பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

திருக்குறள் - அறிந்ததும் அறியாததும்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812.

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறள் ‘அக’ரத்தில் தொடங்கி ‘னக’ரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை

திருக்குறளில் இடம்பெற்ற இருமலர்கள் - அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெற்ற பழம் - நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை - குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள

திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்



திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து - னி (1,705 முறை)

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ, ங

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது.

திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக