பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 24 ஆகஸ்ட், 2016

இந்த நாடும் நாட்டு மக்களும் ......... !!!


ரியோ-வில் நடந்த 2016-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில badminton-ல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவுல வெள்ளிப் பதக்கம் வென்றது நம்ம எல்லாருக்குமே தெரியும்..ரொம்ப சந்தோசம்..இந்தியாவுக்கே பெருமை .அவங்களுக்கு நம்மோட வாழ்த்துக்கள் .

ரெண்டு நாளுக்கு முன்னாடி நியூஸ்ல ஒன்னு பாத்தேன்..ஹைதாராபாத்ல பிறந்த சிந்து என்ன caste -னு கூகிள்-ல அதிகமா தேடப்பட்டுருக்குனு பாத்தப்போ நொந்தே போயிட்டேன்..ஆந்திராவை இரண்டு மாநிலங்களா பிரிச்சதால இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்னு ரெண்டு மாநிலத்தாரும் சண்டைப்போட்டுக்கிறதா கூட பாத்தேன்..

அடப்பாவிகளா !! யாராவது ஏதாவது சாதிச்சா அவங்க எந்த மொழி பேசுறவங்க , எந்த மாநிலத்துக்காரங்கனா பாப்பீங்க . இந்தியாவுக்கே பெருமை சேர்த்த ஒரு பொண்ணை இந்தியனா மட்டும் பாக்க மாட்டீங்களா? ஏதாவது ஒன்னு சாதிச்சுட்டா உடனே தமிழன்டா , தெலுங்கன்டா , மலையாளிடா , கன்னடக் காரன்டா , குஜராத்திக்காரன்டா , மராத்திக்காரன்டானு நமக்குள்ள எப்பையுமே வேறுபாடுதான் இருக்கே தவிர ஒற்றுமைனு ஒன்னு இல்லையே.

நமக்குள்ள இல்லாத இந்த ஒற்றுமையை வச்சுத்தான் அந்தகாலத்துல தொழில் செய்ய நாட்டுக்குள்ள வந்த வெள்ளைக்காரன்  மொத்தமா நம்மள அடிமையாக்கி வச்சுருந்தாங்க.இன்னமும் நாம அப்படியேதானே இருக்கோம்..

என்னமோ அந்த பொண்ணுக்கு உங்கபையனை கல்யாணம் பண்ணித்தரப் போற மாதிரி caste ஏன்யா செக் பண்ணிவச்சுருக்கீங்க?

இது ஒரு பக்கம்னா , வெள்ளிப்பதக்கம் வாங்கின சிந்து அவர்களுக்கு,சாக்க்ஷி அவர்களுக்கு இவ்வளவு பணம் தரோம், அவ்ளோ பணம் தரோம், கார் தரோம், அரசு வேலை தரோம்,வீடு தரோம், lifelong travel பண்ண இலவச டிக்கெட் தரோம்னு இவ்ளோ பண்றீங்களே ,ஜெயிச்சாதான் வசதி பண்ணித்தருவீங்க? ஜெயிக்க வசதி பண்ணி தரமாட்டீங்க..

இப்போ இவ்ளோ பணம் கொடுக்குற நீங்க விளையாட்டு துறையில சாதிக்க கூடியவங்க யாரு , திறமை இருந்தும் வெளில வரமுடியாதவங்க யாரு ,  வறுமையில் வாடுற எவ்ளோ பேர் திறமை இருந்தும் வசதி இல்லாத காரணத்தால முன்னேற முடியாம இருக்காங்க  அவங்களுக்கு  உதவி பண்ணி அவங்கள மேல கொண்டுவருவோம் , அவங்கள ஊக்கப் படுத்தி முன்னேற வச்சு விளையாட்டுல ஜெயிக்க வைப்போம்னு இதுலாம் செய்ய தோணல இல்ல உங்களுக்கு??!

சரி இன்னொரு விஷயத்துக்கு வருவோம் , இப்படி சில பல வருஷத்துக்கு முன்னாடி ஜெயிச்சு பரிசு எல்லாம் வாங்கி பெருமை சேர்த்த சிலரோட  இன்றைய நிலைமை எவ்வளவு மோசமா இருக்குனும் படிக்கிறோம்..  அவ்ளோதான் அப்பறம் அவங்கள கண்டுக்க மாட்டோம் .. ஜெயிச்ச அப்போ மட்டும் தான் அவங்களுக்கு இருக்குறது எல்லாம் கொடுத்து பெருமை படுத்துறோம்ங்குற பேர்ல நம்மள உசத்திக் காட்டிக்குறது.. தோத்தாலும் இல்ல அவங்க வயசானாலும்/retired ஆனாலும் அவங்கள்லாம் கண்டுக்க மாட்டோம்..  ஆனா அரசியல்வாதிங்க மட்டும் ஜெயிச்சாலும் ரொம்ப ரொம்ப வசதியா இருப்பாங்க தோத்தாலும் வசதியா இருப்பாங்க..அவங்கமட்டும் ஒருதரம் ஜெயிச்சுட்டா போதும் வாழ்நாள் முழுசும் இல்ல அடுத்த தலைமுறை வரைக்கும் வசதியா, நல்லா இருப்பாங்க ..
ஆனா இதுமாதிரி சாதிச்சவங்க அந்த சமயத்துல மட்டும் தான் lime light-ல இருப்பாங்க..அப்பறம் காணாப்போயிடுவாங்க.

எல்லாத்துலயும் அரசியல் , எல்லாத்துலயும் ஊழல் , இதுல ஒரு நாட்டுக்காரங்கனு  எண்ணம் கூட நமக்கு வராது .அப்பறம் எப்படி .....???!!!

அவங்க இப்படி இருக்குறதால நாம இப்டி இருக்கோமா? இல்ல நாம இப்படி இருக்குறதை அவங்க சரியா use பண்ணிக்குறாங்களானு தெரியல.. ஆனா கடைசியில நஷ்டம் நமக்குதான்னு மட்டும் நமக்கு புரியமாட்டேங்குது .. என்னத்த சொல்ல . ??!!!



இந்த நாடும் நாட்டு மக்களும் ......... !!!


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

2. Fried இட்லி



என்ன என்ன பொருட்கள் தேவை?

1. இட்லி
2. கடுகு
3. சீரகம்
4. உப்பு
5. கருவேப்பிலை
6. சாம்பார் பொடி
7. மிளகாய்ப்பொடி

எப்படி செய்யணும் ?

இட்லியை சின்ன சின்ன துண்டுகளா வெட்டி வச்சுக்கணும்..வாணல்ல எண்ணெய் ஊத்தி எண்ணை காஞ்சதும் கடுகு , சீரகம்,  கருவேப்பிலை  போட்டு தாளிக்கணும்.அடுத்து அதுல வெட்டி வச்ச இட்லியை போட்டு fry பண்ணனும்.அடுத்து அதுல தேவையான அளவு உப்பு , கொஞ்சம் சாம்பார் பொடி  , கொஞ்சம் மிளகாய் பொடி போட்டு நல்லா mix பண்ணனும்.இத அப்டியே  2 நிமிஷம்  வேகவைச்சு எடுத்து சூடா பரிமாறனும்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

1. பச்சை பட்டாணி தேங்காய் மசாலா




என்ன என்ன பொருள் வேணும் ?

1. எண்ணெய்
2. கடுகு
3. உளுந்து
4. இஞ்சி பூண்டு விழுது / இஞ்சி பூண்டு நசுக்கியது
5. தேங்காய்
6. பச்சை மிளகாய்
7. உப்பு

எப்படி செய்றது ?

பச்சை பட்டாணியை 3 மணிநேரம் நல்லா ஊறவச்சு , உப்பு சேர்த்து குக்கர்ல 3 அ 4 விசில் விட்டு வேகவைச்சு எடுத்துக்கணும்.

தேங்காய்,பச்சை மிளகாயை மிக்ஸியில போட்டு நல்லா விழுதாக்கிக்கணும்.

வாணல்ல கொஞ்சம் என்னை ஊத்தி ,எண்ணெய் காஞ்சதும் கடுகு ,உளுந்து போட்டு தாளிக்கணும்.அடுத்து அதுல இஞ்சி பூண்டு விழுது/நசுக்கியது போட்டு வதக்கனும்.  அரைச்ச தேங்காய்,பச்சை மிளகாய் விழுதை அதுல சேத்து நல்லா பச்சை வாசனை போகுறவரைக்கும் வதக்கனும்.
அடுத்து அதுல வேகவச்ச பச்சை பட்டாணியை சேத்து அந்த மசாலாக்கள் பட்டாணியில் நல்லா ஒண்ணா கலக்கவைக்கணும். ..கடைசியா கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி சூடா பரிமாறுங்க  ..

சத்தான ருசியான ரொம்ப சீக்கிரம் செய்யக்கூடிய ஒரு ரெசிபி மட்டும் இல்ல இது உங்களுக்கு பாராட்டையும் வாங்கித்தர ஒரு  ரெசிபி.





தமிழ் !!!





புதன், 10 ஆகஸ்ட், 2016

உலகிலேயே பிரமாண்டமான விமானம்!

 உக்ரேன் நட்டில் தயாரிக்காபட்ட 'Antonov An-225 Mriya', உலகெலேயே மிகப் பெரிய விமானம். ஆறு இயந்திரங்கள் கொண்ட இந்த விமானத்தின் எடை சுமார் 600 டன். இதன் இறக்கை, போயிங் 747 ரக விமானத்தைவிட இருமடங்கு பெரியது. 42 டயர்கள் கொண்ட இந்த விமானம் உக்ரேன் நாட்டில் இருந்து சுமார் 117 டன் எடைக்கொண்ட மின்சார ஜெனரேட்டர் ஒன்றை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு கொண்டுவந்துள்ளது.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

உலகின் மிகவும் குட்டி நாடு


இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த சீலேண்ட்  நாடு.
இரண்டாம் உலகப் போர் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் அல்லவா?

அப்படி அந்தப் போர் தொடங்கியபோது 1942-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கடலில் குட்டித் துறைமுகத்தைக் கட்டியது.
கடலில் இரும்பு மற்றும் வலுவான கான்கிரீட்டைப் பயன்படுத்தி இந்த துறைமுகத்தைக் கட்டியிருக்கிறார்கள்.
போரில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் போடுவதற்காக இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
போர் முடிவடைந்த பிறகும் 1956-ம் ஆண்டு வரை ரப் டவர் எனப் பெயரிட்டு இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பின்னர் இந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.
1967-ம் ஆண்டில் இந்த இடத்துக்கு பேட்டி ராய் பேட்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இந்தத் துறைமுகத்துக்குப் போய்த் தங்கிவிட்டார். இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர்.
இங்கு வந்த பேட்ஸ், ‘பிரின்ஸிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்’ என்று அந்த இடத்துக்குப் பெயரை வைத்தார். அங்கிருந்து ராய் பேட்ஸை அனுப்பப் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிறைய முயற்சி செய்தார்கள். ஆனால், அவரை அங்கிருந்து அனுப்ப முடியவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால், இந்தத் துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

இதன்பிறகு ராய் பேட்ஸ் 1975-ம் ஆண்டில் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார். இந்த நாட்டுக்கென்று தனியாகக் கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.


கடலுக்குள்ள ஒரு குட்டி கட்டிடத்தில்தான் இந்த நாடே இருக்கிறது.

ஒரு முறை பேட்ஸூம் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்குப் போனபோது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள்.

பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளையர்களை விரட்டினார்கள். 1987-ம் வருடத்தில் பிரிட்டிஷ் அரசு கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை அவர்களுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனாலும் முடியவில்லை.

சீலேண்டின் இளவரசராக ராய் பேட்ஸ் செயல்பட்டு நிர்வாகமும் செய்து வந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு பேட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அப்போது முதல் சீலேண்ட் நாட்டின் இளவரசராகப் பேட்ஸின் மகன் மைக்கேல் இருந்து வருகிறார்.



தற்போது இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் குட்டிக் கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள். ஞாபகச் சின்னங்கள் போன்றவற்றை இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்துக்கொண்டுதான் வர வேண்டும்.