பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 21 அக்டோபர், 2015

செல்பேசிக்கு வரும் வேண்டாத அழைப்புகளை நிறுத்தலாம்

எந்த வேண்டாத அழைப்புகளையும் அல்லது குறுஞ்செய்திகளையும் (BSNL / AIRTEL / AIRCEL and Etc) செல்பேசிக்கு வராமல் தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு 1909 என்ற இலவசத் தொடர்பு எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ செய்தால் போதும்.

நீங்கள் விரும்பாமலே உங்களுக்கு இடம் வாங்க விரும்புகிறீர்களா என்ற ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், லோன் வேண்டுமா என்ற தனியார் வங்கி விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற தொந்தரவுகள் தரும் அனைத்து துறை சார்ந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற உங்களுக்கு வரும் விளம்பரத் தொடர்புகளை நிறுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

1.முற்றிலுமாக நிறுத்துவது: எந்த விளம்பரங்களையும் அழைப்புகளாகவோ, குறுஞ்செய்திகளாகவோ ஏற்க விருப்பமில்லை அல்லது நிறுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முற்றிலுமாக நிறுத்தும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

2.பகுதி மட்டும் நிறுத்துவது: பகுதியாக நிறுத்துவதெனில் கீழ்க்கண்டவற்றில் எவை தேவைப்படுகிறதோ அவற்றின் எண்ணை மட்டுமோ அல்லது ஒன்றை மட்டுமோ அல்லது இரண்டு, மூன்று பிரிவுகளையுமோ கூட தேர்ந்தெடுக்கவும்.

START 1 & வங்கி / காப்பீடு / நிதி தொடர்பானவை

START 2 & ரியல் எஸ்டேட் தொடர்பானவை

START 3 & கல்வி தொடர்பானவை

START 4 & உடல்நலம் தொடர்பானவை

START 5 & நுகர்பொருட்கள் / ஆட்டோமொபைல் தொடர்பானவை

START 6 & தொலைத்தொடர்பு / ஒளிபரப்பு / பொழுதுபோக்கு / ஐ.டி. தொடர்பானவை

START 7 & சுற்றுலா தொடர்பானவை



இதை குறிப்பிட்டு 1909 என்ற எண்ணுக்கு அழைபேசியில் தெரிவிக்கவும் அல்லது குறுஞ்செய்தி அனுப்ப விரும்பினால் முழுமையாக நிறுத்துவதற்கு START 0 என்றும் ஒரு சில வகைகளை மட்டும் நிறுத்துவதற்கு அந்த வரிசை எண்ணைத் தவிர மற்றவற்றைக் குறிப்பிட்டு உதாரணமாக START 2,3 (ரியல் எஸ்டேட், கல்வி) டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.இப்படி பதிவு செய்ததும் உங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தனிப்பட்ட எண் (Unique Number ) ஒன்று குறுஞ்செய்தியில் வரும்.

தேசிய வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் (‡National Customer Preference Register) பதிந்த ஒரு வாரத்திற்குள் உங்களது வேண்டுகோள் ஏற்கப்பட்டு வேண்டாத விளம்பர அழைப்புகள் நிறுத்தப்படும்.

ஏற்கெனவே (‡National Do Not Call Registry) NDN ‡இல் பதிவு செய்திருந்தால் மீண்டும் நீங்கள் குறுஞ்செய்தியோ, அழைப்போ செய்தால் அது முழுமையாக நிறுத்தப்படும் பிரிவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும் (‡NDNC தான் தற்போது ‡NCPR ஆக பெயர் மாற்றப்பட்டுள்ளது).

தொந்தரவுகள் தொடர்ந்தால்... ‡NCPR இல் பதிந்து ஏழு நாட்களுக்குப் பிறகும் ஏதேனும் வேண்டாத விளம்பர அழைப்புகள் வந்தால் அந்த எண்ணைக் குறிப்பிட்டு அதைப் புகாராகப் பதிவு செய்யலாம். மூன்று நாட்களுக்குள் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும். வணிக நோக்கமில்லாத தகவல் ஏதேனும் வந்தால் அந்த நிறுவனத்தின் பெயர், தொலைபேசி எண், அழைப்பு வந்த தேதி, நேரம் (ரயில்வே நேரத்தைக் குறிப்பிட வேண்டும். மதியம் 4 மணி எனில் 16 என்று குறிப்பிடவேண்டும்) மற்றும் பேசிய விஷயத்தின் நோக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் புகாரளிக்கவும். புகாரளிப்பதற்கும் 1909 என்ற எண்ணையே இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். புகாரைப் பெற்றதற்கான எண்ணையும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இது சம்பந்தமான புகார்கள் ஏழு நாட்களில் தீர்க்கப்பட்டுவிடும்.

நீங்கள் முன்னர் தேர்ந்தெடுத்த பிரிவினை மாற்ற வேண்டுமெனில் அதாவது இரண்டாவது பிரிவான கல்வி சம்பந்தப்பட்ட விளம்பரங்களை வேண்டாம் எனப் பதிவு செய்திருந்து மீண்டும் வேண்டும் என விரும்பினால் அதற்கும் வழி இருக்கிறது. முன்னர் பதிவு செய்து மூன்று மாதங்கள் முடிந்த பின்னர் மீண்டும் உங்களது குறுஞ்செய்தியை உறுதி செய்வார்கள். அதை மீண்டும் உறுதி செய்யலாம் அல்லது அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்தும் அனுப்பலாம். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் புதிதாக பதிவு செய்ய அறிவுறுத்தப்படும்.

உங்கள் வேண்டுகோளை திரும்பப் பெற விரும்பினால் பதிவு செய்து மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி ‡NCPR லிருந்து வரும். அதாவது உங்கள் வேண்டுகோள் 24 மணி நேரத்திற்குப் பின் திரும்பப் பெறப்பட்டுவிடும் என்று வரும். அதை உறுதி செய்யாமல் விட்டால் மீண்டும் வழங்குநர் வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் உங்கள் எண் சேர்க்கப்பட்டுவிடும் அல்லது STOP என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு தேவைப்படுகிற வரிசை எண்ணைக் கொடுத்தால் அதுகுறித்த அழைப்புகள் வரத் துவங்கும்.

இந்த சேவையைப் பெறுவதற்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது.

ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்ததும் தானியங்கி இயந்திரம் மூலம் செல்பேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் இதன் மூலம் தடுக்கப்படாது. அதேபோல ஆன்லைனில் பொருள் வாங்கும்போதோ, ஏதேனும் தளத்தில் பதிந்து கடவுச்சொல் சரிபார்த்தலுக்கோ, பேருந்து, ரயில் முன்பதிவுக்கான குறுந்தகவலோ வருவது இதன் மூலம் பாதிக்கப்படாது.

எப்படி இது சாத்தியம் என்றால் ,எல்லா விளம்பரத் தொடர்புகளும் டிராயில் பதிவு செய்யப்பட்டிருக்கும். டிராயிடம் அனுமதி பெறாமல் விளம்பரங்கள் அழைப்பாகவோ, குறுஞ்செய்தியாகவோ வராது. இப்படி விளம்பரதாரர்கள் பதிவு செய்யும்போது டிராய்க்கு பணம் செலுத்தவேண்டும். அதனால் நீங்கள் வேண்டாம் என்றால் அதை நிறுத்தவும், வேண்டும் என்றால் தொடரவும் டிராய்க்கு சாத்தியமாகிறது.

எந்தெந்த விளம்பர நிறுவனங்கள் டிராயிடம் பதிவு செய்திருக்கின்றன என்பதை http://www.nccptrai.gov.in/nccpregistrylistoftmstateanddistrict.misc?method=loadStates என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பதிவு செய்வதற்கு, அழைப்புகளைத் தடுப்பதற்கு, விருப்பத்தைத் திரும்பப் பெறுவதற்கு, புகாரைப் பதிவு செய்வதற்கு அனைத்துக்கும் 1909 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். பதிவு செய்யப்பட்ட குரலின் வழிகாட்டுதலின்படியோ Interactive Voice Response System (IVRS) அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பலாம்.

எப்படி புகாரைப் பதிவு செய்வது என்பதை கீழ்க்கண்ட தளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளவும். http://www.nccptrai.gov.in/nccpregistry/How%20to%Register%20complaint.pdf?reqtrack=UcGCjkQNUmAwhxyUdaWZlieLC

மேலும் தகவலுக்கு http://www.nccptrai.gov.in/nccpregistry/ என்ற தளத்தைப் பார்க்கவும் அல்லது helplene@nccptrai.gov.in என்ற மின்னஞ்சலிலோ 011-24305726, 011-23212032 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளவும்.



                                                       ---நன்றி வார இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக