தானக் குரவர்கள்

கமலாலயம் என்னும் தெப்பக்குளம் உள்ள தலம் - திருவாரூர் 

வால்மீகிக்கு ராமனின் வரலாற்றை கூறியவர் - நாரதர் 

மாய மானாக வந்த மாரீசனின் தாய் - தாடகை 

கும்பகோணத்தை தமிழில் எப்படி குறிப்பிடுவர் - குடந்தை , குடமூக்கு

ஆடும்,யானையும் சிவனை வழிபட்ட தலம் - திருவாடானை

விஷ்ணுவுக்குரிய துவாதச (12 எழுத்து) மந்திரம் - ஓம் நமோ பகவதே வாசுதேவாய 

குமாரசம்பவம் என்னும் காவியத்தை எழுதியவர்  - காளிதாசர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக