பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மாணவர்களுக்கான இணைய தளங்கள்

தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.

பொதுத்தளங்கள்

அனைத்துப்பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன .

www.waytosuccess.com

www.padasalai.net

www.Kalvisolai.com

தமிழ்

www.tamilpalli.wordpress.com

www.tamilasiriyarthanjavur.blogspot.com

www.ttkazhagam.com

இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறு கிறது. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.

Maths

www.tnkanitham.in

இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.

Science

www.tnteachers.com

இத்தளத்தில் அறிவியல் பாடக்குறிப்புகள் கிடைக்கும்.

                         ---நன்றி ஹிந்து நாளிதழ் 

வியாழன், 26 பிப்ரவரி, 2015

பௌர்ணமியும் அமாவாசையும்..


நிலா பூமியைச் சுத்தி வருதுன்னு நமக்கு தெரியும். அப்படி ஒருமுறை சுத்தி வர இருபத்தி ஒன்பதரை (29.5) நாட்கள் ஆகுது. இப்படி நிலா சுத்தி வர்றதால சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வருவதும், அப்புறம் சூரியனுக்கும் நிலாவுக்கும் இடையே பூமி வருவதும் மாத்தி மாத்தி நடக்கும்.

பூமி மேல சூரிய ஒளி படுறதைப் போல, நிலா மேலேயும் சூரிய ஒளி படுது. அதனால் ஏற்படற எதிரொளிப்பதான் நிலாவோட வெளிச்சமா நாம பார்க்குறோம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும்போது, அதன் மேல விழும் வெளிச்சத்தை நாம பார்க்க முடியாது. அதனால அந்த நேரத்துல நமக்கு நிலா தெரியாது. இதைத்தான் ‘அமாவசை’னு சொல்றோம்.

அதுக்குப் பிறகு கொஞ்சமா கொஞ்சமா நிலா நகர நகர, அதன் மேல சூரிய ஒளி விழுற பரப்பும் அதிகரிக்கும். அப்போ ஒவ்வொரு நாளும் நிலா வளர்ந்துகிட்டே போறது போல இருக்கும். இதத்தான் வளர்பிறைன்னு சொல்றோம்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்திய வரலாறு!!



இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன.

அதாவது,
ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை

ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).

ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்).

ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்).

ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை).

ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை).

ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.

வியாழன், 19 பிப்ரவரி, 2015

கம்ப்யூட்டர் - ஹார்ட் ட்ரைவ்

பல நேரங்களில், நாம் கம்ப்யூட்டரில் எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல், வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது ஹார்ட் ட்ரைவ் என்ன செய்திடும்? அதுவும் எந்த வேலையும் மேற்கொள்ளாமல், செயல்படாமல் இருக்குமா? அப்படி என்றால், அதன் செயலாக்கத்தினைக் காட்டும் சிறிய எல்.இ.டி. விளக்கு ஏன் தொடர்ந்து அணைந்து எரிகிறது? இந்த கேள்விகள் மனத்தில் எழுந்தாலும், நாம் பதில் காண முற்படுவதில்லை. இந்த சூழ்நிலைகளை இங்கு சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

நாம் கம்ப்யூட்டரை விட்டு சற்று விலகிச் செல்கையில், கம்ப்யூட்டர் நாம் மீண்டும் வந்து பணியினைத் தொடங்க காத்திருக்கிறது. ஆனால், காத்திருக்கும் அந்த நேரத்திலும் அது வழக்கமான தன் வேலையினை மேற்கொண்டு தான் உள்ளது. இந்த வேலைகளை மேற்கொள்ள அதனை இயக்கும் வகையில் யாரும் தேவை இல்லை. எனவே, கம்ப்யூட்டரின் திறன், நீங்களாக அதனை இயக்கும் வகையில், பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அப்படியானால், நாம் மறுபடியும் வந்து, மீண்டும் நம் பணியைத் தொடரும்போது, ஹார்ட் ட்ரைவில் மேற்கொள்ளப்படும் வேலை அப்படியே நின்றுவிடுமா? ஆம், அப்போதைக்கு அது ஒத்தி வைக்கப்படும். ஏனென்றால், நாம் தொடரும் வேலையினை மேற்கொள்ள. அப்படி என்ன வேலையை அது பார்த்துக் கொண்டிருந்தது. அதனை நாம் கண்காணித்து அல்லது தேடிப் பார்க்க இயலுமா? முடியாது. ஹார்ட் ட்ரைவில் நாம் இல்லாத போது, மேற்கொள்ளப்பட்ட பணியினை நாம் கண்டறிய முடியாது. அப்படியானால், அந்தப் பணிகள் தான் என்ன? இங்கு பார்க்கலாம்.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

ஒரே மாதிரி இருக்காங்களே !!!

உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கனு சொல்வாங்க..இங்க ஒரே மாதிரி இருக்குற ரெண்டுபேரை பாருங்க..அதுவும் அவங்க நமக்கு தெரிஞ்ச பிரபலங்களா இருந்தா ??






திங்கள், 2 பிப்ரவரி, 2015

நுரையீரலை சுத்தம் செய்யலாம் வாங்க !!!

மூன்றே நாளில் உங்களின் நுரையீரலை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். இதோ, அதற்கான வழிகள்...
* சுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு வரும்போது முதலில் பால் பொருட்கள் அனைத்தையும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

* முதல் நாளுக்கு முன் இரவு தூங்க செல்லும் முன் ஒரு கப் மூலிகை டீ குடிக்க வேண்டும். இது உடலிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

* முதல் நாள், காலை உணவுக்கு முன்பு 300 மில்லி நீரில் 2 எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிக்கலாம்.

* இரண்டாம் நாள், காலை வேளையில் அன்னாசி பழ சாறை அருந்தலாம்.

* மூன்றாம் நாள், காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் 300 மில்லி கேரட் ஜூஸை குடிக்கலாம்.

* உண்ணும் உணவில் அதிகமான பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடலிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். மூலிகை டீ குடிப்பதால் நுரையீரலில் எந்த தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

* தினமும் 20 நிமிடங்கள் குளிப்பதால் உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியேறும். வியர்வையின் மூலமாக நச்சுக்களும் வெளிவரும். காலை மற்றும் மாலை என குளிப்பதை 10 நிமிடங்களாக பிரித்துக் கொள்ளலாம்.

* 5 துளி யூக்கலிப்டஸ் தைலத்தை நீரில் விட்டும் குளிக்கலாம். வாரம் ஒருமுறை யூக்கலிப்டஸ் தைலத்தை 2 நிமிடங்கள் வரை சுவாசிக்கலாம்.


                                                 ---     நன்றி விகடன்