பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 29 டிசம்பர், 2016

அர்ஜுனனும் ஆணவமும் !!



பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்.

தேரை விட்டு இறங்கு! என்றார்.

மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய்.இது என்ன நியாயம்?

அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ""தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன்.

வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.

அப்போது அவர், தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்! என்றார் அதட்டலுடன்!

அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது.

ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான்.

வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார்.

அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது.

பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்! என்றார் புன்முறுவலுடன்.

'தேர் ஏன் எரிந்தது?' அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.

அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர்.அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன.தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்து அனுமனும் புறப்பட்டு விட்டான்.அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது.தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய்.வெற்றி பெற்றதும் "நான்' என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது.ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே என்று அறிவுரை கூறினார்.

தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !

வெள்ளி, 23 டிசம்பர், 2016

மிதக்கும் பாலம்


சீனாவில் ஒரு வித்தியாசமான பாலத்தை தண்ணீரின் மீது கட்டியிருக்கிறார்கள். முழுக்க மரத்தினால் கட்டப்பட்ட இந்த மிதக்கும் பாலம், மத்திய சீனா ஹூபாய் மாகாணத்தில் ஓடும் ஒரு நதியின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நடைப் பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்தவாறே இயற்கையை ரசிக்கலாம்.

வியாழன், 17 நவம்பர், 2016

ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்...

சிலர் இதை அறிந்திருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும்.

எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன. மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.


பஞ்சபூத ஸ்தலம்:
நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
நீர் - திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்
ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில்
காற்று - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்

செவ்வாய், 1 நவம்பர், 2016

செம்புல இத்தனை இருக்கா?



செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன. ரத்தத்தில் செம்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது. இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செம்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்..

புதன், 19 அக்டோபர், 2016

சுவிட்சர்லாந்து டு ஜெர்மனி – 8 நிமிடம் தான்!

சுவிட்சர்லாந்து டு ஜெர்மனி – 8 நிமிடம் தான்! இதுதான் மிக குறைந்த நேர சர்வதேச விமான சேவை!

இந்த விமான சேவை, சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலனில் இருந்து ஜெர்மனியின் பிரைட்ரிச்ஷபென் வரை என அறிவித்துள்ளது இந்த நிறுவனம்.

கான்ஸ்டன்ஸ் ஏரியின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்லும் இந்த விமானத்தின் பாதை தொலைவு வெறும் 20 கிலோமீட்டர் மட்டுமே. இந்த விமான பயனத்திற்கு 40 யூரோக்கள் செலவாகும் என கூறப்படுகிறது. இந்த இரு ஊர்களுக்கு இடையே ரயில் வழியாக சென்றால் கூட 1 மணி நேரம்தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் ஆஸ்திரியா, வியன்னாவில் இருந்து ஸ்லோவாக்கின் பிரட்ஸ்லாவா வரை இயக்கப்பட்ட விமானம் தான் மிக குறைந்த நேர சர்வதேச விமான சேவையாக இருந்தது. இதன் தொலைவு 50 கிலோமீட்டர் மற்றும் விமான பயண நேரம் 10 நிமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.


                                  ----நன்றி சமூக வலைத்தளம் 

வியாழன், 13 அக்டோபர், 2016

காரணம் இல்லமா சொல்லல பெரியவங்க !!!

1.தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.


2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.


3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.


4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

Whatsapp Update !!

வாட்ஸ் அப்-பில் 2.16.272 என்ற புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட அந்த அப்டேட் மூலம் இனி வாட்ஸ் அப்-பில் குழு சாட் செய்யும் போது, குழு உறுப்பினர்களை தனியாக Tag செய்யலாம்.


எவ்வாறு Tag செய்வது?

குழுவில் மெசேஜ் அனுப்பும் போது அந்த மெசேஜினை பேஸ்புக், டிவிட்டரில் tag செய்ய உபயோகிக்கப்படும் ‘@’ என்ற குறியீட்டை பயன்படுத்தும் போது நமது contacts list-ல் உள்ள பெயர்கள் தோன்றும், இவ்வாறு நாம் நமது நண்பர்களுக்கு குறிப்பிட்ட மெசேஜினை tag செய்யலாம். ஒன்றிற்கு மேற்பட்ட நண்பர்களுக்கும் tag செய்யலாம்.

நமது வாட்ஸ்ஸப் உரையாடல்களை இவ்வசதி மேலும் சுவாரஸ்யம் ஆக்கும் என்பது உறுதி.

மேலும், நீங்கள் tag செய்யும் உங்களுடைய நண்பர் அக்குழுவினை mute செய்திருந்தாலும் கூட அவருக்கு அறிவிப்பு செய்தி (Notification message) திரையில் தோன்றும்.
                       
                                        ----நியூஸ் 7

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

வாட்ஸ்ஆப் அப்டேட் பண்ணினீங்களா? இதை கவனிச்சீங்களா?


வாட்ஸ்ஆப் அப்டேட் செஞ்சீங்கனா அப்போ  share info with Face Book -னு ஒரு option வரும் அதை agree பண்ணவேணாம்.ஒரு வேல அப்படி பண்ணிருந்தீங்கனா , Settings போங்க Account செலக்ட் பண்ணுங்க ,அங்க     ''Share my account info "-னு option இருக்கும் அதுல இருக்குற டிக் மார்க் -கை எடுத்துவிட்டுடுங்க.ஏன்னா இந்த டிக் இருந்தா நம்மோட வாட்ஸ்ஆப் தகவல்கள் எல்லாம் பேஸ்புக் கணக்கோட பகிர்ந்து கொள்ளபடும்..அதாவது நாம பயன்படுத்துற வார்த்தை வச்சு நமக்கு ஏத்தமாதிரி விளம்பரம் பேஸ்புக் கணக்குல விளம்பரம் பயன்படுத்தப்படுமாம். உதாரணமாக திருமணம் பற்றிய வார்த்தைகளை பகிர்ந்து கொண்டால் matrimonial தளங்கள் பற்றிய விளம்பரம் பேஸ்புக்ல் நமக்கு கிடைக்குமாம்.இதுவும்  வியாபாரம் செய்யும் பணி இதுனு சொல்றாங்க.



வெள்ளி, 9 செப்டம்பர், 2016

ரீ-யூனியன்தீவு

தமிழ்நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம் தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம் ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப்பகுதி ஒன்று. சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன்! சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு, ஆப்பிரிக்ககண்டத்திற்கு கிழக்கே – இந்து மகா கடலில்,மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு. பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத்தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி. உலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும் இடங்களில் ஒன்று – இந்த ரீயூனியன்தீவு…!!!


சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45கிலோமீட்டர் அகலமும் உள்ள மொத்தமாக 2500 சதுரகிலோமீட்டர் பரப்பளவே உள்ள இந்ததீவின் மொத்த மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு சுமார் ஒன்றரை லட்சம்….!!! 170-180 ஆண்டுகளுக்கு முன்னால் பிழைப்பு தேடி தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றதமிழர்களின் சந்ததியினர் இவர்கள். உலகில் தமிழகத்திற்கு வெளியே சென்ற தமிழர்களில் மிகவும் மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சாதியப் பாகுபாடுகளில்லாமல் சம உரிமை பெற்று வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள்…!!!

பாண்டிசேரி பிரெஞ்சுப் பிரதேசமாக இருந்தபோது 1827 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 25வருடங்கள் தொடர்ச்சியாக, பாண்டிச்சேரி, காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், போன்றபகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் அப்போதைய நாட்களில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த ரீ யூனியன் தீவில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச்செல்லப்பட்டார்கள். இரண்டும் பிரெஞ்சுப் பிரதேசங்களாக இருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை…..!!

சிலர் இலங்கையில் (யாழ்ப்பாணம்)) இருந்தும் குடியேறினார்கள். இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் சந்ததியினர். ஆரம்பத்தில் ஒப்பந்தக்கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும், பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும் பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக்கொண்டது. இவர்கள்அனைவரும் இன்று சமஉரிமை பெற்று மகிழ்ச்சியான பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கிறார்கள். பிரெஞ்சுத் தமிழர்கள்என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள்….!

ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரங்களுடன் ஒன்று கலந்து விட்டாலும், இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப்பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள். தைப்பூசம், பங்குனி உத்திரம், காவடியாட்டம், கரகாட்டம், காளியம்மன், முருகன், சிவன்எல்லாம் இவர்களை இன்னமும் தமிழுடன் இணைத்து வைத்திருக்கின்றனர்…!

அத்தனையையும் இப்போதும் விடாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரம் இருந்தாலும், வீட்டுக்குள் இன்னமும் தமிழ் வாழ்கிறது. தமிழ் நாட்டிலிருந்து கலாச்சார தொடர்பை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு தாய்த் தமிழகத்திடம் உள்ள ஒரே வேண்டுகோள் – அவர்களுக்கு தமிழும், இசையும், நடனமும், இலக்கியமும் கற்றுத்தர தாய்த்தமிழகம் உதவ வேண்டும் என்பது தான் !!

அற்புதமான இயற்கை வளம் நிரம்பியது ரீயூனியன் . இதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக் குழம்பைக் கக்கியுள்ள இரண்டு எரிமைலைகள் இந்த தீவின் சிறப்பம்சம் – ஒன்று சுமார் 2600 மீட்டர் உயரமுள்ளது. மற்றொன்று 3200 மீட்டர் உயரமுள்ளது. இந்த எரிமலைகளின் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. ரீ யூனியனின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் அதன் மழை வளம்….! 1966 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிக்கு இடைப்பட்ட 24 மணி நேரங்களில், இங்கு 1,870 மில்லிமீட்டர் (சுமார் 73.6இஞ்ச் ) மழை பெய்தது ஒரு உலக ரெக்கார்டு – இதுவரை முறியடிக்கப்படவில்லை.

                                                              --- நன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் 

திங்கள், 5 செப்டம்பர், 2016

மிதக்கும் பாறை(Floating Rock).....


இந்த பாறை ஒவ்வொரு வருடமும் வசந்த(every spring) காலத்தில் குறிப்பிட்ட நாளில் சில வினாடிகள் மட்டும் தரையில் இருந்து சற்று மேலே எழும்பி மிதந்து மீண்டு தரையை அடையும் . இந்த பாறை மேகாலயாவில் உள்ளது. 

புதன், 24 ஆகஸ்ட், 2016

இந்த நாடும் நாட்டு மக்களும் ......... !!!


ரியோ-வில் நடந்த 2016-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில badminton-ல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவுல வெள்ளிப் பதக்கம் வென்றது நம்ம எல்லாருக்குமே தெரியும்..ரொம்ப சந்தோசம்..இந்தியாவுக்கே பெருமை .அவங்களுக்கு நம்மோட வாழ்த்துக்கள் .

ரெண்டு நாளுக்கு முன்னாடி நியூஸ்ல ஒன்னு பாத்தேன்..ஹைதாராபாத்ல பிறந்த சிந்து என்ன caste -னு கூகிள்-ல அதிகமா தேடப்பட்டுருக்குனு பாத்தப்போ நொந்தே போயிட்டேன்..ஆந்திராவை இரண்டு மாநிலங்களா பிரிச்சதால இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்னு ரெண்டு மாநிலத்தாரும் சண்டைப்போட்டுக்கிறதா கூட பாத்தேன்..

அடப்பாவிகளா !! யாராவது ஏதாவது சாதிச்சா அவங்க எந்த மொழி பேசுறவங்க , எந்த மாநிலத்துக்காரங்கனா பாப்பீங்க . இந்தியாவுக்கே பெருமை சேர்த்த ஒரு பொண்ணை இந்தியனா மட்டும் பாக்க மாட்டீங்களா? ஏதாவது ஒன்னு சாதிச்சுட்டா உடனே தமிழன்டா , தெலுங்கன்டா , மலையாளிடா , கன்னடக் காரன்டா , குஜராத்திக்காரன்டா , மராத்திக்காரன்டானு நமக்குள்ள எப்பையுமே வேறுபாடுதான் இருக்கே தவிர ஒற்றுமைனு ஒன்னு இல்லையே.

நமக்குள்ள இல்லாத இந்த ஒற்றுமையை வச்சுத்தான் அந்தகாலத்துல தொழில் செய்ய நாட்டுக்குள்ள வந்த வெள்ளைக்காரன்  மொத்தமா நம்மள அடிமையாக்கி வச்சுருந்தாங்க.இன்னமும் நாம அப்படியேதானே இருக்கோம்..

என்னமோ அந்த பொண்ணுக்கு உங்கபையனை கல்யாணம் பண்ணித்தரப் போற மாதிரி caste ஏன்யா செக் பண்ணிவச்சுருக்கீங்க?

இது ஒரு பக்கம்னா , வெள்ளிப்பதக்கம் வாங்கின சிந்து அவர்களுக்கு,சாக்க்ஷி அவர்களுக்கு இவ்வளவு பணம் தரோம், அவ்ளோ பணம் தரோம், கார் தரோம், அரசு வேலை தரோம்,வீடு தரோம், lifelong travel பண்ண இலவச டிக்கெட் தரோம்னு இவ்ளோ பண்றீங்களே ,ஜெயிச்சாதான் வசதி பண்ணித்தருவீங்க? ஜெயிக்க வசதி பண்ணி தரமாட்டீங்க..

இப்போ இவ்ளோ பணம் கொடுக்குற நீங்க விளையாட்டு துறையில சாதிக்க கூடியவங்க யாரு , திறமை இருந்தும் வெளில வரமுடியாதவங்க யாரு ,  வறுமையில் வாடுற எவ்ளோ பேர் திறமை இருந்தும் வசதி இல்லாத காரணத்தால முன்னேற முடியாம இருக்காங்க  அவங்களுக்கு  உதவி பண்ணி அவங்கள மேல கொண்டுவருவோம் , அவங்கள ஊக்கப் படுத்தி முன்னேற வச்சு விளையாட்டுல ஜெயிக்க வைப்போம்னு இதுலாம் செய்ய தோணல இல்ல உங்களுக்கு??!

சரி இன்னொரு விஷயத்துக்கு வருவோம் , இப்படி சில பல வருஷத்துக்கு முன்னாடி ஜெயிச்சு பரிசு எல்லாம் வாங்கி பெருமை சேர்த்த சிலரோட  இன்றைய நிலைமை எவ்வளவு மோசமா இருக்குனும் படிக்கிறோம்..  அவ்ளோதான் அப்பறம் அவங்கள கண்டுக்க மாட்டோம் .. ஜெயிச்ச அப்போ மட்டும் தான் அவங்களுக்கு இருக்குறது எல்லாம் கொடுத்து பெருமை படுத்துறோம்ங்குற பேர்ல நம்மள உசத்திக் காட்டிக்குறது.. தோத்தாலும் இல்ல அவங்க வயசானாலும்/retired ஆனாலும் அவங்கள்லாம் கண்டுக்க மாட்டோம்..  ஆனா அரசியல்வாதிங்க மட்டும் ஜெயிச்சாலும் ரொம்ப ரொம்ப வசதியா இருப்பாங்க தோத்தாலும் வசதியா இருப்பாங்க..அவங்கமட்டும் ஒருதரம் ஜெயிச்சுட்டா போதும் வாழ்நாள் முழுசும் இல்ல அடுத்த தலைமுறை வரைக்கும் வசதியா, நல்லா இருப்பாங்க ..
ஆனா இதுமாதிரி சாதிச்சவங்க அந்த சமயத்துல மட்டும் தான் lime light-ல இருப்பாங்க..அப்பறம் காணாப்போயிடுவாங்க.

எல்லாத்துலயும் அரசியல் , எல்லாத்துலயும் ஊழல் , இதுல ஒரு நாட்டுக்காரங்கனு  எண்ணம் கூட நமக்கு வராது .அப்பறம் எப்படி .....???!!!

அவங்க இப்படி இருக்குறதால நாம இப்டி இருக்கோமா? இல்ல நாம இப்படி இருக்குறதை அவங்க சரியா use பண்ணிக்குறாங்களானு தெரியல.. ஆனா கடைசியில நஷ்டம் நமக்குதான்னு மட்டும் நமக்கு புரியமாட்டேங்குது .. என்னத்த சொல்ல . ??!!!



இந்த நாடும் நாட்டு மக்களும் ......... !!!


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

2. Fried இட்லி



என்ன என்ன பொருட்கள் தேவை?

1. இட்லி
2. கடுகு
3. சீரகம்
4. உப்பு
5. கருவேப்பிலை
6. சாம்பார் பொடி
7. மிளகாய்ப்பொடி

எப்படி செய்யணும் ?

இட்லியை சின்ன சின்ன துண்டுகளா வெட்டி வச்சுக்கணும்..வாணல்ல எண்ணெய் ஊத்தி எண்ணை காஞ்சதும் கடுகு , சீரகம்,  கருவேப்பிலை  போட்டு தாளிக்கணும்.அடுத்து அதுல வெட்டி வச்ச இட்லியை போட்டு fry பண்ணனும்.அடுத்து அதுல தேவையான அளவு உப்பு , கொஞ்சம் சாம்பார் பொடி  , கொஞ்சம் மிளகாய் பொடி போட்டு நல்லா mix பண்ணனும்.இத அப்டியே  2 நிமிஷம்  வேகவைச்சு எடுத்து சூடா பரிமாறனும்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

1. பச்சை பட்டாணி தேங்காய் மசாலா




என்ன என்ன பொருள் வேணும் ?

1. எண்ணெய்
2. கடுகு
3. உளுந்து
4. இஞ்சி பூண்டு விழுது / இஞ்சி பூண்டு நசுக்கியது
5. தேங்காய்
6. பச்சை மிளகாய்
7. உப்பு

எப்படி செய்றது ?

பச்சை பட்டாணியை 3 மணிநேரம் நல்லா ஊறவச்சு , உப்பு சேர்த்து குக்கர்ல 3 அ 4 விசில் விட்டு வேகவைச்சு எடுத்துக்கணும்.

தேங்காய்,பச்சை மிளகாயை மிக்ஸியில போட்டு நல்லா விழுதாக்கிக்கணும்.

வாணல்ல கொஞ்சம் என்னை ஊத்தி ,எண்ணெய் காஞ்சதும் கடுகு ,உளுந்து போட்டு தாளிக்கணும்.அடுத்து அதுல இஞ்சி பூண்டு விழுது/நசுக்கியது போட்டு வதக்கனும்.  அரைச்ச தேங்காய்,பச்சை மிளகாய் விழுதை அதுல சேத்து நல்லா பச்சை வாசனை போகுறவரைக்கும் வதக்கனும்.
அடுத்து அதுல வேகவச்ச பச்சை பட்டாணியை சேத்து அந்த மசாலாக்கள் பட்டாணியில் நல்லா ஒண்ணா கலக்கவைக்கணும். ..கடைசியா கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி சூடா பரிமாறுங்க  ..

சத்தான ருசியான ரொம்ப சீக்கிரம் செய்யக்கூடிய ஒரு ரெசிபி மட்டும் இல்ல இது உங்களுக்கு பாராட்டையும் வாங்கித்தர ஒரு  ரெசிபி.





தமிழ் !!!





புதன், 10 ஆகஸ்ட், 2016

உலகிலேயே பிரமாண்டமான விமானம்!

 உக்ரேன் நட்டில் தயாரிக்காபட்ட 'Antonov An-225 Mriya', உலகெலேயே மிகப் பெரிய விமானம். ஆறு இயந்திரங்கள் கொண்ட இந்த விமானத்தின் எடை சுமார் 600 டன். இதன் இறக்கை, போயிங் 747 ரக விமானத்தைவிட இருமடங்கு பெரியது. 42 டயர்கள் கொண்ட இந்த விமானம் உக்ரேன் நாட்டில் இருந்து சுமார் 117 டன் எடைக்கொண்ட மின்சார ஜெனரேட்டர் ஒன்றை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு கொண்டுவந்துள்ளது.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

உலகின் மிகவும் குட்டி நாடு


இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த சீலேண்ட்  நாடு.
இரண்டாம் உலகப் போர் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் அல்லவா?

அப்படி அந்தப் போர் தொடங்கியபோது 1942-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கடலில் குட்டித் துறைமுகத்தைக் கட்டியது.
கடலில் இரும்பு மற்றும் வலுவான கான்கிரீட்டைப் பயன்படுத்தி இந்த துறைமுகத்தைக் கட்டியிருக்கிறார்கள்.
போரில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் போடுவதற்காக இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
போர் முடிவடைந்த பிறகும் 1956-ம் ஆண்டு வரை ரப் டவர் எனப் பெயரிட்டு இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பின்னர் இந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.
1967-ம் ஆண்டில் இந்த இடத்துக்கு பேட்டி ராய் பேட்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இந்தத் துறைமுகத்துக்குப் போய்த் தங்கிவிட்டார். இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர்.
இங்கு வந்த பேட்ஸ், ‘பிரின்ஸிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்’ என்று அந்த இடத்துக்குப் பெயரை வைத்தார். அங்கிருந்து ராய் பேட்ஸை அனுப்பப் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிறைய முயற்சி செய்தார்கள். ஆனால், அவரை அங்கிருந்து அனுப்ப முடியவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால், இந்தத் துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

இதன்பிறகு ராய் பேட்ஸ் 1975-ம் ஆண்டில் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார். இந்த நாட்டுக்கென்று தனியாகக் கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.


கடலுக்குள்ள ஒரு குட்டி கட்டிடத்தில்தான் இந்த நாடே இருக்கிறது.

ஒரு முறை பேட்ஸூம் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்குப் போனபோது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள்.

பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளையர்களை விரட்டினார்கள். 1987-ம் வருடத்தில் பிரிட்டிஷ் அரசு கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை அவர்களுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனாலும் முடியவில்லை.

சீலேண்டின் இளவரசராக ராய் பேட்ஸ் செயல்பட்டு நிர்வாகமும் செய்து வந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு பேட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அப்போது முதல் சீலேண்ட் நாட்டின் இளவரசராகப் பேட்ஸின் மகன் மைக்கேல் இருந்து வருகிறார்.



தற்போது இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் குட்டிக் கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள். ஞாபகச் சின்னங்கள் போன்றவற்றை இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்துக்கொண்டுதான் வர வேண்டும்.






புதன், 27 ஜூலை, 2016

இந்த படம் நான் பாத்துட்டேன் நீங்க? - கபாலி


கபாலி படத்தை பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் ஏற்கனவே வந்துடுச்சு.இது தலைவர் படம் இல்ல ,நாங்க ரஜினிகாந்தை இப்படி திரையில எதிர்பாக்கலைனு சொன்னவங்கங்களுக்கு உண்மையிலயே ரசிக்க தெரியலைனு தான் சொல்ல தோணுது..நாம எப்போதான் வளரப்போறோமோ தெரியல!!!

ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகன்..அது ஆரம்பகாலத்திலேயிருந்து அவரோட படத்தை பார்த்தவர்களுக்கு நல்லாவே தெரியும்.அதுலயும் திரு.பாலச்சந்தர்,திரு.பாலுமகேந்திரா,திரு.மகேந்திரன் போன்ற இயக்குநர்களோட இயக்கத்துல திரு.ரஜினி நடிச்ச படங்களை பாக்கும்போது ரொம்ப நல்லாவே தெரியும்.

ஒரு கட்டத்துல இவர் மாஸ் ஹிட்க்குள்ள நுழைஞ்சுட்டார்..அப்போதிலிருந்து இவர்கிட்ட அதுமாதிரி மசாலா படங்களை ரசிகர்கள் எதிர்பாக்க ஆரம்பிச்சுட்டாங்க..அதே சமயம் அவரோட நடிப்புக்காக ,அவரோட நடிப்பை விரும்பி பாத்தவங்க கொஞ்சம் விலகிட்டாங்கனு சொல்றதுதான் உண்மை..

அவரும் இத்தனை வருஷம் opening song ஒரு   தத்துவப்பாட்டோட ,பாம்புக்கு பயப்படுறமாதிரி, லவ் சொல்ல வெக்கப்படுறமாதிரி, ஹீரோயின்க்கு முத்தம் கொடுக்க கூச்சப்படுறமாதிரி , எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி,அந்த கதாபாத்திரத்துக்கு இன்னோர் பக்கம் இருக்குறமாதிரி,பஞ்ச் வசனைகளோடலாம்  நடிச்சாதான் ரசிகர்கள்   விரும்புறாங்கனும்,தன்னைவச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடஞ்சுடக்கூடாதுனும் முடிவுபண்ணி நடிச்சுட்டாரு..

commercial , entertainment படம்னு  சொல்லி சொல்லி இத்தனை நாள் நாமதான் இவர்கிட்ட இப்படிப்பட்ட படங்களை எதிர்பாத்திக்கிட்டே இருந்தோம்..அதேசமயம் இப்படியே இன்னும் நடிச்சுக்கிட்டு இருக்காருனும் குறை சொல்லிக்கிட்டே இருந்தோம்..

எவ்ளோ வருஷத்துக்குமேல இப்போதான் பழையபடி தனக்குள்ள இருக்குற நடிப்பை இந்த படத்துல வெளில கொண்டுவந்துருக்கார்..மேக்கப் இல்லாம ,அவ்ளோ ஒரு அழகான நடிப்பு..சின்ன சின்ன கண் அசைவுகள் ஆகட்டும், மனைவியை தேடி அலையும் போது அந்த தவிப்பும் ஏக்கமுமாகட்டும் ,மனைவியை பாத்ததும் கண்ணுலையே வெளிப்படுத்துற அந்த காதலாகட்டும் எனக்கு ஜானி படம் நினைவுக்கு வந்தது..இந்த படம் ரஜினிகாந்த்னு ஒரு நடிகரோட நடிப்பு திறமையை வெளிப்படுத்துற படங்களின் லிஸ்ட்ல கண்டிப்பா இடம் பிடிக்கும்..

கலையரசனுக்கு மெட்ராஸ் படம் அளவுக்கு இதுல நடிக்க வாய்ப்பில்லைனாலும் தன்னோட potion -ஐ நல்லா பண்ணிருக்கார்.அது மாதிரியே ஜான் விஜய்,அட்டகத்தி தினேஷ்,திரு.நாசர்,கிஷோர் (எவ்ளோ தங்கம் உடம்புல) தன்னோட portion -ஐ நல்லா பண்ணிருக்காங்க.அதுலயும் அட்டகத்தி தினேஷ் body language சிரிப்பை வரவைக்குது..ராதிகா ஆப்தே  மற்றும் தன்ஷிகா ஆக்ட்டிங் செம .. பிற்பாதியில் கொஞ்சம் ரத்தம் அதிகமா காட்டியிருக்காங்க..

சந்தோஷ்நாராயணனோட இசையும் பின்னணி இசையும் நல்லா இருந்தது...நெருப்புடா நெருப்பு மாதிரி இருக்குனு சொன்னா , மாய நதி பாடலும், வானம் பார்த்தேன் பாடலும் அவ்வளவு இனிமை.அதுவும் அந்த  மாயநதி பாடல்ல ரஜினியோட expression அந்த வயசுக்கு உரிய அந்த matured love , WOW...

படத்தை நீங்களே போய் பாருங்க..மகிழ்ச்சியா ரசிங்க...

சிலவிஷயம் உங்களோடு

கபாலி படத்தோட டீஸர் எப்போ வந்ததோ அப்போ இருந்து எங்க பாத்தாலும் எதுல பாத்தாலும் எங்க கேட்டாலும் எதுல கேட்டாலும் கபாலி கபாலி  கபாலி-னு ஒரே கபாலி மேனியாவா இருந்தது..


எல்லா சமூக வலைத்தலளங்களும் கபாலி பத்தி ஏதாவது ஒரே செய்தியை தினம் தினம் வெளியிட்டுக்கிட்டே இருந்தாங்க..கோடிக்கணக்கான ரசிகர்கள் தினம் தினம் திரு.ரஜினியை பத்தி ஏதாவது ஒரு  செய்தி வெளியிட்டுக்கிட்டே இருந்தாங்க...ஒரு ஒரு நாளும் கபாலி பத்தி சுட சுட செய்தி வெளிவந்துக்கிட்டே இருந்தது. எல்லாத்துக்கும் மேல Air Asia விமானம் கபாலி பட போஸ்டர் ஒட்டி உலகத்தையே திரும்பி பாக்க வச்சாங்க.

ட்ரைலர்  மட்டும் 25 மில்லியன் வியூ -க்களை கடந்தது..உலகம் முழுக்க 30 நாடுகள்ல 10000 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்படுது  . கபாலி திரைப்படம் உலகத்திலேயே  மிகப்பெரிய திரையரங்கான பிரான்ஸ்ன் Le Grand  Rex -ல திரையிடப்படுற  முதல் தமிழ் படம்னு பெருமையை பெறப்போகுது ..US-ல மட்டும் 300 திரையரங்குகளுக்கு மேல திரையிடப்படுது ..டிக்கெட் புக்கிங் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல அதனை டிக்கெட்களும் வித்துடுச்சு.இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போறாங்க ...

இது எல்லாமே படம் வெளியாகுறத்துக்கு முன்னாடி ரசிகர்களோடு பல்ஸ் -ஐ எகிற வச்சது மட்டும் இல்லமா ஒட்டு மொத்த உலகத்தையும் யார் இந்த கபாலி-னு திரும்பி பாக்க வச்சது..

ஆனா படம் வெளியான முதல் நாளுளையே படம் சரியில்ல..படத்துல காமெடி இல்ல..இது ரஜினி படம் மாதிரி இல்ல..டைரக்டர் ரஞ்சித் சமூகத்தை பத்தி , தான்  சொல்லணும்னு நினைச்ச எல்லாத்தையும் ரஜினியின் வாயிலா சொல்லிருக்கார் அப்படி இப்படினு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் அள்ளிக்கிட்டு இருக்குறதும் இதே படம்தான்.


ஒரு விஷயம் புரியமாட்டேங்குது..இது எல்லாம் நிஜமாவே ரசிகர்கள் தான் சொல்றாங்களா?

நாங்க ஜாலியா ரெண்டு மணிநேரம் படம் பாத்து எங்க டென்ஷன் எல்லாத்தையும் மறக்கவரோம். காசு குடுத்து படம் பாக்குறோம். இங்கையும் வந்து படத்தை பாத்து டென்ஷன் ஆகி கதையை விட்டு வெளில வரமுடியுமா அதையே ரெண்டு நாள் நினைக்குறமாதிரி மனசுல ஆழமா பதிஞ்சுடுதுனு  நாம தான் சொல்றோம்.. சரினு commercial -ஆ படம் எடுத்தா என்ன படம் இது ?? கதையே இல்ல , 4 பாட்டு 3 சண்டைனு அங்க அங்க காமெடினு படம் போகுது .. படம் பாத்த உணர்வே இல்ல .மனசுல நிக்கல.நம்மாளுங்களுக்கு இப்போலாம் கதையை யோசிக்கவே தெரியலனும் நாமதான் சொல்றோம்.

ரஜினி எப்பப்பாரு commercial -ஆ நடிக்குறார்..அவரோட வயசுக்கு ஏத்த கதாப்பாத்திரத்தை தேர்வு செய்யமாட்றாரு.. இன்னும் ஹீரோயின்களோட மரத்தை சுத்தி டூயட் பாடிக்கிட்டே இருக்கார்.படங்கள் ஒரே மாதிரி இருக்கு , எப்பவும்போலவே  படத்துல காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார்னு ஏகப்பட்ட விமர்சனங்கள் சொன்னாங்க..சரினு ஒரு படத்துல டைரக்டர் சொல்றதை மட்டும் நடிச்சு தன்னோட வயசை அப்டியே வெளிப்படுத்தி மரத்தை சுத்தி  டூயட் பாடாம ஹீரோயினுக்கு முத்தம் குடுக்காமனு நடிச்சா இது தலைவர் படம் மாதிரி இல்ல ,காமெடி இல்ல, commercial -ஆ இல்ல, entertainment -ஆ இல்ல.. ஜாதி பத்தி,அரசியல் பத்தி,புரட்சி பேசுற வசனமா இருக்குனு சொல்றாங்க  ..

புதுசா வர டைரக்டர்களுக்கு வாய்ப்பை குடுக்கமாட்றார்  , safe -ஆ நடிச்சுக்கிறார்னு சொன்னாங்க  .சரினு ஒரு புது இயக்குனருக்கு வாய்ப்பை கொடுத்து  இது அவரோட கதை அவரோட படம்னு,  தன்னோட விருப்பத்தை படத்துல திணிக்காம எல்லாமே டைரக்டர் சொல்றதுதான்னு அவர் சொல்றமாதிரி நடிச்சுக்கொடுத்தா அதுக்கும் குறை சொல்றோம்..

ஒரு மனுஷனை எப்படித்தான் நடிக்கணும்னு எதிர்பாக்குறோம்?..அப்போ நாம கேட்ட மாதிரி commercial -ஆ entertainment  பண்ணின லிங்கா படத்தை ஏன் நல்லா ஓட வைக்கல??

ஒரு தயாரிப்பாளனுக்கு தான் காசு குடுத்து வாங்கின படத்தை நல்லா வசூல் ஆகவைக்கணும்னு நினைக்குறது என்ன தப்பு?? தன்னோட படத்தை அவர் எதுல வேணும்னாலும் விளம்பரம் பண்ண அவருக்கு உரிமை இருக்கு.. ஓரளவுக்கு பெயர் இருக்குற தயாரிப்பாளர்கள் கூட புதுமுக கதாபாத்திரங்கள் நடிச்சு, தான் வாங்கின படத்தையே 1000 தடவை டிவி-ல போட்டு விளம்பரம் படுத்துறாங்க.. ஒரு பெரிய தயாரிப்பாளர் தன்னோட படத்தை அதிகளவுல வசூலிக்க வைக்கணும் நிறையா பேருக்கு ரீச் ஆகணும்னு விளம்பரம் பண்றாங்க ..அவங்களால முடிஞ்சா ராக்கெட்ல கூட விளம்பரம் பண்ண அவங்களுக்கு உரிமை இருக்கு..உலக அளவுல ஒருத்தமிழ் படம் ரீச் ஆகியிருக்கு..நம்ம தமிழ் படங்கள் மேல ஒரு எதிர்பார்ப்பும் மரியாதையும் வந்திருக்குனு எடுத்துக்காம நாம என்னென்னவோ பேசிக்கிட்டு இருக்கோம்.

கதை கதைனு நாம நிஜமாவே எதை எதிர்பாக்குறோம்னு தெரியலையே..ரஜினி ரஜினினு  அவரோட படத்துல அவர்கிட்ட இருந்து நாம என்ன எதிர்பாக்குறோம்னு நமக்கு தெரியலையே.?!

ஆமா, என்னோட படத்தை முதல் நாளே முதல் ஷோவே பாத்தாகணும் நீங்கன்னு என்னைக்காவது எந்த நடிகராவது சொன்னாங்களா?ஆமா யாரு நம்மள ஒரு டிக்கெட்-ஐ 1000,2000,3000 கொடுத்து வாங்க சொன்னா?ஒரு நாளாவது  நாம குடுக்குற பணத்துக்கான விலையைத்தான் அந்த டிக்கெட்ல போட்ருக்காங்களானு பாத்துருக்கோமா??ஏன் அதிக விலை குடுத்து வாங்குறோம்?..ரசிகர்கள்னு நாம பண்றதுதானே அதுலாம்..டிக்கெட் விலை அதிகமா இருக்கு எங்களுக்கு வேணாம்னு நம்மால சொல்லமுடியலையே.. 1000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி அதுல 120 ரூபாய்னு போட்ருந்தா அதுக்கு என்ன அர்த்தம்னு நமக்கு தெரியாதா?120 ரூபாய்க்கான கணக்கை  தவிர மத்த பணத்துக்கான கணக்கை அவங்க காட்ட முடியாது அப்போ அது  கருப்பு பணமா அவங்களை போய்  சேருதுனு கூட நம்மால யோசிக்க முடியலையா??இதுல நம்ம மேல எந்த தப்புமே இல்லையா?? இதுக்கு நடிகர்கள் ஒன்னும் பண்ண முடியாதே..இதுக்கு  government தான் நடவடிக்கை எடுத்திருக்கனும்..திருட்டு VCD-ல பாக்கக் கூடாதுனு அந்த Site-யயே block பண்ணினாங்க இல்ல அதுமாதிரி இதையும் தடுத்திருக்கணும்..

ஓட்டு போட்டு நம்மள ஆட்சி செய்றவங்களை நாமதான் செலக்ட் பண்றோம் .. அப்போ அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தேவையானதை நல்லதை நமக்கு சேரவேண்டியதை சரியா செய்ய வேண்டியது அவங்களா? நடிகர்களா?இல்ல நடிகர்கள் மேல அளவு கடந்த அன்பை வச்சுட்டு அவங்க படத்தை திருவிழா மாதிரி கொண்டாடிட்டு cutout, பாலாபிஷேகம், தேனாபிஷேகம்னு செஞ்சுட்டு ,ஆயிரக்கணக்குல பணத்தை குடுத்து டிக்கெட் வாங்கிட்டு ,நாங்க இவ்ளோ செய்றோம்ல  அதுக்கு பதிலா நீ எங்களுக்கு இது செய்யணும் அது செய்யணும்னு எதிர்பாத்து கேக்குறது நமக்கே அசிங்கமா தெரியலையா?? நாட்டுல வெள்ளம் வந்தா, மழை பேஞ்சா, வெயில் அடிச்சா நமக்கான உதவியை அரசாங்கம்  நமக்கு செய்யணும்னு எதிர்பாக்காம நமக்கு பிடிச்ச நடிகர்கள் நடிகைகள் செய்யணும்னு எதிர்பாக்குறது நமக்கே முட்டாள் தனமா தெரியலையா?

ஒருத்தங்களை தூக்கிவச்சு பேசவேண்டியது அவங்ககிட்ட இருந்து ஏதாவது எதிர்பாக்குறது,எதிர்பாத்தது கிடைக்கலைனா அப்டியே தூக்கிப் போட்டு உடைக்கவேண்டியது.. இந்த நடிகர் நடிச்ச படம்னா நல்லா படம் ஓடும், நல்லா லாபம் பாக்கலாம்னு வாங்கவேண்டியது நம்பிக்கைவெச்சு , ஓடலைனா உடனே நஷ்ட ஈடு கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணவேண்டியது அசிங்கமா பேச வேண்டியது.. ஓடாத எல்லா படத்துக்கும் அப்படித்தான் நஷ்டஈடு கேக்குறாங்களா என்ன ?? சரி ரொம்ப நல்லா ஓடிச்சுனா அப்போ லாபத்துல ஒரு பங்க குடுக்குறாங்களா என்ன ??


நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்களா இருக்கலாம் வெறியர்களா இருக்குறது நம்மோட தப்பு .. சினிமாவுல அவங்க என்ன செஞ்சாலும் அதுதான் உண்மைனு நினைக்குறது நம்மோட தப்பு.நம்ம வீட்ல ஆகுற செலவுக்கு நாம தான் உழைக்கணும்னு நினைக்கமா யாரவது உதவி பண்ணுவாங்களானு எதிர்பாத்து இருக்குறது நம்மோட தப்பு.. நமக்கு தேவையானதை நாம தான் உழைச்சு சம்பாதிக்கணும் .. எவ்வளவு சம்பளம் வாங்குறார் அவர் நமக்கு என்ன செஞ்சார்னு ஏன் எதிர்பாக்குறோம்?? இந்த வயசுலயும் உழைச்சு சம்பாதிக்கிறார்...உங்களுக்கு இது செய்வோம் அது செய்வோம்னு சொல்லி பேசி நம்மள ஏமாத்தி நமக்கு உரிமையானதை நமக்கு சேரவேண்டியதை நமக்கு சேரவிடாம பண்ணலயே ..

அவர் தனக்கு நல்லா dance ஆடத்தெரியும்னு சொன்னதில்லை,அட்டகாகாசமா நடிக்கத்தெரியும்னு சொன்னதில்லை இருந்தும் , அவருக்கு இவ்ளோ கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்குறதுக்கு காரணம் அவரோட எளிமை, அவரோட குணம்.அதுக்கான மரியாதைதான் இது.

உழைக்காம எல்லாமே நமக்கு இலவசமா யாரா குடுத்தா  இல்ல கிடைச்சா நல்லா இருக்கும் நமக்கு  ..


உண்மையான அன்புக்குறது எதையும் எதிர்பாக்காம கொடுக்குறதுதான் ..அதுவே நமக்கு தெரியல ..



திங்கள், 25 ஜூலை, 2016

​பாடலின் வரிகள் - என் ஜீவன் - தெறி

படம் :தெறி  
பாடல் : என் ஜீவன்
பாடியவர்கள் : கௌசிக் ,பத்மலதா 
பாடலாசிரியர் :நா .முத்துக்குமார்   
இசை: G.V  பிரகாஷ்   



உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்து  சாகத்தோணுதே

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

திங்கள், 4 ஜூலை, 2016

விஜய் டி.வி - கோபிநாத் - நீயா நானா - 7

நேத்து விஜய்டிவியின் நீயா நானால பங்கேற்றவங்க , அதிகமா படிச்சு பட்டம் வாங்கினவங்க ஒரு பக்கம் , அதிகமா பயணங்கள் (அதாவது அதிகமா சுற்றுலாபோறவங்க ) செய்றவங்க ஒருபக்கம்.

கொஞ்சம் interest-ஆதான் இருந்தது..அதுலயும் ஒருத்தர் 140 degree வாங்கிருக்கேன்னு சொன்னப்பபோ அவரை 'God of Graduation' திரு.பார்த்திபன் -னு சொல்லணும்னே தோணிச்சு.


தான் சம்பாதிக்கும் பணம் முழுவதுமே அவரோட படிப்புக்கு செலவாகிடும்னு சொன்னார் இந்த அற்புத மனிதர்.

இவரை மாதிரியே இந்த பக்கம் பேசினவங்க எல்லாருமே குறஞ்சது  5 பட்டம் ,அதுக்கும் மேல மேல , வாங்கிருக்குறவங்க தான்.ஒரு ஒருஒருத்தரும் ஒரு field -ல மட்டும் படிக்காம பல field-ல படிச்சு பட்டம் வாங்கினவங்க..

எதிர்புறம் பேசினவங்கல ஒருத்தர் கேட்டார் , ஏன் இப்படி zig zag -கா படிக்குறீங்க.ஒரு field -ல படிக்காம இப்டி எல்லாத்தையும் படிக்குறீங்க தெளிவு இல்லாத மாதிரி இருக்கு இதுனு . என்ன கேட்டா , இதுல தப்பு எதுவும் இல்லையே..ஏன் ஒரே filed -ல தான் படிக்கணுமா என்ன ? வேற வேற field -ல படிக்கும் போது மத்த field பத்தியும் தெரிஞ்சுக்கமுடியுமே . ஒரே root ல தான் போகணுமா என்ன?அப்போ இங்க வேலை செஞ்சு சம்பாதிக்குறவங்க எல்லாருமே தான் படிச்ச fieldல மட்டும் தான் போயிட்டு வேலை செய்றாங்களா?.அப்டி தான் வேலை செஞ்சாகணும்னா பலபேர் வேலை இல்லாம / ரொம்ப குறைஞ்ச சம்பளத்துக்குத்தான் வேலை செஞ்சுக்கிட்டு இருப்பாங்க..இது அவங்க அவங்களோட ஆர்வம்..நிறைய படிக்கணும்னு passion இருக்கும் சில பேருக்கு..so படிக்குறாங்க.அவங்க விருப்பப்பட்டு தான் படிக்கிறாங்க.விருப்பம் இல்லாம யாராலயும் எந்த ஒரு செயலையும் செய்யமுடியாது இல்லையா.

வெள்ளி, 1 ஜூலை, 2016

பின்லாந்து‬ கல்விமுறை !!

உலகில் தலைசிறந்த கல்வியில் ‪#‎பின்லாந்து‬ முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது...

ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...

எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...

இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...