பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 29 மார்ச், 2015

சூரிய ஒளி மின்சாரம் மூலம் நிலத்தை உழும் டிராக்டர்


சூரிய ஒளி மின்சாரம் மூலம் நிலத்தை உழும் டிராக்டரை விழுப்புரம் மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள மயிலம் பொறியியல் கல்லூரியில் எலக்ட் ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் பிரிவில் இறுதி யாண்டு படிக்கும் மாணவர்களான வி.பிரேம் நாத், கே.சிவராமன், ஐ.வெற்றிவேல், வி.கே.அருண் ஆகியோர் இணைந்து சூரிய ஒளி மின்சாரம் மூலம் நிலத்தை உழும் டிராக்டரை கண்டுபிடித்து அக்னி என்ஜினீயரிங் கல்லூரி நடத்திய போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளனர்.

விவசாயம் பிழைக்க விவசாயத்தில் உற்பத்தி செலவு அதிகரித்ததால் பலர் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். இதைத் தவிர்க்க எங்களால் முடிந்த உதவி செய்யும் வகையில், விவசாயத்தில் உள்ள இடர்பாடுகளை நானும் எனது நண்பர்களும் இந்த முயற்சியில் இறங்கினோம் என்கிறார் மாணவர் பிரேம்நாத். விழுப்புரத்தில் உள்ள தோட்டகலை இயக்குநரிடம் இது தொடர்பாக கலந்தாலோசனை நடத்தினோம். இதைத் தொடர்ந்து சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர் தொழில்நுட்பத்தை உருவாக்க முடிவு செய்தோம். துணை பேராசிரியர் ராஜபார்த்திபனின் ஆலோசனையின்படி இதற்கான முயற்சியில் இறங்கினோம். வழக்க மான டிராக்டரோடு ஒப்பிடுகையில் நாங்கள் வடிவமைத்த டிராக்டருக்கு எரிபொருள் செலவு இல்லை. எடை குறைவாக இருப்பதால் மண்ணில் உள்ள மண்புழுக்கள் போன்ற நுண்ணுயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்.

வயலின் வரப்பில் அமர்ந்து கொண்டு ரிமோட் மூலம் இந்த டிராக்டரை இயக்கலாம். நாங்கள் வடிவமைத்த டிராக்டரில் மூன்று சக்கரங்கள் இருக்கும். முன்புறம் அல்ட்ரா சென் ஸார் பொருத்தியுள்ளோம். இதனால் வயலில் கற்களோ, பாறைகளோ தென்பட்டால் வாகனம் தன் பாதையை மாற்றிக்கொள்ளும். மேலும் கலப்பை மேலே தூக்கிக் கொள்ளும்.

சனி, 28 மார்ச், 2015

புளூடூத் - வைஃபை : தெரிந்ததும், தெரியாததும் !

WiFI என்பது,என்ன?

இது ஒரு wireless local area network ஆகும்.

கணினி – இணையதள இணைப்புகளுக்கும், நெட்வொர்க்குகளுக்கும் இணைப்புகளை ஏற்படுத்திய கம்பிவழி தொழில்நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக வளர்ந்துள்ள புதிய பரிணாம வளர்ச்சியே வைஃபை என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இணைய இணைப்பு தொழில்நுட்பம் ஆகும்.

WiFI என்பதை wireless fidelity என பலரும் சொல்லி வந்தாலும்,அது உண்மையல்ல. WiFi க்குப் பொருள் கிடையாது.

அது ஒரு ஒரு பதிவு செய்யப்பட்ட, IEEE 802.11x. என்பதன் வர்த்தகக் குறியிடாகும்.

Institute of Electrical and Electronics Engineers (IEEE -Electrical and Electronics Engineers- 802.11 ) இவர்களே இந்த முறையை உருவாக்கினார்கள்.

WiFi என்பது sender - receiver களுக்கிடையில் radio frequency (RF) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, செயல்படும் முறையாகும்..

ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள சிறிய antenna வில் ஏற்படும், மின் காந்த அலைகளை (electromagnetic ) வைத்து, வானொலி அலைப்பரவல் ( radio wave propagation) ஊடக தொடர்புகள்(communication) வெளியே பரப்பப்பட்டு, பல இடங்களை சென்று (access point -AP -WAP) அடைகிறது.இந்த access point இல் கிடைக்கும், broadcast wireless signal களை கணினிகள் கண்டறிந்து ஏற்றுக் கொள்ளுகிறது.இதற்கு கணினி,devices என்பவை wireless network adapters களாக செயல்படுகிறது.

அதாவது கம்பியில்லாமல் வானொலி அலைகள் மூலம் இணையத் தொடர்பை, நெட்வொர்க் தொடர்புகளை, உயர் வேகம் கொண்ட வானொலி அலைகள் மூலம் இணைக்கும் முறை WiFi எனப்படுகிறது.

ஆனாலும் WiFi எனப் பொதுவாக சொல்லப்படும் தொடர்புகளை, wireless LAN (WLAN) மூலம் ஏற்படுத்தினாலும்,802.11 என்பதே சரியானதாகும்.இதை ரௌட்டர் உள்ளவர்கள், CMD – ipconfig -சென்று அங்குள்ள default Gateway இலக்கத்தை(198.168.178. ) பிரவுசரில் கொடுத்தால், அங்கே WiFi இல் செல்வோர் விபரங்களைக் காணலாம்.

இல்லையேல்,ipconfig/all அல்லது Who's On My Wifi ,Wireless Network Watcher போன்ற மென்பொருட்களை இணைத்தும் கண்டறியலாம்.இந்த WiFi இல்லாது கணினியில் உள்ள ad-hoc-mode மூலம் P2P முறையில் ஏற்படுத்தவும் முடியும். இது செயல்படும் தூரம் 30 மீ. இல் இருந்து, வானொலி அலைகளைப் பொறுத்து வேறுபடும்.

திங்கள், 23 மார்ச், 2015

முழு நிலா தோன்றாத மாதம்

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்துசெல்கிறது. ஆனால் அதை நாம் எந்த அளவுக்குக் கவனிக்கிறோமோ தெரியவில்லை. ரோமர்களின் மாதமான பெப்ருவரிஸ் என்பது லத்தீன் வார்த்தையான ஃபெப்ரும் என்பதிலிருந்து தோன்றியுள்ளது. ஃபெப்ரும் என்னும் சொல்லுக்குச் சுத்தப்படுத்துதல் என்பது பொருள்.

ஏனெனில் பழங்கால ரோமர்களின் காலண்டர் படி, இந்த மாதத்தின் 15-ம் தினமான பௌர்ணமி நாளன்றுதான் பாவம் நீக்கிச் சுத்தப்படுத்தும் சடங்கு அனுஷ்டிக்கப்படும். இதை அடிப்படையாகக் கொண்டே இந்த மாதத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ரோமர்களின் காலண்டரில் ஜனவரியும் பிப்ரவரியும்தாம் கடைசியாகச் சேர்க்கப்பட்ட மாதங்கள். ரோமர்களைப் பொறுத்தவரை குளிர்காலத்தைத் தொடக்கத்தில் மாதங்களற்ற காலமாகக் கடந்தார்கள். கி.மு. 450-ம் ஆண்டுவரை பிப்ரவரி ஆண்டின் கடைசி மாதமாகத் தான் இருந்துள்ளது.

அந்த ஆண்டுமுதல் தான் அது வருடத்தின் இரண்டாம் மாதம் ஆனது. பிப்ரவரி மாதத்துக்கு 23 அல்லது 24 நாள்கள் மட்டுமே இருந்துள்ளன. பருவ நிலைகளைச் சமாளிப்பதற்காக பிப்ரவரியைத் தொடர்ந்து 27 நாள்கள் கொண்ட மாதம் இடையில் செருகப்பட்டது.
v லீப் ஆண்டு

ஜூலியன் காலண்டரில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டபோது இப்படி இடையில் மாதத்தைச் செருகும் பழக்கம் முடிவுக்கு வந்தது. நான்காண்டுகளுக்கு ஒரு முறை 29 நாள்களைக் கொண்ட லீப் வருடம் என்று முடிவானது. ஒவ்வோர் ஆண்டிலும் பிப்ரவரி மாதம் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதே கிழமையில்தான் மார்ச், நவம்பர் மாதங்கள் பிறக்கின்றன. லீப் ஆண்டில் மட்டும் ஆகஸ்ட் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதே கிழமையில்தான் பிப்ரவரி மாதம் பிறக்கிறது.

திங்கள், 16 மார்ச், 2015

ஜீரோவின் வரலாறு

105 என்ற எண்ணை எப்படி எழுதியிருப்பார்கள்?

அபாகஸ் என்ற எண்சட்டத்தில் நூறுகளைக் குறிக்கும் வரிசையில் ஒரு மணியை மேலே தள்ளுவார்கள். பத்துகளைக் குறிக்கும் வரிசையில் எதையும் தள்ளாமல் வெறுமனே விடுவார்கள். ஒன்றுகளின் வரிசையில் ஐந்து மணிகளை மேலே தள்ளுவார்கள். அதைப் பார்ப்பவருக்கு 105 புரிந்துவிடும்.

அப்போதைய உலகில், எண் சட்டத்தைத் தவிர பலவிதமான எண் உருவங்களும் எண்கள் அமைப்புகளும் இருந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் 105 ஒவ்வொருவிதமாக எழுதப்பட்டது. உதாரணமாக எகிப்திலும் ரோமனிலும் இப்படி எழுதப்பட்டன.

ஆரம்ப ஜீரோ

இந்தியாவிலும் இத்தகைய எண்கள் அமைப்புமுறைகள்தான் இருந்தன. ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு எண் உருவம் இருந்தாக வேண்டும் என்ற மட்டத்தில்தான் ஆரம்பக் கட்டத்தில் மனித மூளை சிந்தித்தது.

ஜீரோ என்பது முதலில் ஒரு தனி எண்ணாகவும் பிறகு இடத்தைப் பொறுத்து மதிப்பு தரக்கூடிய எண்ணாகவும் மாறிய காலகட்டம் மிக நீண்டது.

1 முதல் 9 வரையிலான எண் உருவங்கள் போதும்.அவற்றோடு ஜீரோவை இணைத்து எல்லா எண்ணிக்கையையும் எழுதிவிட முடியும் என்ற சிந்தனை மனிதரிடம் படிப்படியாக நீண்டகாலப் போக்கில்தான் உருவாகி உள்ளது.

குறியீடுகள்

ஒன்றுமில்லை என்பதை எப்படிக் குறிப்பது? பழங்கால மனிதர்கள் பலவாறு சிந்தித்துள்ளனர். ஒன்றுமில்லை என்பதைக் குறிக்கச் சில குறியீடுகள் எகிப்தில் 3700 வருடங்களுக்கு முன்பாகவே இருந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு ஈராக் எனப்படும் பழைய மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த மக்களும் கிறிஸ்து பிறப்பதற்கு 300 வருடங்களுக்கு முன்பாகவே சில அடையாளக்குறிகளைப் பயன்படுத்திய ஆதாரங்கள் உள்ளன.

தென் அமெரிக்கக் கண்டத்தில், மாயன் நாகரிகத்தைப் பின்பற்றிய மக்கள் வசித்தனர். அவர்கள் கி.பி.முதலாம் நூற்றாண்டில் ஒன்றுமில்லை என்பதைக் குறிப்பதற்கு அடையாளக்குறியைப் பயன்படுத்தியுள்ளனர்.

புதன், 11 மார்ச், 2015

மின்னியல் நூலகம்

நூலகம் சென்று படிக்கும் ஆர்வம் சற்று குறைந்து வரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகங்கள் உருவாகி வருகின்றன. பெரிய நூல்களையும் அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களையும் ஒளி அச்சு முறையில் எடுத்தும் மின்னியல் நூலகத்தில் சேர்த்துள்ளார்கள். அதிலும் இந்திய மொழிகளில் தமிழ் நூல்களே அதிகமாக மின்பதிப்பாக்கம் பெற்றுள்ளன என்பது நமக்கெல்லாம் பெருமை.

உலக மின்னியல் நூலகம்

உலக மின்னியல் நூலகம் (http://catalog .crl.edu) என்பது, UNESCO மற்றும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் இணைந்து வழிநடத்தும் அனைத்துலக மின்னியல் நூலகமாகும். உலக மின்னியல் நூலகத்திற்கு உலகளாவிய அளவில் 30 - மேற்பட்ட தேசிய நூலகங்களோடும், கல்வி நூலகங்களோடும் ஒப்பந்த இணைப்பும் உள்ளன. இவையன்றி உலக மைய நூலகத்தில் 171 -நாடுகளிலுள்ள 72,000 நூலகங்கள் இணைக்கப் பட்டுள்ளன என்று முனைவர் கு. கல்யாணசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மின்னியல் நூலகம்

உலக மொழிகளில் கணிப்பொறியையும் இணையத்தையும் அதிகமாகப் பயன்படுத்தும் மொழிகளில் செம்மொழித் தமிழும் ஒன்று. இன்று இணையத்தில் மின்னியல் நூலகம் உருவாக்கி உலகத் தமிழ் மக்களுக்கும் பிற மொழியாளர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வது தமிழ் மொழியாகும். அந்த வகையில் தமிழ் மின்னியல் நூலகம் இணையத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளது.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தமிழ் மொழி ஆராய்ச்சிக்கென்று சிகாகோ பல்கலைக் கழகத்தினர் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (http://www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html) என்ற பெயரில் 1994-ல் தொடங்கினர். இந்த ஆராய்ச்சி நூலகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான நூல்கள் இடம்பெற்றுள்ளன.

மதுரைத் திட்டம்

கே. கல்யாணசுந்தரம், முனைவர் பி. குமார் மல்லிகாருசுணன் என்ற இருவரால் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருக்குறள், அவ்வையார் பாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை (நெடுநல்வாடை, திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டுப் பாடல்கள், பாரதியார், வைரமுத்து கவிதைகள் படைப்புகள், உரைநூல்கள்) சுமார் 450 நூல்கள் இடம்பெற்றுள்ளன. (http://www.projectmadurai.org)

வெள்ளி, 6 மார்ச், 2015

பாடலின் வரிகள் - ஆத்தாடி ஆத்தாடி - அநேகன்

படம் :அநேகன் 
பாடல் : ஆத்தாடி ஆத்தாடி
பாடியவர்கள் : பவதாரிணி,திப்பு,தனுஷ் ,அபிய் ஜோத்புர்கர் 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 

ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காறி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒ.. ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்க வா

இது முதல் முதலாய் சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குரு குருப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகமிருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா

ஆத்தாடி....
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காறி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒ.. ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்க வா

ஞாயிறு, 1 மார்ச், 2015

உலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலை

உலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது நீரில் வளரும் இலை. உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால்கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. இன்னும் தெரியவில்லையா? அதன் பெயர் ‘விக்டோரியா ரிஜியா’.

பார்ப்பதற்குப் பெரிய தாம்பாளத் தட்டு போல காணப்படும் இது, அல்லி வகையைச் சார்ந்தது. இந்த இலை 3 மீட்டர் விட்டம் வரைகூட வளரும். சராசரியாக இலையின் குறுக்களவு 1.85 மீட்டர். வட்ட வடிவமான இலை மட்டுமே மேல்நோக்கி நீரில் காணப்படும். இதன் அடிப்பகுதியில் வளரும் தண்டு 7 முதல் 8 மீட்டர் நீளத்தில் இருக்கும். தண்டுப் பகுதி முழுவதும் தண்ணீருக்குள்ளேயே இருக்கும். இது மிகவும் வலுவாக இருக்கும். எனவேதான் இலையின் மேல் குழந்தை உட்கார்ந்தால்கூட இலையால் தாங்கிக் கொள்ள முடிகிறது!

இதன் பிறப்பிடம் இங்கிலாந்துதான். இந்த இலையைக் கண்ட விக்டோரியா மகாராணி, இதை ‘விக்டோரியா ரிஜியா’ என்று அழைத்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், இதன் உண்மையான பெயர் அமேசானிகா. ஆனாலும், இதை இப்போதும் விக்டோரியா ரிஜியா அமேசானிகா என்றே பலரும் அழைக்கிறார்கள். இங்கிலாந்தைத் தவிர்த்து பிரெஞ்சு கயானா, அமெரிக்காவிலும் இது அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக அமேசான் காட்டில் இந்த அல்லி வகை இலை அதிகம் உள்ளது. இந்தியாவிலும்கூட தாவரத் தோட்டங்கள் பராமரிக்கப்படும் சில இடங்களில் இந்த அல்லி இலையைப் பார்க்கலாம்.