பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 22 டிசம்பர், 2015

வாங்க கேக்கலாம் ...

எம்எஸ்வேர்ட் ,PDF ஃபைல்,பவர் பாயிண்ட் ,இணையத்தளப்  பக்கங்கள் ,ஈமெயில் இது எல்லாத்துலையும் இருக்குற செய்தி பேச்சு வடிவத்துல இருந்தா நேரம் மிச்சம் பண்ணலாமேனு கூட சில பேருக்கு தோனும் இல்ல...அப்டியாப்பட்டவங்களுக்கு ஒரு இணையத்தளம் இருக்கு ...


Www.Spokentext.net ...இந்த இணையத்தளம் எழுத்து வடிவத்துல இருக்குறதை அப்டியே ஆண்/பெண் குரல்ல மாத்தி ஒலி வடிவத்துல நமக்கு தரும்..

இதுக்கு இந்த தளத்துல இலவச உறுப்பினராகி நமக்கு ஆடியோவா கேக்கவேண்டிய ஃபைல்லை குடுத்து ,குரல் மற்றும் ஒலியை தேர்வுசெஞ்சா போதும்..ஆடியோ  ஃபைல் கிடைச்சுடும்..இதை டவுன்லோட் பண்ணிக்கலாம் ..

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்றால் என்ன?

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுததத் தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கலாம்‘ என்று டிவி அல்லது ரேடியோவில் வானிலை அறிவிப்பின் போது தெரிவிப்பார்கள்.மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?

தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று வியாபித்துள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும்.

ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.

ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத்தில் காற்றழுத்தம் மிக் அதிகமாக இருக்கும்.வேறிடத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம்.

காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக் முக்கியம்.

செவ்வாய், 15 டிசம்பர், 2015

எல் நினோவை பற்றிய தகவல்கள்!!

சென்னையின் பெருமழைக்கு முன்பும் சரி, பிறகும் சரி எல் நினோ (El Nino) என்ற பெயர் அதிகமாக அடிபடத் துவங்கியிருக்கிறது. அதிலும் ஐ.நா சபையின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு எல் நினோவைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இதோ, எல் நினோவை பற்றிய பத்து தகவல்கள்...

1. 'எல் நினோ' என்பது ஸ்பானிய மொழி வார்த்தை. 'குட்டிப் பையன் அல்லது சிறுவன்' என்பது இதன் பொருள். டிசம்பர் மாதத்தை ஒட்டி அதாவது கிறிஸ்துமசை ஒட்டி நிகழும் வளிமண்டல மாற்ற நிகழ்வாதலால் குட்டிப் பையனைப் பொதுவாக 'குழந்தை ஏசு' என்ற பொருள்படும்படியும் அழைக்கிறார்கள். பசுபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியின் மேற்பரப்பில் நடைபெறும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் இதன் உப விளைவாக உலகின் பெரும்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே 'எல் நினோ.'

சனி, 5 டிசம்பர், 2015

சென்னை: உணவு வேண்டுபவர்கள் தொடர்பு கொள்க...

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னார்வலர்களால் உணவு மற்றும் உதவிப்பொருட்கள் உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அண்ணா நகரில் ஒவ்வொரு வேலைக்கும் (காலை, மதியம், இரவு) 5000 உணவு பொட்டலங்கள் தயார் செய்கின்றனர். இவர்களை தொடர்பு கொண்டு எந்த இடத்துக்கு உணவு வேண்டும் என்று கூறினால் அவர்களே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள். அதனால் உணவு தேவை என்று தொடர்பு கொள்பவர்களுக்கு கீழே இருக்கும் தொடர்பு எண்ணை கொடுத்து உதவுங்கள்.

பெயர்: பாலா
இடம்: அண்ணா நகர்
தொலைப்பேசி எண்: 9952918699

கார்த்தி
தொலைப்பேசி எண்: 9840643633

நவீன்:
தொலைப்பேசி எண்: 8807777797

சதீஷ்
தொலைப்பேசி எண்: 9941084807

லோகேஷ்
தொலைப்பேசி எண்: 9791044503

வெள்ளி, 4 டிசம்பர், 2015

வெள்ள நிவாரண நிதி..

வெள்ள நிவாரண நிதியாக வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ நினைப்பவர்கள் RJ பாலாஜி மற்றும் நடிகர் சித்தார்த் அவர்களால் மக்கள் உதவிக்காக துவங்கப்பட்ட இந்த வங்கி கணக்கை பயன்படுத்தலாம்.நமது பணம் நிச்சயமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையும் என்ற நம்பிக்கையோடு...


மீட்பு படைக்கு உதவும் வகையில் எண்கள் அறிவிப்பு

மீட்பு படைக்கு உதவும் வகையில் எண்கள் அறிவிப்பு

கடற்படை, விமானப்படை, தரைப்படை என முப்படைகளும், மாநில அரசு அதிகாரிகளும், பேரிடர் மீட்பு அதிகாரிகளும் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் எண்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. 080400010 00/11 வரை 12 எண்களில் பேசலாம். வாட்ஸ் ஆப்: 98806 55555 டெலிகிராம்: 72597 60333





பருவநிலை மாற்றம்

'சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்த,பெய்யப் போகின்ற கன மழைக்கு, '‪#‎எல்நினோ‬' என்ற பருவ நிலை மாற்றம் காரணமாக இருக்கலாம்' என, வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் கூறுகின்றன.... இது குறித்து வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவ மழை சராசரியாக, 44 செ.மீட்டர் பெய்யும்... நடப்பு ஆண்டில், நவ.,1 முதல், 18 வரை, சராசரியாக, 3.7 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 9.3 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, சராசரியை விட, 153 சதவீதம் அதிகம்.... அதேநேரத்தில், இந்த காலகட்டத்தில், சென்னையில் சராசரி மழை, 10 செ.மீ., - பெய்தது, 44 செ.மீ., - இது, 329 சதவீதம் அதிகம்; காஞ்சிபுரத்தில் சராசரி மழை, 6 செ.மீ., - பெய்தது, 45 செ.மீ., - இது, 656 சதவீதம் அதிகம்; கடலுாரில் சராசரி மழை, 7 செ.மீ., - பெய்தது, 13 செ.மீ., - இது, 93 சதவீதம் கூடுதலாகும்.

மழை கூடுதலாக பெய்ய, வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் புயல் உருவாகவில்லை. பசிபிக் கடல் பரப்பில், அக்டோபரில் நிலவும் வெப்பத்தின் அளவு, சராசரியை விட கூடுதலாக இருக்கும்போது, அதன் மீது கடல் காற்று மோதி, கடும் வெப்பத்தை குளிராக மாற்றுகிறது...

இந்த பருவ நிலை மாற்றம், கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், கிறிஸ்துவின் பெயருடன் நினைவு கூர்ந்து, எல் நினோ என, ஸ்பெயின் மொழியில் பெயரிடப்பட்டு உள்ளது. இரண்டு முதல், ஒன்பது ஆண்டுகளுக்கு, ஒருமுறை, பசிபிக் கடல் பகுதியில் இதுபோன்ற பருவநிலை மாற்றம் ஏற்படுவது வழக்கம்.... அப்படி மாற்றம் ஏற்படும்போது, அந்த ஆண்டை, #எல்நினோ ஆண்டு என, அழைக்கின்றனர். 'நடப்பு ஆண்டில், பசிபிக் கடலில், சராசரி வெப்பத்தை விட, 2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கூடுதலாக பதிவாகி உள்ளது' என, ஐக்கிய நாடுகளின் கடல் மற்றும் மேற்பரப்பு நிர்வாகம் தெரிவிக்கிறது...

வெள்ளி, 20 நவம்பர், 2015

இப்படி பொறந்துருக்கலாமோ ..

நாயா பொறந்தாலும் நல்ல நேரத்துல பொறக்கனும்னு சொல்வாங்களே ...
எங்க வீட்லயும் ஒரு அஞ்சறிவு ஜீவன் ஷானு வளருது பாக்க டெரர் , கொடுக்குறதுல பாரி வள்ளல் , சாப்பிடுறதுல சாப்பாட்டு ராமன் சாரி ராமி, தூங்குறதுல கும்பகர்ணன் சாரி கும்பகர்ணி ...
பாக்க டெரர் : பின்ன , வீட்டுக்கு யாரும் வரக்கூடாது, வந்தா அவங்க அமைதியா உக்காந்து பேசணும், எந்த பொருளையும் தொடக்கூடாது , ரொம்ப அசையக்கூடாது,எங்க யாரையும் தொட்டோ அடிச்சோ பேசிடக்கூடாது..முக்கியமா யாரும் சண்டைபோட்டுக்க கூடாது...

கொடுக்குறதுல பாரி வள்ளல் : பசினு வேற ஜீவராசிகள் வீட்டுக்கு வந்துட்டா தான் கிண்ணத்துல இருக்குற சாப்பாடோ ,பாலோ எத சாப்டாலும் வேடிக்க பாக்கும், குரங்கு பட்டாளம் வீட்டுக்குள்ள வந்து அலேக்கா ஒரு சீப்பு வாழைப்பழத்தை தூக்கிட்டு போனாலும் ,இல்ல முருக்கு சிப்ஸ்னு இருக்குற டப்பாக்கள தூக்கிட்டு போனாலும் ,அண்ணே வேற ஏதாவது வேணுமா இல்ல போதுமானு கேக்கும் அதுங்ககிட்ட..பாம்ப பாத்தாக்கூட அதும் ஒரு ஜீவன் தானேனு அமைதியா வேடிக்கப் பாக்கும்.
சாப்பிடுறதுல சாப்பாட்டு ராமன் சாரி ராமி : உலகத்துலையே இதுக்கு பிடிச்ச வார்த்த 'சாப்பிட்ற ஐட்டம்' ..அது வெஜ் ஆக இருந்தாலும் சரி இல்ல நான்-வெஜ் ஆக இருந்தாலும் சரி ஒரு பிடி பிடிக்கும். இது ஒரு ஸ்வீட் பைத்தியம்..எல்லா விதமான ஸ்வீட்டும் சாப்பிடும்..அதுக்காக கார ஐட்டம் பிடிக்காதுன்னு இல்ல அதையும் விட்டு வைக்காது, என்ன விட அதிகமா பச்சை காய்கரி சாப்பிடும்..கேரட்,புடலங்காய்,பூசணிக்காய்,தேங்காய் எப்பயாவது புளிக்காத மாங்காய் இது எல்லாம் பச்சையா சாப்பிடும்னா சாம்பார் முள்ளங்கி,வேகவச்ச பீட்ரூட்டும் சாப்பிடும்...பழம்: ஆப்பிள் ,திராட்சையை தவிர அத்தனை பழமும் இஷ்டமா சாப்பிடும்..அதுவும் வாழைப்பழம்னா ரொம்ப இஷ்டம்..பஜ்ஜி போண்டா வடை அப்பளம் ஏதாவது விட்டுவைக்குமா கிடையவே கிடையாது..பாயாசம் ரொம்ப பிடிக்கும்.ஐஸ்கிரீம்,கேக் சாக்லேட் அதும் ஒரு கை சாரி ஒரு வாய் பாக்கும்...தெருவுல ஐஸ்கிரீம் வண்டி போச்சுனா போதும் , அந்த அண்ணனை சத்தம் போட்டு வண்டிய நிறுத்த வச்சு எங்கள வந்து சத்தம் போட்டு கூப்பிட்டு போகும் , எங்க ஐஸ்கிரீம் வண்டி போயிடுமோனு வீட்டுக்கும் தெருவுக்கும் புலி பாய்ச்சல்ல ஓடும்,4 நாள் அந்த அண்ணன் பாத்தார் 5வது நாள்ல இருந்து இது அவரோட ரெகுலர் கஸ்டமர் ஆகிடுச்சு..அதே மாதிரி காய்கறி வண்டி ....

செவ்வாய், 17 நவம்பர், 2015

‪‎மழையால்பாதிக்கப்பட்ட‬ மக்கள் தங்களது ‪#‎பிரச்சினைகளை‬ கூற..

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (‪#‎தாசில்தார்‬ ) செல் எண்கள் :- 1 Fort-1.Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488

2 திருவள்ளூர் மாவட்டம்

6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496

3 காஞ்சிபுரம் மாவட்டம்

14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504

4 வேலூர் மாவட்டம்

22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512

தெரிஞ்சுப்போமே,

-உலகின் இரண்டாவது மிகப் பெரிய கண்டம் ஆப்பிரிக்கா.

-உலகின் மிக நீளமான நதியான நைல் நதி இந்தக் கண்டத்தில்தான் ஓடுகிறது.

-சாய்ரே, நைஜர், சாம்பேசி என மூன்று பெரிய நதிகளும் இந்தக் கண்டத்தில்தான் இருக்கின்றன.

-உலகின் மிகப் பெரிய பாலைவனமான சகாரா இங்குதான் உள்ளது. கலஹாரி, நமீபியா ஆகிய இரு பெரிய பாலைவனங்களும் ஆப்பிரிக்காவிலேயே உள்ளன.

- 14,300 வெவ்வேறு மொழி பேசும் மக்கள் ஆப்பிரிக்காவில் வசிக்கின்றனர்.

- இந்தக் கண்டத்தில் இஸ்லாம், கிறிஸ்தவ மக்களே அதிகம் உள்ளனர்.

- ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய சிகரம் ‘கிளிமாஞ்சரோ’. இதன் உயரம் 5,895 மீட்டர்.

- இந்தக் கண்டத்தின் மிகப்பெரிய ஏரி ‘விக்டோரியா’. இதன் பரப்பு 68,800 சதுர கிலோமீட்டர்.

-மக்கள்தொகை அடிப்படையில் இந்தக் கண்டத்தில் உள்ள பெரிய நாடு ‘ நைஜீரியா’. 11 கோடியே 50 லட்சம் பேர் இங்கு வசிக்கிறார்கள்.

- ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நீர் யானை போன்ற அரிய வகை விலங்குகள் இக்கண்டத்தில் மட்டுமே காணப்படுகின்றன.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

உலகின் அதிவேக விமானம்..


உலகின் அதிவேக விமானம் உருவாகிக்கொண்டிருக்கிறது. பிரிட்டனின் ‘ரியாக்‌ஷன் இன்ஜின்’ என்னும் நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான, ஈசா (esa) இணைந்து உருவாக்கும் இந்த விமானத்தின் பெயர், லேப்கேட்- 2 (LAPCAT 2).

ராக்கெட் இன்ஜின் பொறுத்தப்பட்டு இயங்கும் இந்த விமானத்தில், சுமார் 300 பேர் பயணிக்கலாம். மணிக்கு 5,632 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். அதாவது, மற்ற விமானத்தில் 17 மணி நேரம் செல்லும் இடத்துக்கு, நான்கு மணி நேரத்திலேயே லேப்கேட்- 2 அழைத்துச்சென்றுவிடும். ‌2019-ல் சோதனை ஓட்டத்துக்கு வருகிறது லேப்கேட்.


திங்கள், 26 அக்டோபர், 2015

கூகுள் கிளாஸ்க்கு போட்டியா அடுத்த கிளாஸ் ..


சான்பிரான்சிஸ்கோ-வை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஆஸ்டர்ஹட் டிசைன் குரூப்(Osterhout Design Group) ராணுவ வீரர்களுக்காக கடினமான எந்த சூழல்களிலும் தாக்குப்பிடிக்க கூடிய ஸ்மார்ட் கிளாஸ்-ஐ தயாரிச்சு வந்துடிருந்தது . இந்த நிறுவனம்இப்போ சாதாரண மக்கள் பயன்படுத்துற  ஸ்மார்ட் கிளாஸ்-ஐயும் இந்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப் போறதா பிரபல போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதாம் .

இந்த கிளாஸ் மூலம் ஹை-டெஃபனிஷன் வீடியோக்களை பாக்கலாம் . புதிதாக வீடியோவையும் பதிவு செய்யலாமாம்.

இந்த கிளாஸ் சுருக்கமாக ஓடிஜி(Qualcomm Snapdragon 805) கிளாஸ் என அழைக்கப்படுகிறது.

இந்த ஓடிஜி கிளாஸ்  பிராசசரை கொண்டு இயங்கும். இதில் வைஃபை, ப்ளூடூத், சாட்டிலைட் நேவிகேஷன் போன்ற இணைப்பு சேவைகள்இருக்கு.அதுமட்டும்மில்லாம  நாம எங்க, எத பார்க்குறோம் என்பதை அறிய சென்சார்களும் பொருத்தப்பட்டிருக்காம் . இதன் மூலம் நமது தலை அசைவுகளை 3டி படமாகபாக்கலாமாம் .

இது சற்றே மாற்றியமைக்கப்பட்ட ஆண்டிராய்டு ஓஎஸ் மூலம் இயங்கும்னு சொல்றாங்க.

ஒருமுறை சார்ஜ்செஞ்சா ஒரு மணி நேரம் முதல்  2 மணி நேரம் வரைமட்டும்தான் தாங்கும்.

புதன், 21 அக்டோபர், 2015

செல்பேசிக்கு வரும் வேண்டாத அழைப்புகளை நிறுத்தலாம்

எந்த வேண்டாத அழைப்புகளையும் அல்லது குறுஞ்செய்திகளையும் (BSNL / AIRTEL / AIRCEL and Etc) செல்பேசிக்கு வராமல் தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு 1909 என்ற இலவசத் தொடர்பு எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ செய்தால் போதும்.

நீங்கள் விரும்பாமலே உங்களுக்கு இடம் வாங்க விரும்புகிறீர்களா என்ற ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், லோன் வேண்டுமா என்ற தனியார் வங்கி விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற தொந்தரவுகள் தரும் அனைத்து துறை சார்ந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற உங்களுக்கு வரும் விளம்பரத் தொடர்புகளை நிறுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

1.முற்றிலுமாக நிறுத்துவது: எந்த விளம்பரங்களையும் அழைப்புகளாகவோ, குறுஞ்செய்திகளாகவோ ஏற்க விருப்பமில்லை அல்லது நிறுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முற்றிலுமாக நிறுத்தும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

2.பகுதி மட்டும் நிறுத்துவது: பகுதியாக நிறுத்துவதெனில் கீழ்க்கண்டவற்றில் எவை தேவைப்படுகிறதோ அவற்றின் எண்ணை மட்டுமோ அல்லது ஒன்றை மட்டுமோ அல்லது இரண்டு, மூன்று பிரிவுகளையுமோ கூட தேர்ந்தெடுக்கவும்.

START 1 & வங்கி / காப்பீடு / நிதி தொடர்பானவை

START 2 & ரியல் எஸ்டேட் தொடர்பானவை

START 3 & கல்வி தொடர்பானவை

START 4 & உடல்நலம் தொடர்பானவை

START 5 & நுகர்பொருட்கள் / ஆட்டோமொபைல் தொடர்பானவை

START 6 & தொலைத்தொடர்பு / ஒளிபரப்பு / பொழுதுபோக்கு / ஐ.டி. தொடர்பானவை

START 7 & சுற்றுலா தொடர்பானவை

செவ்வாய், 20 அக்டோபர், 2015

கடிகாரம் இடமிருந்து வலமாக சுற்ற காரணம் !!

ஆரம்ப காலத்தில் சூரியன் நகர்வதை மையமாகக் கொண்டே கடிகாரத்தை உருவாக்கினார்கள். முட்கள் கொண்ட முதல் கடிகாரத்தைச் சீனர்கள்தான் தயாரித்தார்கள். சீனா நிலநடுக்கோட்டுக்கு வடக்கே உள்ளது. வட துருவத்தில், தெற்கே பார்த்து நின்றீர்கள் என்றால் உங்கள் இடப் புறம் சூரியன் உதித்து வலப் புறம் மறையும். எனவே, அவர்கள் உருவாக்கிய கடிகாரம் இடமிருந்து வலமாக சுற்றுகிறது.

ஒருவேளை நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே உள்ள நாடுகளில் கடிகாரம் உருவாக்கியிருந்தால் அது வலமிருந்து இடமாகத்தான் சுழலும். இதனால்தான் சில அரேபிய, யூதக் கடிகாரங்கள் எதிர்த் திசையில் சுற்றுகின்றன. அரேபிய, ஹுப்ரு எழுத்துகள்கூட வலமிருந்து இடமாகவே எழுதப்படுகிறது .

திங்கள், 12 அக்டோபர், 2015

கை ரேகைகள் பற்றிய ஒரு குறிப்பு...!

நம் கையில் என்னற்ற ரேகையில் இருந்தாலும் மிக முக்கியமான ரேகைளை மட்டும் கொடுத்திருக்கின்றேன். படத்தை சேமித்து வைத்துக்கொள்ளூங்கள்.

விதி ரேகை நம் கையில் உள்ள செல்வத்தையும் , நாம் வாழ்க்கையில் பெறும் வெற்றியையும்.

இருதய ரேகை‍‍ = நமது மன நிம்மதியையும், மற்றும் ஞானத்தையும்.

புத்தி ரேகை = நம் வாழ்க்கையில் கிடைக்க இருக்கும் வெகுமதி, புத்தியால் கிடைக்கும் வெற்றியையும், அறிவாற்றலையும்.

ஆயுள் ரேகை = நம் ஆயுளையும், நம் உடல் ஆரோக்கியத்தையும்.

செவ்வாய் ரேகை = ஆயுள் ரேகைக்கு துனையாக செயல்படும்.மற்றும் தெய்வபக்தியும், வீடு நிலம், குறிக்கும்.

காதல் ரேகை = நம் காதல் வாழ்க்கையும். தோல்வி அடையபோகும் சமயம் சரியாக அதன் மீது குறுக்கீட்டு ரேகை வளரும்.

ஞான ரேகை அல்லது குரு ரேகை = ஒருவர் ஆன்மிக எண்ணத்தையும், எதையும் பகுத்து ஆராயதலையும், ஆபத்து வருவதை முன் கூட்டியே உணரும் ஆற்றல் உடையவராகவும் இருப்பார்.

படத்தில் காட்டப்பட்ட சூரிய ரேகை நம் கையில் இருப்பது= மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைவதை குறிக்கும். மேலும் 35 வயதிற்கு மேல் ஒரு ஸ்திரமான வாழ்க்கை அமையும்.

படத்தில் உள்ள ரேகைகளில் ஏதேனும் குறூக்கீட்டு ரேகைகள், அல்லது தீவுக்குறிகள் இருந்தால் அந்த ரேகை பாதிப்பு அடைந்துள்ளது என்று அர்த்தம்.

அதன் பாதிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்றால் எந்த இடத்தில் பாதிப்பு தெரிகிறதோ அந்த ரேகையின் இடம் குறிக்கும் வயதில் அப் பாதிப்பானது தெரியும்.

                                                      -- நன்றி சமூக வலைதளம் 

புதன், 30 செப்டம்பர், 2015

கருவிகளும் பயன்களும்!

கப்பல் செல்லும் திசையை அறிய – மரைனர்ஸ் காம்பஸ் (Mariner’s Compass)

கடலின் ஆழத்தை அளக்க -ஃபாதம்மீட்டர் (Fathommeter)

விமானம் பறக்கும் உயரத்தை அறிய – ஆல்டிமீட்டர் (Altimeter)

மேகங்களின் திசை, உயரம் அறிய – நீபோஸ்கோப் (Nephoscope)

காற்றின் வேகம், திசை அறிய – அனிமோமீட்டர் (Anemometer)

காற்றின் ஈரப்பதத்தை அறிய – ஹைக்ரோமீட்டர் (Hygrometer)

சனி, 19 செப்டம்பர், 2015

பாடலின் வரிகள் - கண்ணால கண்ணால - தனிஒருவன்

படம் :தனிஒருவன் 
பாடல் : கண்ணால  கண்ணால
பாடியவர்கள் : கௌசிக் ,பத்மலதா 
பாடலாசிரியர் :ஹிப் ஹாப் தமிழா  
இசை: ஹிப் ஹாப் தமிழா  



நெஞ்சோரமா..ஒரு கதல் துளிரும்போது..
கண்ணோரமா..சிறுகண்ணீர் துளிகள் யேனோ!!
கண்ணாளனே.. என் கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நெனைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே!!

மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்

புதன், 16 செப்டம்பர், 2015

கடல் ஆமை சிற்பங்கள்

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

 பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான்.

 இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

தன்னுடைய பழமையான அடையாளங்களையும், பொக்கிஷங்களையும் போற்றி பாதுகாப்பதில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான் ஒருபடி மேலே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மாநிலத்தின் பெரும்பகுதி பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ராஜாக்கள் காலத்தில் மிகவும் செல்வசெழிப்பு மிக்க இடமாக ராஜஸ்தான் இருந்திருக்கிறது. அந்த செல்வம் வரலாற்று காலம் நெடுகவும் ராஜஸ்தான் ஏராளமான படையெடுப்புகளுக்கு ஆளாகவும் காரணமாக அமைந்திருக்கிறது. வீரம் பொருந்திய ரஜபுத்திர வீரர்களாலும், மார்வார் வீரர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட ராஜஸ்தானில் வாழ்ந்த மக்கள் எக்காரணம் கொண்டும் போரில் எதிரிகளின் கைகளில் சிக்கி மானமிழக்க கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருந்திருக்கின்றனர். இதுவே 24,000 பெண்கள் ஒரே இடத்தில் தீக்குளித்து உயிர்விடுவதற்கும் காரணமாகிப்போனது. அந்த கொடூர சம்பவம் நிகழ்த்த இடத்தை பற்றி தெரிந்துகொள்வோம் .


ஜைசால்மர் கோட்டை : ராஜபுத்திர அரசர் ராவல் ஜைசால் என்பவரால் 1156ஆம் ஆண்டு இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. ஜைசால் மன்னரின் பெயராலேயே இது ஜைசால்மர் கோட்டை என்றுஅழைக்கப்படுகிறது. பெரும் படையெடுப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் மூன்றடுக்கு சுவர்களால் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.

சனி, 22 ஆகஸ்ட், 2015

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்..!

கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்:


வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும். கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.

இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும். குளிக்கும்போது தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்கவும். (கடையில் மெட்டல் ஸ்க்ரப்பர் கிடைக்கும் அதை வாங்கி தினமும் குளிக்கும்போது கால் பாதங்களை தேய்க்கவும் சரியாகிவிடும்.) அல்லது (கால்களுக்கு தேய்க்கும் ப்ரஷ் அல்லது ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யுங்கள். தினமும் குளிக்கும் போதும் ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்துக் குளியுங்கள். சரியாகி விடும்.

பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும்.வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

யாராலும் மறுக்க முடியாத உண்மை:

அன்றாடம் நம் கைகளிலும், சட்டைப் பாக்கெட்டிலும், சில சமயங்கள் நம் வாயிலும் புழங்கும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் "நோய் பரப்பும் காரணிகள்".

1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம். ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்? அப்படியாக பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.
"காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1, TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.
இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள். பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.

3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள்.
அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.
இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள். ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

Cache Memory என்றால் என்ன?

கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள்ளேயோ அல்லது மத்ர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது.
(Cache எனும் இந்த ஆங்கில வார்த்தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படுகிறது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்)ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் அறிவுறுத்தல்களைசேமிப்பதற்காகவே சிபியூ இந்த கேஷ் மெமரியைப் பயன் படுத்துகிறது. இதனால் கணினியின்வேகம் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது.

கணினியில் கேஷ் மெமரி பயன்படுத்தப்படுவதன் முக்கிய அனுகூலம் யாதெனில் டேட்டாவைக் கடத்துவதற்கென அமைக்கப் பட்டிருக்கும் மதர்போர்டிலுள்ளசிஸ்டம் பஸ் (system bus) எனும் பாதைகளை சீபீயூ பயன் படுத்த வேண்டிய தேவை அற்றுப் போகிறது. சிஸ்டம் பஸ் ஊடாக டேட்டா பயணிக்கும் போது மதர்போர்டின் செயற்திறனுக்கமைய அதன் வேகம் குறைகிறது. சிஸ்டம் பஸ்ஸில் நெருக்கடி நிலை தோன்றும் சந்தர்ப்பங்களில் அதனைத் தவிர்த்து சீபீயூ கேஷ் மெமரியை அணுகி அதிக வேகத்தில் டேட்டாவைப் ப்ரோஸெஸ் செய்து விடுகிறது.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..



➤லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

➤நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

➤நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

➤விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

➤விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

➤கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

➤கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்

➤கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்.

                                                           -- நன்றி சமூகவலைத்தளம் 

வியாழன், 2 ஜூலை, 2015

புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!

மஞ்சள்:-

இதில் உள்ள 'குர்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள் புற்று செல்லை தடுக்கும் தன்மைகொண்டது. செல்களில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படாமல் தடுக்கும் (Anti inflammatory effect) ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு. தொடர்ந்து மஞ்சளைப் பயன்படுத்தும்போது புற்று செல் உருவாகும் தன்மையைக் குறைக்கும். புற்றுநோய் வளர்ச்சி மேலும் தூண்டப்படுவதைத் தடுக்கும். காயங்களை ஆற்றவும், அனைத்து விதமான தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

குங்குமப்பூ:-

குங்குமப்பூ தொண்டை நோய்களுக்குச் சிறந்த மருந்து. முக்கியமாக இதுவும் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. 'கீமோதெரப்பி’ (Chemo Therapy), ரேடியேஷன் தெரப்பி (Radiation therapy) எடுத்தவர்களுக்கு அதன் பக்க விளைவுகளைத் தடுப்பதற்குக் குங்குமப்பூ பக்கபலமாக இருக்கிறது. இந்திய, அரேபிய, சீனக் கலாசாரங்களில் இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

திங்கள், 29 ஜூன், 2015

இந்த படங்கள் நான் பாத்துட்டேன்!! நீங்க?


இந்தப் படங்களை பற்றிய விமர்சனங்களை படிக்க இந்த லிங்க் போங்க .. http://srivalaipakkam.blogspot.com/p/4.html


திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

 திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டு. இது எதனாலென்றால், கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது. அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்.

                                                      -- நன்றி சமூகவலைதளம் 

புதன், 24 ஜூன், 2015

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்?

இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும். மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் ஓர் உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருக்கும் பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது(பிராண சக்தியானது) தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.

இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன பிராண சக்தியானது அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உடலுக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல. எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள்.

எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின்(பிராண சக்தி) முயற்சி இப்போது பலிக்காது. மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில சக்திகளும் முயலக்கூடும். அது எதிர்மறையான காந்த அலைகளை உருவாக்கும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

ஞாயிறு, 21 ஜூன், 2015

மிளகாய் வரலாறு:

செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி!

குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு.7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டுவிட்டாலும், கி.மு 3,400-ம் ஆண்டில்தான் அதை விவசாயப் பயிராக பயிரிட்டார்களாம். 1,493-ம் ஆண்டில் கொலம்பஸ் மற்றும் அவருடைய நண்பர் டீகோ அல்வார்ஸ் சான்சா ஆகியோர் பிறநாடுகளுக்கு கடல் வழி கண்டுபிடிக்கும் ஆர்வத் தோடு கடலில் பயணப்பட்டனர். அப்போது அவர்கள் கண்டுபிடித்த பல்வேறு விஷயங்களில் மிளகாய் என்பதும் ஒன்று. அதை மேற்கிந்திய தீவு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரப்பி விட்டுள்ளனர்.



போர்ச்சுகல் மாலுமிகள் மூலம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மேற்கு கடற் கரையிலிருக்கும் கோவா பகுதியை வந்தடைந்த மிளகாய், இந்தியர்கள் மனதை மெள்ள ஆக்கிரமித்து விட்டது. இன்று உலக நாடுகளில் 1,600 வகை மிளகாய் பயிரிடப் படுகின்றது. இந்தியாவில் இருப்பது சுமார் 380 வகை. மிளகாய் விவசாயத்தில் முதலிடம் பிடித்திருப்பது நாமேதான்.

காரத்தன்மைக்கு அதன் விதைகளில் உள்ள கேப்சய்சின் ( Capsaicin ) என்னும் திரவமே காரணம். இந்தத் திரவத்தை எடுத்து வலி நிவாரணியாகவும் புற்று நோய்க்கான மருந்துகளின் மூலப்பெருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ப்ரோ வைட்டமின் ஏ ஆகியவையும் இருக்கின்றன.

மிளகாய், செவ்விந்தியர்களிடமிருந்து உலகுக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்தலாம் என்பதை உலகுக்கு அறிமுகம் செய்த பெருமை இந்தியப் பெண்களையேச் சேரும்.


                                                    -- நன்றி விகடன் 

சனி, 20 ஜூன், 2015

புழுக்கம் அதிகமா இருந்தா மழை பெய்யுமா?


நாம சாப்பிடற சாப்பாட்டுல உள்ள சத்துப் பொருள்கள் உடம்புக்குள்ளே எரிக்கப்பட்டு ஆற்றலா மாற்றப்படுது. இது தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கும். அப்போது உடலின் ஏற்படும் கழிவுப் பொருள்களோட ஒரு பகுதி வியர்வையா வெளியேற்றப்படுது.

தோலின் வழியே வெளியேற்றப்படும் வியர்வை நீராவியா மாறுது. நம்மை சுற்றியுள்ள காற்றுல நீராவி மூலக்கூறுகளின் அளவு (இதை ஈரப்பதம் என்று கணக்கிடுகிறார்கள்) குறைவா இருக்கும்போது, வியர்வை நீராவியாக மாறுவது வேகமாக நடக்கும்.

மிக அதிகமான அளவுல நீராவி மூலக்கூறுகள் காற்றுல கலந்திருந்தா, வியர்வை நீராவியா மாறுவது மெதுவாக நடக்கும். அந்த நேரத்தில்தான் நம் தோல் பகுதிகளில் வியர்வையின் பிசுபிசுப்பு அதிகமாகி புழுக்கமான சூழல் ஏற்படுது.

காற்றில் கலந்திருக்கும் நீராவி மூலக்கூறுகள்தான் சுருக்கமடைந்து மழைத் துளியாக மாறுது. நீராவி மூலக்கூறுகளின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிச்சுகிட்டே போய், ஒரு பூரித அளவை (Saturated Level) அடையும்போது நீராவி மூலக்கூறுகள் சுருங்கி மழைத் துளியாக மாறும் நிகழ்வு நடைபெறும்.
இன்னிக்கு முதல்ல நமக்கு ஒரே புழுக்கமா இருந்துச்சு. அப்போ, நம்மை சுற்றியுள்ள காற்றுல நீராவி மூலக்கூறுகள் அதிகமா இருந்ததால, வியர்வை நீராவியாக மாறும் வேகம் குறைஞ்சு போய் பிசுபிசுப்பு ஏற்பட்டது.

நம்ம உடம்புல தெரியற இந்த உணர்வு, இன்னும் கொஞ்ச நேரத்துல காற்றுல நீராவி மூலக்கூறுகளின் அளவு பூரித நிலையை எட்டி மழைத்துளியாக மாறப் போறதுக்கான அறிகுறி. 

ஞாயிறு, 7 ஜூன், 2015

தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.

உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள்
இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.

3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.

8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

9 . மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

10 . கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.

11. விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

12. முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.

வியாழன், 14 மே, 2015

கிளிமஞ்சாரோ !!!

கிளிமஞ்சாரோ என்பது, ஆப்ரிக்க நாட்டில் உள்ள தன்சானியாவில் அமைந்துள்ள பனி பொதிந்த ஒரு உயரமான மலைத் தொடர் ஆகும். இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த கீபோ, மாவென்ஸி, மற்றும் ஷிரா என்ற மூன்று ஆக்ரோஷமான எரிமலைகளின் எச்சங்கள் தான், கிளிமஞ்சாரோ மலைத்தொடர். ஷிரா மற்றும் மாவென்ஸி மலைகள் இறந்த எரிமலைகளாக கருதப்படுகின்றன. ஆனால், கீபோ மலையோ உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலை ஆகும். எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் உள்ளது.


இந்த கீபோ மலைத்தொடரில் தான், ஆப்ரிக்காவின் உயரமான சிகரமான உஹுரு உள்ளது. பளபளக்கும் மலை என்று செல்லமாக அழைக்கப் படும் கிளிமஞ்சாரோ மலை, பல்லாயிரக்கணக்கான வனவிலங்குகளின் உறைவிடம் ஆகும். ஒரு எல்லைக்கு அப்பால், மலை ஏறுபவர்களை பேய் பிசாசுகள் கொன்று விடும் என்ற மூட நம்பிக்கை இன்றும் நிலவுவதால், காட்டு வாசிகளும் இந்த மலை ஏற தயங்குகின்றனர், என்பதே மிகவும் ஆச்சர்யமான விஷயம் !

ஆனாலும், மனிதர்களின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் கண்டிப்பாக பலன் தரும் அல்லவா ? ஹான்ஸ் மேயர் என்ற ஜெர்மானியரும், ப்ருஷ்ஷேல்லர் என்ற ஆஸ்திரியரும், பல தடைகளைத் தாண்டி, 1889 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கீபோ மலை உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர்.

தற்போது இங்கு மலை ஏறும் துணிகரமான பயிற்சி அளிக்கப் பட்டாலும், மலை ஏறும் போது நேரும் விபத்துகளும், உயிர் பலிகளும் அதிகம் ஆகும். இதற்கு காரணம், கிளிமஞ்சாரோவின் செங்குத்தான மலைப்பாங்கும், வழுக்கும் ஐஸ் பாறைகளும் ஆகும்.

 ஆப்ரிக்காவில் வாழும் 'பண்ட்டு' இனத்தவரின் மொழி 'ஸ்வாஹிலி' ஆகும். இந்த மொழியில் ‘கிளிம’ என்றால் மலை என்றும் ‘ஞ்சரோ’ என்றால் உயர்ந்த என்றும் பொருள் படும். அதாவது, கிளிமஞ்சாரோ என்றால், உயர்ந்த மலை என்று பெயர் சூட்டியுள்ளனர்.

                                                    நன்றி இணையம் 

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

நார்சிஸ எண்கள்

கிரேக்கப் புராணக் கதையொன்றில் நார்சிசஸ் தனப் பிம்பத்திலேயே மயங்கிக் காதல் கொள்ளும் ஒரு இளைஞன். சில எண்கள் தம்மையே மயக்கும் பண்புகள் கொண்டவை. அவற்றை நார்சிஸ எண்கள் என்று பெயரிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஒரு எண்ணை அதே எண்ணின் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டு அமைப்பது ஒரு வகை. ஒரு எண்ணின் இலக்கங்களின் அடுக்குகளின் கூடுதலாக அவ்வெண் அமைவது அரிது. அவ்வகையில் உள்ளவற்றில் சில.

4624 = 44 + 46 + 42 + 44

4 என்ற எண்ணின் அடுக்குகளாக அந்த எண்ணின் இலக்கங்கள் அமைகின்றன.

மேலும் சில:

1033 = 81 + 80 + 83 + 83

595968 = 45 + 49 + 45 + 49 + 46 + 48

இவற்றைச் சரிபார்க்கவும்.

இது போல 3909511 என்ற எண்ணை 5-யின் அடுக்குகளாகவும், 13177388 என்ற எண்ணை 7-யின் அடுக்குகளாகவும், 52135640 என்ற எண்ணை 19-யின் அடுக்குகளாகவும் அமைத்துச் சரிபார்க்கவும்.

மற்றொரு வகை நார்சிஸ எண்களைக் காண்போம்:

3435 = 33 + 44 + 33 +55

இதில் இலக்கங்களின் அடுக்குகளின் கூடுதலாக எண் அமைந்துள்ளது,

இதே போன்ற பண்பு உள்ள மற்றொரு எண் 438579088 ஆகும்.

மற்றொரு வகையில் அடுக்குகள் எண்ணின் ஒன்றாம் இலக்கத்தினின்று தலைகீழாக அடுக்குகளை அமைப்பது.

எடுத்துக்காட்டாக, 48625 = 45 + 82 + 66 + 28 + 54

எண்ணின் இலக்கங்களின் வரிசைக்கு நேரெதிராக அடுக்குகள் அமைந்துள்ளன. இதே பண்பு உள்ள மற்றொரு எண் 397612. அடுக்குகள் வரிசை 2,1,6,7,9,3 ஆக அமையும்.

இவ்வகை எண்களை அடையாளம் கண்டவர்களில் பெரும்பாலோர் கணித அறிஞர்கள் இல்லை. கணித ஆர்வலர்கள். எண்களோடு விளையாடுவதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டவர். கணினியும், கால்குலேட்டரும் இல்லாத காலத்தில் வெறும் பேனாவும் காகிதமும் கொண்டு இக்கண்டுபிடிப்புகளைச் செய்தார்கள் என்பது வியப்பிற்குரியதல்லவா!

                                        --நன்றி சமூகவளைதளம் 

திங்கள், 20 ஏப்ரல், 2015

எண்களின் பிரபஞ்சம்

ஒரு எண் 1ஆலும் அதே எண்ணாலும் மீதியில்லாமல் வகுபட்டால் அந்த எண் முதன்மை எண் அல்லது பகா எண் எனப்படுகிறது. அப்படிப்பட்ட சில முதன்மை எண்களாக 2, 3, 5, 7, 11, 13, 17 ,19 ஆகியவை உள்ளன. அது சரி! ஆகப்பெரிய முதன்மை எண் எது? அதைக் கண்டுபிடிப்பது கணித விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய விளையாட்டு.

எண்களின் பிரபஞ்சம்

எண்களின் உலகமும் ஒரு எல்லையில்லாத பிரபஞ்சம்தான். மிகப் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பது என்பது எல்லையில்லாத பிரபஞ்சத்தின் எல்லையைக் காண முயலுகிற மணலைக் கயிறாகத் திரிக்கும் விஞ்ஞானத் துணிச்சல்தான்.

இப்படிப்பட்ட முதன்மை எண்களை கண்டுபிடிப்பதற்காக கிரேட் இன்டர்நெட் மெர்சேன் பிரைம் செர்ச் (Great Internet Mersenne Prime Search (GIMPS) என்ற கணினி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 1996-ல், ஜோர்ஜ் வோல்ட்மன் என்பவர் இதை உருவாக்கினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் சமீபத்தில் புதிதாக ஒரு முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 100 என்ற எண்ணில் மூன்று இலக்கங்கள் இருப்பது போல, புதிதாக கண்டுபிக்கப்பட்ட இந்த மா…பெரும் முதன்மை எண்ணில் 1 கோடியே 74 லட்சத்து 25ஆயிரத்து 170 இலக்கங்கள் உள்ளன.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

தெரிஞ்சுப்போமே...

- இசை ஒலித்தால் பூக்கள் வேகமாக வளரும் .

-உலகில் விற்பனை செய்யப்படும் மிகப் பெரிய உணவு ஒட்டகம் .

- இரட்டையர் ஒட்டிப் பிறப்பது 2 லட்சம் பிரசவங்களில் ஒருமுறைதான் நிகழ்கிறது .

-பெண் மின்மினிப் பூச்சிகளால் ஆண் பூச்சிகள் அளவுக்குப் பறக்க முடியாது. காரணம், அவற்றின் சிறகுகள் மிகச் சிறியவை.

- அமெரிக்காவில் ஒவ்வொரு 5 விநாடிகளுக்கும் 60 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

-சராசரி மனிதனால் 150 நபர்களை மட்டுமே நன்றாக நினைவில் வைத்திருக்க முடியும்.

-ஹிட்லரைக் கொல்ல 42 முறை முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், அவர் தற்கொலை செய்துகொண்டார்.

- முழுவதும் இரும்பால் செய்யப்பட்ட ஈபிள் கோபுரத்தின் மொத்த எடை பத்தாயிரம் டன்.

-சனி கிரகத்தின் வளையங்கள் பனியால் ஆனவை.

ஞாயிறு, 29 மார்ச், 2015

சூரிய ஒளி மின்சாரம் மூலம் நிலத்தை உழும் டிராக்டர்


சூரிய ஒளி மின்சாரம் மூலம் நிலத்தை உழும் டிராக்டரை விழுப்புரம் மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள மயிலம் பொறியியல் கல்லூரியில் எலக்ட் ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் பிரிவில் இறுதி யாண்டு படிக்கும் மாணவர்களான வி.பிரேம் நாத், கே.சிவராமன், ஐ.வெற்றிவேல், வி.கே.அருண் ஆகியோர் இணைந்து சூரிய ஒளி மின்சாரம் மூலம் நிலத்தை உழும் டிராக்டரை கண்டுபிடித்து அக்னி என்ஜினீயரிங் கல்லூரி நடத்திய போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளனர்.

விவசாயம் பிழைக்க விவசாயத்தில் உற்பத்தி செலவு அதிகரித்ததால் பலர் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். இதைத் தவிர்க்க எங்களால் முடிந்த உதவி செய்யும் வகையில், விவசாயத்தில் உள்ள இடர்பாடுகளை நானும் எனது நண்பர்களும் இந்த முயற்சியில் இறங்கினோம் என்கிறார் மாணவர் பிரேம்நாத். விழுப்புரத்தில் உள்ள தோட்டகலை இயக்குநரிடம் இது தொடர்பாக கலந்தாலோசனை நடத்தினோம். இதைத் தொடர்ந்து சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர் தொழில்நுட்பத்தை உருவாக்க முடிவு செய்தோம். துணை பேராசிரியர் ராஜபார்த்திபனின் ஆலோசனையின்படி இதற்கான முயற்சியில் இறங்கினோம். வழக்க மான டிராக்டரோடு ஒப்பிடுகையில் நாங்கள் வடிவமைத்த டிராக்டருக்கு எரிபொருள் செலவு இல்லை. எடை குறைவாக இருப்பதால் மண்ணில் உள்ள மண்புழுக்கள் போன்ற நுண்ணுயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்.

வயலின் வரப்பில் அமர்ந்து கொண்டு ரிமோட் மூலம் இந்த டிராக்டரை இயக்கலாம். நாங்கள் வடிவமைத்த டிராக்டரில் மூன்று சக்கரங்கள் இருக்கும். முன்புறம் அல்ட்ரா சென் ஸார் பொருத்தியுள்ளோம். இதனால் வயலில் கற்களோ, பாறைகளோ தென்பட்டால் வாகனம் தன் பாதையை மாற்றிக்கொள்ளும். மேலும் கலப்பை மேலே தூக்கிக் கொள்ளும்.

சனி, 28 மார்ச், 2015

புளூடூத் - வைஃபை : தெரிந்ததும், தெரியாததும் !

WiFI என்பது,என்ன?

இது ஒரு wireless local area network ஆகும்.

கணினி – இணையதள இணைப்புகளுக்கும், நெட்வொர்க்குகளுக்கும் இணைப்புகளை ஏற்படுத்திய கம்பிவழி தொழில்நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக வளர்ந்துள்ள புதிய பரிணாம வளர்ச்சியே வைஃபை என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இணைய இணைப்பு தொழில்நுட்பம் ஆகும்.

WiFI என்பதை wireless fidelity என பலரும் சொல்லி வந்தாலும்,அது உண்மையல்ல. WiFi க்குப் பொருள் கிடையாது.

அது ஒரு ஒரு பதிவு செய்யப்பட்ட, IEEE 802.11x. என்பதன் வர்த்தகக் குறியிடாகும்.

Institute of Electrical and Electronics Engineers (IEEE -Electrical and Electronics Engineers- 802.11 ) இவர்களே இந்த முறையை உருவாக்கினார்கள்.

WiFi என்பது sender - receiver களுக்கிடையில் radio frequency (RF) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, செயல்படும் முறையாகும்..

ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள சிறிய antenna வில் ஏற்படும், மின் காந்த அலைகளை (electromagnetic ) வைத்து, வானொலி அலைப்பரவல் ( radio wave propagation) ஊடக தொடர்புகள்(communication) வெளியே பரப்பப்பட்டு, பல இடங்களை சென்று (access point -AP -WAP) அடைகிறது.இந்த access point இல் கிடைக்கும், broadcast wireless signal களை கணினிகள் கண்டறிந்து ஏற்றுக் கொள்ளுகிறது.இதற்கு கணினி,devices என்பவை wireless network adapters களாக செயல்படுகிறது.

அதாவது கம்பியில்லாமல் வானொலி அலைகள் மூலம் இணையத் தொடர்பை, நெட்வொர்க் தொடர்புகளை, உயர் வேகம் கொண்ட வானொலி அலைகள் மூலம் இணைக்கும் முறை WiFi எனப்படுகிறது.

ஆனாலும் WiFi எனப் பொதுவாக சொல்லப்படும் தொடர்புகளை, wireless LAN (WLAN) மூலம் ஏற்படுத்தினாலும்,802.11 என்பதே சரியானதாகும்.இதை ரௌட்டர் உள்ளவர்கள், CMD – ipconfig -சென்று அங்குள்ள default Gateway இலக்கத்தை(198.168.178. ) பிரவுசரில் கொடுத்தால், அங்கே WiFi இல் செல்வோர் விபரங்களைக் காணலாம்.

இல்லையேல்,ipconfig/all அல்லது Who's On My Wifi ,Wireless Network Watcher போன்ற மென்பொருட்களை இணைத்தும் கண்டறியலாம்.இந்த WiFi இல்லாது கணினியில் உள்ள ad-hoc-mode மூலம் P2P முறையில் ஏற்படுத்தவும் முடியும். இது செயல்படும் தூரம் 30 மீ. இல் இருந்து, வானொலி அலைகளைப் பொறுத்து வேறுபடும்.

திங்கள், 23 மார்ச், 2015

முழு நிலா தோன்றாத மாதம்

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்துசெல்கிறது. ஆனால் அதை நாம் எந்த அளவுக்குக் கவனிக்கிறோமோ தெரியவில்லை. ரோமர்களின் மாதமான பெப்ருவரிஸ் என்பது லத்தீன் வார்த்தையான ஃபெப்ரும் என்பதிலிருந்து தோன்றியுள்ளது. ஃபெப்ரும் என்னும் சொல்லுக்குச் சுத்தப்படுத்துதல் என்பது பொருள்.

ஏனெனில் பழங்கால ரோமர்களின் காலண்டர் படி, இந்த மாதத்தின் 15-ம் தினமான பௌர்ணமி நாளன்றுதான் பாவம் நீக்கிச் சுத்தப்படுத்தும் சடங்கு அனுஷ்டிக்கப்படும். இதை அடிப்படையாகக் கொண்டே இந்த மாதத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ரோமர்களின் காலண்டரில் ஜனவரியும் பிப்ரவரியும்தாம் கடைசியாகச் சேர்க்கப்பட்ட மாதங்கள். ரோமர்களைப் பொறுத்தவரை குளிர்காலத்தைத் தொடக்கத்தில் மாதங்களற்ற காலமாகக் கடந்தார்கள். கி.மு. 450-ம் ஆண்டுவரை பிப்ரவரி ஆண்டின் கடைசி மாதமாகத் தான் இருந்துள்ளது.

அந்த ஆண்டுமுதல் தான் அது வருடத்தின் இரண்டாம் மாதம் ஆனது. பிப்ரவரி மாதத்துக்கு 23 அல்லது 24 நாள்கள் மட்டுமே இருந்துள்ளன. பருவ நிலைகளைச் சமாளிப்பதற்காக பிப்ரவரியைத் தொடர்ந்து 27 நாள்கள் கொண்ட மாதம் இடையில் செருகப்பட்டது.
v லீப் ஆண்டு

ஜூலியன் காலண்டரில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டபோது இப்படி இடையில் மாதத்தைச் செருகும் பழக்கம் முடிவுக்கு வந்தது. நான்காண்டுகளுக்கு ஒரு முறை 29 நாள்களைக் கொண்ட லீப் வருடம் என்று முடிவானது. ஒவ்வோர் ஆண்டிலும் பிப்ரவரி மாதம் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதே கிழமையில்தான் மார்ச், நவம்பர் மாதங்கள் பிறக்கின்றன. லீப் ஆண்டில் மட்டும் ஆகஸ்ட் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதே கிழமையில்தான் பிப்ரவரி மாதம் பிறக்கிறது.

திங்கள், 16 மார்ச், 2015

ஜீரோவின் வரலாறு

105 என்ற எண்ணை எப்படி எழுதியிருப்பார்கள்?

அபாகஸ் என்ற எண்சட்டத்தில் நூறுகளைக் குறிக்கும் வரிசையில் ஒரு மணியை மேலே தள்ளுவார்கள். பத்துகளைக் குறிக்கும் வரிசையில் எதையும் தள்ளாமல் வெறுமனே விடுவார்கள். ஒன்றுகளின் வரிசையில் ஐந்து மணிகளை மேலே தள்ளுவார்கள். அதைப் பார்ப்பவருக்கு 105 புரிந்துவிடும்.

அப்போதைய உலகில், எண் சட்டத்தைத் தவிர பலவிதமான எண் உருவங்களும் எண்கள் அமைப்புகளும் இருந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் 105 ஒவ்வொருவிதமாக எழுதப்பட்டது. உதாரணமாக எகிப்திலும் ரோமனிலும் இப்படி எழுதப்பட்டன.

ஆரம்ப ஜீரோ

இந்தியாவிலும் இத்தகைய எண்கள் அமைப்புமுறைகள்தான் இருந்தன. ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு எண் உருவம் இருந்தாக வேண்டும் என்ற மட்டத்தில்தான் ஆரம்பக் கட்டத்தில் மனித மூளை சிந்தித்தது.

ஜீரோ என்பது முதலில் ஒரு தனி எண்ணாகவும் பிறகு இடத்தைப் பொறுத்து மதிப்பு தரக்கூடிய எண்ணாகவும் மாறிய காலகட்டம் மிக நீண்டது.

1 முதல் 9 வரையிலான எண் உருவங்கள் போதும்.அவற்றோடு ஜீரோவை இணைத்து எல்லா எண்ணிக்கையையும் எழுதிவிட முடியும் என்ற சிந்தனை மனிதரிடம் படிப்படியாக நீண்டகாலப் போக்கில்தான் உருவாகி உள்ளது.

குறியீடுகள்

ஒன்றுமில்லை என்பதை எப்படிக் குறிப்பது? பழங்கால மனிதர்கள் பலவாறு சிந்தித்துள்ளனர். ஒன்றுமில்லை என்பதைக் குறிக்கச் சில குறியீடுகள் எகிப்தில் 3700 வருடங்களுக்கு முன்பாகவே இருந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு ஈராக் எனப்படும் பழைய மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த மக்களும் கிறிஸ்து பிறப்பதற்கு 300 வருடங்களுக்கு முன்பாகவே சில அடையாளக்குறிகளைப் பயன்படுத்திய ஆதாரங்கள் உள்ளன.

தென் அமெரிக்கக் கண்டத்தில், மாயன் நாகரிகத்தைப் பின்பற்றிய மக்கள் வசித்தனர். அவர்கள் கி.பி.முதலாம் நூற்றாண்டில் ஒன்றுமில்லை என்பதைக் குறிப்பதற்கு அடையாளக்குறியைப் பயன்படுத்தியுள்ளனர்.

புதன், 11 மார்ச், 2015

மின்னியல் நூலகம்

நூலகம் சென்று படிக்கும் ஆர்வம் சற்று குறைந்து வரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகங்கள் உருவாகி வருகின்றன. பெரிய நூல்களையும் அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களையும் ஒளி அச்சு முறையில் எடுத்தும் மின்னியல் நூலகத்தில் சேர்த்துள்ளார்கள். அதிலும் இந்திய மொழிகளில் தமிழ் நூல்களே அதிகமாக மின்பதிப்பாக்கம் பெற்றுள்ளன என்பது நமக்கெல்லாம் பெருமை.

உலக மின்னியல் நூலகம்

உலக மின்னியல் நூலகம் (http://catalog .crl.edu) என்பது, UNESCO மற்றும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் இணைந்து வழிநடத்தும் அனைத்துலக மின்னியல் நூலகமாகும். உலக மின்னியல் நூலகத்திற்கு உலகளாவிய அளவில் 30 - மேற்பட்ட தேசிய நூலகங்களோடும், கல்வி நூலகங்களோடும் ஒப்பந்த இணைப்பும் உள்ளன. இவையன்றி உலக மைய நூலகத்தில் 171 -நாடுகளிலுள்ள 72,000 நூலகங்கள் இணைக்கப் பட்டுள்ளன என்று முனைவர் கு. கல்யாணசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மின்னியல் நூலகம்

உலக மொழிகளில் கணிப்பொறியையும் இணையத்தையும் அதிகமாகப் பயன்படுத்தும் மொழிகளில் செம்மொழித் தமிழும் ஒன்று. இன்று இணையத்தில் மின்னியல் நூலகம் உருவாக்கி உலகத் தமிழ் மக்களுக்கும் பிற மொழியாளர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வது தமிழ் மொழியாகும். அந்த வகையில் தமிழ் மின்னியல் நூலகம் இணையத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளது.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தமிழ் மொழி ஆராய்ச்சிக்கென்று சிகாகோ பல்கலைக் கழகத்தினர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (http://www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html) என்ற பெயரில் 1994-ல் தொடங்கினர். இந்த ஆராய்ச்சி நூலகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான நூல்கள் இடம்பெற்றுள்ளன.

மதுரைத் திட்டம்

கே. கல்யாணசுந்தரம், முனைவர் பி. குமார் மல்லிகாருசுணன் என்ற இருவரால் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருக்குறள், அவ்வையார் பாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை (நெடுநல்வாடை, திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டுப் பாடல்கள், பாரதியார், வைரமுத்து கவிதைகள் படைப்புகள், உரைநூல்கள்) சுமார் 450 நூல்கள் இடம்பெற்றுள்ளன. (http://www.projectmadurai.org)

வெள்ளி, 6 மார்ச், 2015

பாடலின் வரிகள் - ஆத்தாடி ஆத்தாடி - அநேகன்

படம் :அநேகன் 
பாடல் : ஆத்தாடி ஆத்தாடி
பாடியவர்கள் : பவதாரிணி,திப்பு,தனுஷ் ,அபிய் ஜோத்புர்கர் 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 

ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காறி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒ.. ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்க வா

இது முதல் முதலாய் சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குரு குருப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகமிருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா

ஆத்தாடி....
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காறி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒ.. ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்க வா

ஞாயிறு, 1 மார்ச், 2015

உலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலை

உலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது நீரில் வளரும் இலை. உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால்கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. இன்னும் தெரியவில்லையா? அதன் பெயர் ‘விக்டோரியா ரிஜியா’.

பார்ப்பதற்குப் பெரிய தாம்பாளத் தட்டு போல காணப்படும் இது, அல்லி வகையைச் சார்ந்தது. இந்த இலை 3 மீட்டர் விட்டம் வரைகூட வளரும். சராசரியாக இலையின் குறுக்களவு 1.85 மீட்டர். வட்ட வடிவமான இலை மட்டுமே மேல்நோக்கி நீரில் காணப்படும். இதன் அடிப்பகுதியில் வளரும் தண்டு 7 முதல் 8 மீட்டர் நீளத்தில் இருக்கும். தண்டுப் பகுதி முழுவதும் தண்ணீருக்குள்ளேயே இருக்கும். இது மிகவும் வலுவாக இருக்கும். எனவேதான் இலையின் மேல் குழந்தை உட்கார்ந்தால்கூட இலையால் தாங்கிக் கொள்ள முடிகிறது!

இதன் பிறப்பிடம் இங்கிலாந்துதான். இந்த இலையைக் கண்ட விக்டோரியா மகாராணி, இதை ‘விக்டோரியா ரிஜியா’ என்று அழைத்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், இதன் உண்மையான பெயர் அமேசானிகா. ஆனாலும், இதை இப்போதும் விக்டோரியா ரிஜியா அமேசானிகா என்றே பலரும் அழைக்கிறார்கள். இங்கிலாந்தைத் தவிர்த்து பிரெஞ்சு கயானா, அமெரிக்காவிலும் இது அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக அமேசான் காட்டில் இந்த அல்லி வகை இலை அதிகம் உள்ளது. இந்தியாவிலும்கூட தாவரத் தோட்டங்கள் பராமரிக்கப்படும் சில இடங்களில் இந்த அல்லி இலையைப் பார்க்கலாம்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மாணவர்களுக்கான இணைய தளங்கள்

தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.

பொதுத்தளங்கள்

அனைத்துப்பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன .

www.waytosuccess.com

www.padasalai.net

www.Kalvisolai.com

தமிழ்

www.tamilpalli.wordpress.com

www.tamilasiriyarthanjavur.blogspot.com

www.ttkazhagam.com

இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறு கிறது. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.

Maths

www.tnkanitham.in

இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.

Science

www.tnteachers.com

இத்தளத்தில் அறிவியல் பாடக்குறிப்புகள் கிடைக்கும்.

                         ---நன்றி ஹிந்து நாளிதழ் 

வியாழன், 26 பிப்ரவரி, 2015

பௌர்ணமியும் அமாவாசையும்..


நிலா பூமியைச் சுத்தி வருதுன்னு நமக்கு தெரியும். அப்படி ஒருமுறை சுத்தி வர இருபத்தி ஒன்பதரை (29.5) நாட்கள் ஆகுது. இப்படி நிலா சுத்தி வர்றதால சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வருவதும், அப்புறம் சூரியனுக்கும் நிலாவுக்கும் இடையே பூமி வருவதும் மாத்தி மாத்தி நடக்கும்.

பூமி மேல சூரிய ஒளி படுறதைப் போல, நிலா மேலேயும் சூரிய ஒளி படுது. அதனால் ஏற்படற எதிரொளிப்பதான் நிலாவோட வெளிச்சமா நாம பார்க்குறோம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும்போது, அதன் மேல விழும் வெளிச்சத்தை நாம பார்க்க முடியாது. அதனால அந்த நேரத்துல நமக்கு நிலா தெரியாது. இதைத்தான் ‘அமாவசை’னு சொல்றோம்.

அதுக்குப் பிறகு கொஞ்சமா கொஞ்சமா நிலா நகர நகர, அதன் மேல சூரிய ஒளி விழுற பரப்பும் அதிகரிக்கும். அப்போ ஒவ்வொரு நாளும் நிலா வளர்ந்துகிட்டே போறது போல இருக்கும். இதத்தான் வளர்பிறைன்னு சொல்றோம்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்திய வரலாறு!!



இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன.

அதாவது,
ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை

ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).

ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்).

ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்).

ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை).

ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை).

ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.

வியாழன், 19 பிப்ரவரி, 2015

கம்ப்யூட்டர் - ஹார்ட் ட்ரைவ்

பல நேரங்களில், நாம் கம்ப்யூட்டரில் எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல், வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது ஹார்ட் ட்ரைவ் என்ன செய்திடும்? அதுவும் எந்த வேலையும் மேற்கொள்ளாமல், செயல்படாமல் இருக்குமா? அப்படி என்றால், அதன் செயலாக்கத்தினைக் காட்டும் சிறிய எல்.இ.டி. விளக்கு ஏன் தொடர்ந்து அணைந்து எரிகிறது? இந்த கேள்விகள் மனத்தில் எழுந்தாலும், நாம் பதில் காண முற்படுவதில்லை. இந்த சூழ்நிலைகளை இங்கு சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

நாம் கம்ப்யூட்டரை விட்டு சற்று விலகிச் செல்கையில், கம்ப்யூட்டர் நாம் மீண்டும் வந்து பணியினைத் தொடங்க காத்திருக்கிறது. ஆனால், காத்திருக்கும் அந்த நேரத்திலும் அது வழக்கமான தன் வேலையினை மேற்கொண்டு தான் உள்ளது. இந்த வேலைகளை மேற்கொள்ள அதனை இயக்கும் வகையில் யாரும் தேவை இல்லை. எனவே, கம்ப்யூட்டரின் திறன், நீங்களாக அதனை இயக்கும் வகையில், பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அப்படியானால், நாம் மறுபடியும் வந்து, மீண்டும் நம் பணியைத் தொடரும்போது, ஹார்ட் ட்ரைவில் மேற்கொள்ளப்படும் வேலை அப்படியே நின்றுவிடுமா? ஆம், அப்போதைக்கு அது ஒத்தி வைக்கப்படும். ஏனென்றால், நாம் தொடரும் வேலையினை மேற்கொள்ள. அப்படி என்ன வேலையை அது பார்த்துக் கொண்டிருந்தது. அதனை நாம் கண்காணித்து அல்லது தேடிப் பார்க்க இயலுமா? முடியாது. ஹார்ட் ட்ரைவில் நாம் இல்லாத போது, மேற்கொள்ளப்பட்ட பணியினை நாம் கண்டறிய முடியாது. அப்படியானால், அந்தப் பணிகள் தான் என்ன? இங்கு பார்க்கலாம்.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

ஒரே மாதிரி இருக்காங்களே !!!

உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கனு சொல்வாங்க..இங்க ஒரே மாதிரி இருக்குற ரெண்டுபேரை பாருங்க..அதுவும் அவங்க நமக்கு தெரிஞ்ச பிரபலங்களா இருந்தா ??






திங்கள், 2 பிப்ரவரி, 2015

நுரையீரலை சுத்தம் செய்யலாம் வாங்க !!!

மூன்றே நாளில் உங்களின் நுரையீரலை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். இதோ, அதற்கான வழிகள்...
* சுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு வரும்போது முதலில் பால் பொருட்கள் அனைத்தையும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

* முதல் நாளுக்கு முன் இரவு தூங்க செல்லும் முன் ஒரு கப் மூலிகை டீ குடிக்க வேண்டும். இது உடலிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

* முதல் நாள், காலை உணவுக்கு முன்பு 300 மில்லி நீரில் 2 எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிக்கலாம்.

* இரண்டாம் நாள், காலை வேளையில் அன்னாசி பழ சாறை அருந்தலாம்.

* மூன்றாம் நாள், காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் 300 மில்லி கேரட் ஜூஸை குடிக்கலாம்.

* உண்ணும் உணவில் அதிகமான பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடலிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். மூலிகை டீ குடிப்பதால் நுரையீரலில் எந்த தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

* தினமும் 20 நிமிடங்கள் குளிப்பதால் உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியேறும். வியர்வையின் மூலமாக நச்சுக்களும் வெளிவரும். காலை மற்றும் மாலை என குளிப்பதை 10 நிமிடங்களாக பிரித்துக் கொள்ளலாம்.

* 5 துளி யூக்கலிப்டஸ் தைலத்தை நீரில் விட்டும் குளிக்கலாம். வாரம் ஒருமுறை யூக்கலிப்டஸ் தைலத்தை 2 நிமிடங்கள் வரை சுவாசிக்கலாம்.


                                                 ---     நன்றி விகடன்

வியாழன், 29 ஜனவரி, 2015

விரல் நுனியில் கணிதம் !!!


விரல் (கணிதம்) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள், (கயிறு, கம்பு, துணி...) நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் (ஓரளவு சிறியதான) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய அலகுகளுள் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகியவை பரவலானவை. ஒவ்வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மாறுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவை முறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு மனிதரின் கையில் அமைந்துள்ள ஒரு விரலின் அகலம், ஒரு விரல் அல்லது விரற்கடை அளவாகும். நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை எனப்படும்.

இருபத்து நான்கு விரல் கொண்டது ஒரு முழம் ஆகும். விரல் பன்னிரண்டு கொண்டது ஒரு சாண். சாண் இரண்டு கொண்டது ஒரு முழம்.

1 விரல் = 1/24 முழம் = 1/24 * 18 அங்குலம் = 3/4 அங்குலம்

1 விரல் = 1/12 சாண் =1/12 * 9 அங்குலம் =3/4 அங்குலம்

                                         -- நன்றி தமிழும் சித்தர்களும்

திங்கள், 26 ஜனவரி, 2015

வெள்ளி, 23 ஜனவரி, 2015

யார் சொன்னது பெண்கள் ஆண்களுக்காக ஒரு செங்கல்லைக் கூட நட்டு வைத்தது இல்லை என்று?


மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய காதல் சின்னத்தைப் போலவே, (அதை விட அழகாகவும் , கிணற்றைப் போல தரைக்கு அடியில் இருந்தும் )முதலாம் பீமதேவரின் நினைவாக அவர் மனைவி உதயமதி கட்டிய நினைவகம் குஜராத்தில் உள்ளது. உதயமதி இதைக்கட்ட ஆரம்பித்தாலும் 1050 -இல் கட்டிமுடித்தவர் அவள் மகன் முதலாம் கரன்தேவ்.இந்தக் கிணற்றில் இருந்து கிட்டத்தட்ட 30 கிமீ தூரத்துக்கு ஒரு சுரங்கவழி உள்ளது. கல்லால் ஆன குழாய்கள் போடப்பட்டு அருகே உள்ள சித்பூர் என்ற நகர் வரை சென்றிருக்கிறது. இது தண்ணீர் செல்லும் வழியா, தப்பிச்செல்லும் வழியா என்று சொல்லமுடியவில்லை. இந்தியாவின் மிக நீளமான சுரங்க வழியும் இதுவே.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!!!



மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.

1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது. இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’ விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்.

இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம். இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன. அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

புதன், 7 ஜனவரி, 2015

குங்குமம் தயாரிப்பது எப்படி??


மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். புள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று. எலுமிச்சையை கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்க கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்க வேண்டும். நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாகசேர்க்க வேண்டும்.

இக்கலவையினை நிழலில் காய வைக்கவேண்டும். இதுவே குங்குமப்பொடி. குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது.தலை வகிட்டுமுனையிலும் பெண்கள் அணிகிறார்கள்.நெற்றியில் புரவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை.இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும்.நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.

நெற்றியின் புரவ மத்திக்க நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக Pineal gland எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது.இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள்.இதனைநெற்றிக்கண் எனலாம்.இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும். தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும்.ஞானக் கண் என்றம் அழைக்கப்படும். அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.

அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்தக்கொண்டனர். இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.

குங்கமத்தை நான் ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.

இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.

நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும்.ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.
மின்கடத்தும் தன்மைநமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடு தான் உபயோகிக்கிறார்கள். அதுமட்டுமில்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

பஸ் பயணமும் நியூட்டன் விதியும்

நியூட்டனோட முதல் இயக்க விதிப்படி புதுசா ஒரு விசை தாக்காத வரையில இயக்கத்துல உள்ள ஒரு பொருள் இயங்கிகிட்டேதான் இருக்கும்.அதேபோல் நிலையா உள்ள பொருள் நிலையாவே இருக்கும். இதை நிலைமம் என்றும் சொல்வாங்க.

பஸ் 40 கிலோ மீட்டர் வேகத்துல போய்கிட்டு இருக்கும்போது, அந்த பஸ்ஸுக்குள்ள இருக்கிற எல்லா பொருளுமே 40 கிலோ மீட்டர் வேகத்துலதான் பயணம் செஞ்சுகிட்டு இருக்கும். பஸ்ஸுக்குள்ள இருக்குற நாமும் அதே வேகத்துலேதான் பயணம் செய்வோம். திடீர்னு பிரேக் போடுறப்ப பஸ் என்னவோ உடனே நின்னுடும். ஆனா நாம தொடர்ந்து அதே 40 கி.மீ. வேகத்துலேயே பயணம் செய்துகிட்டு இருக்கறதாலதான் தடுமாறி முன் பக்கமா விழுறோம். அதைச் சமாளிக்கத்தான் கம்பியைப் பிடிக்கறோம்.

இது மட்டுமில்ல. ஓடற பஸ் நிக்கிறதுக்கு முன்னாடியே சிலர் படியிலேர்ந்து இறங்கறதையும், அப்படி இறங்கும்போது கீழே விழந்து காயமடைவதையும் பார்த்திருப்போம். அதுக்கும் இதுதான் காரணம். 40 கி.மீ வேகத்துல இயங்கிட்டு இருக்கற உடம்பு, திடீர்னு தன் இயக்கத்தை நிறுத்தும்போதும் தடுமாற்றம் ஏற்படும்.

அதனாலதான் ஓடுற பஸ்ஸில் இருந்து இறங்குறவங்க பஸ் எந்த திசையில ஓடுதோ அதே திசையிலே கொஞ்ச தூரம் ஓடினா பெரும்பாலும் கீழே விழ மாட்டாங்க. ஆனா இதெல்லாம் தெரியாத பலர், பஸ் ஓடற திசைக்கு எதிர் திசையில இறங்கி, தடுமாறி கீழே விழுந்துடறாங்க.

நின்னுக்கிட்டு இருக்கற பஸ், திடீர்னு ஸ்டார்ட் ஆனதும் ஏன் நாம எல்லாம் பின் பக்கமா விழுறோம் தெரியுமா?